Jump to content

சம்பந்தருடன் இணைந்து போர்க்குற்றத்தை என்மீதும் படையினர் மீதும் திருப்பிவிட ரணில் முயல்கிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
February 13, 2019

Mahinda-Rajapaksa.jpg?zoom=1.44000005722

 

 

ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கூடடத் தொடரில் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
 
இந்தியா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்றத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி வரலாற்றுத் துரோகம் செய்துள்ளதாகவும் இதன்போதும் மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.
 
அத்துடன், இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கும் ரணில் தரப்பினர் வெட்கமின்றி ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் கொழும்பில் தங்கியிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது நிகழ்ச்சி நிரலை அவர்களிடம் கையளித்துள்ளதாகவும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச, இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ரணில் தலைமையிலான அரசு மௌனம் காப்பதாகவும், போர்க்குற்றத்தை தம்மீதும், இராணுவம்மீதும் திருப்பிவிட்டு, தப்பித்துக் கொள்வதே ரணில் அரசின் முயற்சி என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, தாம் ஐ.நா தீர்மானங்களை கண்டு அஞ்சப் போவதில்லை என்றும் அதனை இலங்கையில் நடைமுறைத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெங்களுர் நகரில், இந்திய ஆங்கில பத்திரிகை ஒன்றின் மாநாட்டில் பங்கு பற்றச் சென்றிருந்த, மகிந்த ராஜபக்ச இன்று மதியம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/113102/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தவறு செய்யேல என்றால் ஏன் ஐயா பதறுகின்றீர்கள்?!

த.தே.கூட்டமைப்பையும் தமிழரசுக்கட்சியையும் மறைமுகமாக பலப்படுத்துகிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அதிமுக ,காங்கிரஸ் பிசேப்பி, ஐக்கிய தேசிய கட்சி சுதந்திரா கட்சி , அமெரிக்கா ரஷ்யா .. 

" நீ என்னோடு இல்லையென்றால் அவனோடுதான் நிற்கிறாய் "  

 சீனியர் யார்ஜ் புஷ் 1991 ஈராக் யுத்தத்தின் போது சொன்னது

இரு துருவ அரசியல் குறித்தான அடிப்படை / ஆய்வு கட்டுரை எங்காவது கிடைக்குமா .. ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிழம்பு said:

இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

சம்பந்தன்........?  உங்களுக்கு  பகிடி கூடிப்பாேச்சுது. அவர் தன்னட்டை பறிச்ச கதிரையை திருப்பி தரச்சாெல்லித்தான் அழுத்தம் குடுப்பார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.