Jump to content

விக்கியின் கனவு வீணாகிப் போகுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியின் கனவு வீணாகிப் போகுமா?

Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 01:05 Comments - 0

-க. அகரன்  

மாற்றுக்கருத்து என்ற சொல்லால் தமிழர் அரசியல் களம் நீண்ட காலமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது.   
அந்தவகையில், ‘மாற்றுக்கருத்து’ என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்கும் ஒருசாராருக்கு எதிராக, அந்தக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களால், பிடிப்பற்றவர்களால் புதியதொரு கொள்கையில் நம்பிக்கை வைத்து, அவ்வழியில் முன்னெடுக்கப்படும் பயணம், பிரசாரப்படுத்தப்படும் கொள்கைகள், மாற்றுக்கருத்து அல்லது மாற்றுக்கொள்கை என வரையறுத்து ஆராயப்படலாம்.   

இதற்கும் அப்பால், குறித்த மாற்றுக்கருத்தை கொண்டு நகரும் தலைமைகளை, மாற்றுத்தலைமைகள் எனப் பொருள்கோடல் கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் பழகிப்போன சொல்லாடலாகும்.  

தமிழ்த்தேசிய அரசியல் களம் உருவாகிய காலத்தில் இருந்து, அது ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்த பின்னரும், மாற்று கொள்கையுடையோர், மாற்று இயக்கங்கள் என்ற பொருள்கோடலுடன் கட்டுண்டு பயணித்தவர்களே தமிழ் மக்கள். எனினும் தற்கால அரசியல் இயங்கு தளத்தில், மாற்றுக்கருத்துள்ளோர் யார், அதற்குத் தலைமை தாங்குவோர் யார் என்ற கேள்விகள் பலமானதாகவே உள்ளது.  

ஏனெனில், அண்மைய நாள்களாக மாற்று தலைமையின் உருவாக்கம் அவசியம் என்ற கருத்தியலும் மாற்றுத்தலைமை உருவகம் பெற்றுள்ளதான விடயங்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

அவ்வாறெனில், அந்த மாற்றுத்தலைமை என அடையாளப்படுத்தக் கூடிய நிலையில் உள்வர்கள் யார்? அவர்களது கொள்கை முன்னெடுப்புகள் என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக, தமிழ் மக்களின் உரிமை தொடர்பான விடயத்தை வென்றெடுக்கும் நோக்கோடும் கொள்கைப் பிடிப்போடும் பயணிக்கும் அரசியல் கட்சியாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையை பார்க்க முடிகின்றது.   

ஏனெனில், கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், எந்தத் தளத்தில், பாதையில் பயணிக்கின்றோம் என்ற தடுமாற்றத்தில் தள்ளாடுகின்றது. அதன் அரசியல் தீர்வுக் கொள்கையைப் பொறுத்த மட்டில், மத்தியில் சமஷ்டியா, ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வா என்ற நிலைப்பாட்டைத் தமக்கு இசைவான விதத்தில், ‘வார்த்தை ஜாலங்களால்’ வெளிப்படுத்தி வருகின்றனர். இது, ‘திருவிழாக்காலத்தில் குழல் ஊதி வியாபாரம் செய்யும்’ நிலைப்பாட்டுக்கு ஒப்பானதாகவே பார்க்கப்படுகின்றது.  

இந்நிலையிலேயே, தமக்கென ஒரு கொள்கையை கொண்டு பயணிக்கத் தலைப்படுபவர்கள் அனைவரும், தம்மை மாற்றுத்தலைமை என்ற பத்திக்குள் அடையாளப்படுத்துகிறார்கள். இந்த நிலைமையானது, தமிழர்களது அரசியல் இருப்பைச் சிதைக்க முயல்வதாகவே சிந்திக்கத் தோன்றுகின்றது.  

தமிழர் அரசியல் தளத்தில், அரசியல் நகர்வை முன்னெடுக்கும் பல கட்சிகளுக்கு மத்தியில், ‘ஒரு நாடு; இரு தேசம்’ என்ற வேறுபட்ட கொள்கையை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொண்டு பயணிக்கின்றது.   

இது வெல்லக்கூடியதா, சாத்தியமான நிலைப்பாடா என்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும். ‘வேட்டி அவிழும்போது, அதைச் சரிசெய்ய முற்படும்போது,  உள்ளாடையையும் பறிகொடுப்பது’ போன்ற, ஆபத்தான படுகுழிகள் இந்தப் பாதையில் இருப்பதையும்  அதில் பயணிப்பவர்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை மாற்றுத்தலைமை, மாற்றுக்கொள்கை என்று வகைப்படுத்திக்கொள்ள முடிகின்றது.   

