Jump to content

டிக் டாக் தடை சாத்தியமா? என்ன சொல்கிறது அந்த நிறுவனம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ்
  •  
Tik Tokபடத்தின் காப்புரிமை Getty Images

கட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில்தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.

சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்கிறார். முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும் என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன்.

''சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருக்கிறார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறாக கூறினார் மணிகண்டன்.

"டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும்," என்று அன்சாரி கோரிக்கை வைத்ததை அடுத்து அமைச்சர் மணிகண்டன் இவ்வாறு கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு பா.ம.க நிறுவனர் ராமதாஸும் டிக் டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். டிக் டாக் செயலி இளைஞர்களை கெடுப்பதாகவும், கலாசார சீர்கேட்டிற்கு வித்திடுவதாகவும் அவர் கூறி இருந்தார்.

அமைச்சரின் இந்த முடிவினை பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜனும் வரவேற்று இருந்தார்.

தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களும் டிக் டாக் செயலியால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டுமென்றும் குரல்கள் ஒலிக்கின்றன.

சரி. இது போன்ற செயலிகளை தடை செய்வது சாத்தியமா? சாத்தியமென்றால் யாரை அணுக வேண்டும்?

இதற்கான பதிலை காண்பதற்கு முன், டிக் டாக் தடை செய்யப்பட வேணும் என்ற கோரிக்கை குறித்து பெண்ணிய செயற்பாட்டாளர்களும், டிக் டாக் பிரபலங்களும் என்ன நினைக்கிறார்கள்?

வளர்ச்சிக்கு உதவுகிறது டிக்டாக்

வைஷ்ணவி ராஜசேகர்படத்தின் காப்புரிமை vaishnavi_rajasekaran Image caption வைஷ்ணவி ராஜசேகர்

டிக் டாக் பிரபலமான வைஷ்ணவி ராஜசேகர், டிக் டாக்கை தடை செய்வதால் எந்த பலனும் இல்லை என்கிறார்.

கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது vaishnavi_rajasekaran

முடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது vaishnavi_rajasekaran

<div class="embed-image-wrap" style="max-width: 599px"> <a href="https://www.instagram.com/p/BtQFN7sh2ah/"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="இன்ஸ்டாகிராம் இவரது பதிவு vaishnavi_rajasekaran: PLEASE MADAM 🥺 #vadivelu #comedy #vaishnavirajasekaran #fun #tamildubsmash #tamilmusicaly #tiktok #callfortamil #wednesday" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.instagram.com/p/BtQFN7sh2ah/~/tamil/science-47223448" width="599" height="941"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை vaishnavi_rajasekaran</span> <span class="story-image-copyright" aria-hidden="true">vaishnavi_rajasekaran</span> </span> </figure> </a> </div>

"முறையாக பயன்படுத்தினால் டிக் டாக் மூலமாக நாம் வளர முடியும். என்னுடைய வளர்ச்சிக்கு டிக் டாக் பயன்பட்டிருக்கிறது. சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். மோசமான வீடியோக்களை பகிர்கிறார்கள் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். அதற்காக முழுமையாக தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை," என்கிறார்.

டிக் டாக் மூலமாக தனது நடனத் திறமையை வெளிபடுத்தி ரஜினிகாந்திடமிருந்து பாராட்டுகளை பெற்ற மஞ்சுவின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது.

அவர், "திறமைகளை வெளிப்படுத்த சரியான தலம் இது. பயனர்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், டிக் டாக் நிறுவனமும் சில கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும். மோசமான காணொளிகளை பதிவேற்ற செய்ய முடியாத படி செய்ய வேண்டும்," என்கிறார்.

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அதிகளவில் டிக் டாக்கை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எஃப்.எம் ஆர்.ஜேவான ஸ்டீஃபனும் அதில் ஒருவர்.

பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டீஃபன், "திறமைகளை வெளிப்படுத்த தகுந்த நல்ல மேடைதான் டிக் டாக். ஆனால், அதை பயன்படுத்த அதிகளவில் சுயக்கட்டுபாடு தேவை. இதில் என்ன பிரச்சனை என்றால் சுயகட்டுப்பாட்டை தகர்க்கும் விஷயங்கள் அதிகளவில் டிக் டாக்கில் உலவுவதுதான். அதுவொரு போதை," என்கிறார்.

எஃப்.எம் ஆர்.ஜேவான ஸ்டீஃபன்படத்தின் காப்புரிமை Stephan

"டிக்டாக்கை முடக்க முயலும் அரசின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், அதே நேரம் இந்த செயலி முடக்கப்பட்டால், இன்னொரு செயலி வரும்," என்கிறார்.

தடை செய்யப்பட வேண்டுமா?

செயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், "எந்த செயலிகளையும் அரசு தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஆனால், இந்த டிக் டாக் விஷயத்தில் நிலைமை எல்லை மீறி போய் விட்டதாகவே நான் நினைக்கிறேன். அது தடை செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடுதான்," என்கிறார்.

