Jump to content

‘வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும்’ என்பதே மக்களின் நிலைப்பாடு – பிரபாகணேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும்’ என்பதே மக்களின் நிலைப்பாடு – பிரபாகணேசன்

prabakanesan.jpg

தாம் வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கேப்பாபுலவு மக்கள் இருப்பதாக ஜனநாயக மக்கள் காங்கிராஸ் தலைவரும் ஜனாதிபதியின் வன்னிக்கான கருத்திட்ட பணிப்பாளருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

சொந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி 714 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கேப்பாபுலவு மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு சென்று மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை மற்றும் படையினிரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டதாக கூறினார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான காணிகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் பிரபாகணேசன் கூறியுள்ளார்.

 

http://athavannews.com/வாழ்ந்த-இடத்திலேயே-இறுத/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.