இவற்றுக்கும் அப்பால், முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனித்து அரசியல் போட்டிக்களத்தில் குதித்துள்ளார்.   

image_a905a95039.jpg

 

அரசியல் செயற்பாடு என்பது, கீழ் மட்டத்திலும் இறங்கிச் செயலாற்றும் தன்மைகொண்ட தலைமைத்துவத்துடன் கூடியதாக அமைய வேண்டிய தேவை உள்ள நிலையில், வெறுமனே அறிக்கை அரசியலில் காலத்தை கடத்தும் பண்பு, தமிழ் அரசியலாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. மக்கள் முன், முகம்கொடுக்க அச்சம் கொள்ளும் நிலைப்பாடே, இதற்குக் காரணமாக இருகின்ற போதிலும் கூட, அதை மாற்றியமைத்துப் பயணிக்க கூடிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.   

முன்னாள் முதலமைச்சர், என்ற ஸ்தானத்தில் இருந்து பயணித்த விக்னேஸ்வரன், உள்ளூரில் மட்டுமல்ல இராஜதந்திரிகள் மட்டத்திலும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் அரசியல்வாதியாகவே பார்க்கப்பட்டார்.   

எனினும், முதலமைச்சர் என்ற பதவிக்கு முன்பாக, ‘முன்னாள்’ என்ற அடைமொழி இணைக்கப்பட்டதும் ஒரு சிலரின் அரசியல் ஆசைகளுக்காகப் கட்சியொன்றை உருவாக்கியதும் அவரையும் சாதாரண அரசியல்வாதியாகவே அடையாளம் காட்டியுள்ளது.  

புதிய கட்சி உருவாக்கிய பின்னர் என்றாலும், மக்களுடனான அரசியலை அவர் இன்னும் ஆரம்பிக்கவில்லை. வெறுமனே முதலமைச்சராகத் தான் இருக்கும்போது, செயற்பட்ட விதத்திலான அறிக்கை அரசியலையே இற்றைவரை பயன்படுத்தி வருகின்றமையானது, அவர் மத்தியில் இருந்த மக்கள் செல்வாக்கின் தற்போதைய நிலைகுறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாணசபைக் காலத்தில் எவ்வாறு ஒரு சரிவுப் பாதைக்கு சென்று, அதில் இருந்து மீண்டுவரக் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததோ, அதேபோன்றதான போக்குநிலையில் முன்னாள் முதலமைச்சரின், தமிழ் மக்கள் கூட்டணியும் சென்றுகொண்டிருக்கின்றது.  

தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி, மாற்றுத் தலைமையின் தேவைகருதியோ, தமிழ் மக்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாத நிலையில் அதைத் தாங்கிப் பிடிப்பதற்காகவோ உருவாக்கப்பட்டது என்று கருதப்படுமாக இருந்தால், தற்போதைய இதன் போக்கு, நகைப்புக்குரியதாகவே உள்ளது. 

தமிழ் மக்களது அரசியல் தளத்தில், உரிமைகளை மீட்கப் புறப்பட்டதாகப் பல கட்சிகளும் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாக இன்னும் சில கட்சிகளும் வலம்வரும் நிலையில், அரசியலில் கத்துக்குட்டியான விக்னேஸ்வரனால் இவற்றுக்கு ஈடுகொடுத்து, அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியுமாக இருக்குமா என்பது, எல்லோர் மனத்திலும் எழும் கேள்வியே.   

அவர் மீதான மரியாதையும் அவரது ஆழுமையும் அவர் விடாப்பிடியாக தமிழர் தொடர்பான கோரிக்கைகளைத் தொடர்ந்து துணிச்சலுடன் முன்வைக்கும் பாங்கும் தமிழ் மக்களுக்கு ஆறுதல்தரும், உணர்வுரீதியான கருத்துகளாக இருந்தாலும் கூட, அது தனித்த அரசியலுக்கு ஏற்புடையதா என்பதை, அவர், பலதடைவைகள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டிய தேவை இருந்துள்ளது.  