ஷாலின் மரியா லாரன்ஸ்படத்தின் காப்புரிமை Facebook Image caption ஷாலின் மரியா லாரன்ஸ்

மேலும் அவர், "கலாசாரம் கெட்டுவிட்டது என்ற பார்வையில் நான் இதனை அணுகவில்லை. கருத்து சுதந்திரம் அனைவருக்குமானது. இதைத்தான் செய்ய வேண்டும். இதனை செய்யக் கூடாது என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், கவனத்தை ஈர்க்க டிக் டாக் மூலமாக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிட்டார்கள். அதுதான் பதற்றமடைய செய்கிறது," என்கிறார்.

சமூக ஊடகத்திற்கென உத்தி வகுக்கும் விளம்பர நிறுவனத்தை நடத்தி வரும் சோனியா அருண்குமார் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.

சோனியா அருண்குமார், "பெண்கள் நடனம் ஆடுவது, பெண்கள் தங்களை முன்னிறுத்துவது, அதன் மூலமாக பிரபலமடைவதுதான், இவர்களுக்கு உறுத்துகிறது. அதன் வெளிப்பாடுதான் இவ்வாறாக தடை கோருவது எல்லாம்," என்கிறார்.

சோனியா அருண்குமார்படத்தின் காப்புரிமை Facebook Image caption சோனியா அருண்குமார்

பெண்களுக்கு இணையவெளியில் எந்த பாதுகாப்பும் இல்லை. இங்கே அவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள். மோசமான கிண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். அது குறித்து புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சூழல் இப்படி இருக்கும்போது டிக் டாக்கை மட்டும் தடை செய்ய சொல்லுவது ஏன்?

இதனையெல்லாம் கடத்து டிக் டாக் போன்ற செயலிகளை தடை செய்யவெல்லாம் முடியாது. ஒரு செயலி முடக்கப்பட்டால் இன்னொரு செயலி ஆப் ஸ்டோருக்கு வரும்," என்கிறார்.

டிக் டாக் பயன்படுத்தும் பெண்கள் டிக் டாக் தங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறுகிறார்கள்.

சாத்தியமா?

எல்லோரும் சுட்டிக்காட்டும் விஷயம் இதுதான். டிக் டாக்கை முடக்கலாம். ஆனால், அது போல நூறு செயலிகள் ஆப் ஸ்டோருக்கு வரும் என்பதுதான்.

என். வெங்கட்

இது தொடர்பாக மென்பொறியாளர் என்.வெங்கட், "இணையம் மூலமாக செயல்படும் செயலிகளை அரசாங்கம் நினைத்தால் சுலபமாக முடக்க முடியும். ட்ராய் அமைப்பு இருக்கிறது. அவர்கள் இணைய சேவை அமைப்பிற்கு சில கட்டளைகளை பிறப்பித்தால்போதும். ஆனால், இணையம் தேவைப்படாத செயலிகளுக்கு பைரடெட் வெர்ஷன் கிடைக்கும். அதனால் அதை முடக்குவது சாத்தியமில்லாதது," என்கிறார்.

மீண்டும் மீண்டும் வேறு செயலிகள் வந்தால் என்ன செய்வது? என்ற நம் கேள்விக்கு. அதனை ட்ராய்தான் கண்காணிக்க வேண்டும். ட்ராயினால் இது முடியும். ஆனால், அதே நேரம் ட்ராய் கண்காணிக்க முடியாதபடி வி.பி.என் (Virtual Private Network) பயன்படுத்தி செயலிகளை இயக்கினால் எதுவும் செய்ய முடியாது," என்கிறார்.

டிக் டாக் நிறுவனம் என்ன சொல்கிறது?

அந்நிறுவனத்தின் சார்பாக பேசிய பூமிகா அவஸ்தி, "பயனாளிகள் டிக் டாக்கை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தாங்கள் உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்றார்.

மின்னஞ்சல் மூலம் சில விளக்கங்களை அவர் அளித்தார்.

Tik Tokபடத்தின் காப்புரிமை Getty Images

"டிக் டாக் விதிகளை மீறுவது போல் யாரேனும் பயன்படுத்தினால், அதுதொடர்பாக சுலபமாக புகார் செய்வதற்கு ஏதுவாக நாங்கள் செயலியை வடிவமைத்துள்ளோம். உள்ளூர் சட்ட திட்டங்களையும் நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க உள்ளோம்," என்று அந்த மின்னஞ்சல் விவரிக்கிறது.

மேலும் பூமிகா, "இணையத்தை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பிரசாரங்களையும் மேற்கொண்டுவருகிறோம். இணைய பாதுகாப்பு தினமான பிப்ரவரி 5ஆம் தேதி #SafeHumSafeInternet என்ற தலைப்பில் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். 'சைபர் பீஸ் ஃபவுண்டேஷன்' என்ற அரசுசாரா அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/science-47223448

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.