தமிழ் மக்கள் கூட்டணி என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்காகவும் அதன் அதிருப்தியாளர்களுக்காகவும் அவர்களின் ஊசுப்பேற்றல்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதான கருத்து, மக்கள் மத்தியில் உலாவருவதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களுக்கான அரசியலை முன்நகர்த்திச் செல்வதற்கான விம்பம், அங்கு உருவாக்கப்பட்டு இருக்குமாயிருந்தால், அக்கட்சி யாழ்ப்பாணம் என்ற குறுகிய வட்டத்தில் பயணிக்க தலைப்பட்டிருக்காது.   

அதுமட்டுமன்றி, மக்கள் போராட்டங்களில் தம்மை அடையாளப்படுத்த விரும்பியிருக்கும். எனினும், இதுவரை மக்கள் போராட்டங்களில், ஏதுவான செயற்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தாமை, மக்கள் மத்தியில் உலாவரும் கருத்தை, நிதர்சனமாக்கி வருகின்றது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பயணிக்கும் பாதையின் தூரத்தையோ, அதன் சாத்தியப்பாட்டையோ தெளிவு படுத்த முற்படாத நிலையில், தமிழ் மக்கள் மத்தியில், புதிய அரசியல் கட்சிகள் தோற்றம்பெறுவதைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையொன்றும் ஏற்பட்டுவிடுகிறது.   

ஆனால், அது யாழ். மாவட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தாத பட்சத்திலும் வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் வல்லமையைக் கொண்டது. குறிப்பாக, பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில், அதன் தாக்கம் பலமானதாக இருக்கும்.   

எனவே, மாற்று அரசியல், மாற்றுத்தலைமை என்ற வகிபாகத்தைத் தமிழ்த் தலைமைகள் தமக்குச் சூட்டுகின்றபோது, தாம் எவ்வாறான கொள்கை முன்னெடுப்புகளைக் கொண்டுள்ளோம் என்பது தொடர்பில், தெளிவுபடுத்தல்களையும் மக்கள் சந்திப்புகளையும் நடத்தியிருக்க வேண்டும்.   

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியில் வந்ததன் பின்னர், தாம் பயணிப்பதற்கு ஆளுமையுள்ள தலைமையொன்றின் தேடலை நடத்திக்கொண்டிருந்தபோது, அதில் சிக்கிக்கொண்ட விக்கினேஸ்வரன், அதைப் பெரும் பிம்பமாகக் கண்டு, உருவாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணி என்ற தளம், அடுத்துவரும் தேர்தல்களின் போது, கடும் சவால்களைக் காணும்போது, விக்னேஸ்வரனின் கனவு வீணாகிப் போனாலும் ஆச்சரியப்படவோ அது தொடர்பில் விசனப்பட்டுக் கொள்ளவோ பெரியதாக எதுவும் இருக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கியின்-கனவு-வீணாகிப்-போகுமா/91-229555

 

Link to comment
Share on other sites

Quote

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாணசபைக் காலத்தில் எவ்வாறு ஒரு சரிவுப் பாதைக்கு சென்று, அதில் இருந்து மீண்டுவரக் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததோ, அதேபோன்றதான போக்குநிலையில் முன்னாள் முதலமைச்சரின், தமிழ் மக்கள் கூட்டணியும் சென்றுகொண்டிருக்கின்றது.  

இதற்கான கருத்துக்கணிப்பு நடாத்தப்பட்டதா?  

Quote

தமிழ் மக்கள் கூட்டணி என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்காகவும் அதன் அதிருப்தியாளர்களுக்காகவும் அவர்களின் ஊசுப்பேற்றல்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதான கருத்து, மக்கள் மத்தியில் உலாவருவதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களுக்கான அரசியலை முன்நகர்த்திச் செல்வதற்கான விம்பம், அங்கு உருவாக்கப்பட்டு இருக்குமாயிருந்தால், அக்கட்சி யாழ்ப்பாணம் என்ற குறுகிய வட்டத்தில் பயணிக்க தலைப்பட்டிருக்காது.   

இப்ப தான் கட்சியே தொடங்கி உள்ளார். அதற்குள் வடக்கு கிழக்கு வன்னி என  பரவ வேண்டும் என்பது அதிக பிரசங்கி தனம். ஆனாப்பட்ட  டக்ளசின் கட்சி பன்னெடுங்காலமாக இருந்தும் கிழக்கின் பக்கம்  எவ்வளவு செல்வாக்குடன் உள்ளார் என கட்டுரையாளர் ஒப்பிட தவறியுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.