Jump to content

புழுகன் அரிச்சந்திரன் நகைச்சுவை நாடகம் பாகம் ஒன்று


Recommended Posts

நாடகத்திற்கு பதிலாக வீராவின் நிலவரம் நிகழ்ச்சி போகின்றதே? :lol: பிழையான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

உண்மைதான் புலம்பெயர் நாடுகளில் நாங்கள் வீடுகள் வேண்டுவது பலருக்கு கண்ணுக்கை குத்தும்தான், இதற்காகவே இரண்டுவருடங்களுக்கு முன் நான் எனது வீட்டுக்கு சில மாற்றங்களை செய்தேன் அதைப்போல் நீங்களும் செய்து பாருங்களேன்.

நான்கு வருடங்களுக்கு முன் தாயகத்தில் இருந்த எனது தந்தையின் சொத்தான அரிசிமில்லை விற்று அந்தபணத்தில் இங்கு புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்கினேன்.(மில் வித்தகாசுக்கு கனடாவில் இருக்கும் தம்பியுடன் பங்கு பிரைச்சனை வேறை இருக்கு) இரண்டு வருடங்களாக எங்கள் தமிழ் ஆக்களின் கண்ணூறாலை நான் இரவில் நித்திரையே கொள்ளமுடியவில்லை, அதன் பின் ஒரு முடிவுக்கு வந்த நான் 30 கிலோ மஞ்சள்(தாலியாக பாவிக்கும் மஞ்சள்) வாங்கி அரைத்து வீட்டின் வெளி சுவர் முழுவதும் பெயிற் போல் அடித்தேன். அதன் பின் பாவித்த பற்றறிகளை உடைத்து அதன் உள்பகுதியில் இருக்கும் கறுப்புகலரை எடுத்து வீட்டின் நிலமட்டத்தில் இருந்து ஒரு ஆள் உயரத்துக்கு வீட்டை சுற்றி பற்றரி கலரை அடித்தேன். பற்றி கலரை ஆள் உயரத்துக்கு ஏன் அடித்தேன் என்றால் பேய் பிசாசு நிலத்தில் இருந்து கறுப்புகலரில் ஏறமுடியாது என்பதற்காக.

அடுத்து எனது பென்ஸ் காருக்கு நாவுற்றை துடைப்பதற்காக, காரை சுவருடன் முட்டி மக்காட் பகுதியை சிறு சேதாமாக்கிவிட்டேன். (சுவருடன் முட்டும் போது வெறியில் முட்டுவதாயின் லைற்றை உடைக்க கூடாது. லைற் புதிதாக மாற்றுவதாயின் 90 யூரோ கொடுத்து வாங்க வேண்டும்) இந்த மாற்றங்கள் செய்தபின் எனது பென்ஸ்காரோ, அல்லது வீடோ கடந்த இரண்டு வருடங்களாக கண்ணூறு இல்லாமல் இருக்கின்றது. இதில் நான் குறிப்பிட்டது தமிழ் மக்களின் கண்ணூருக்காக மட்டுமே.

வெற்றுநாட்டவரின் கண்ணூற்றை தடுப்பதற்கு வீட்டின் முன் பகுதியில் சற்றலைற் சட்டி ஒன்றை பூட்டி அதன் உள்பகுதியில் "TAMIL" என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டால் வெற்றுநாட்டவரின் கண்ணூறும் இல்லாமல் போய்விடும்.

வீட்டிலை அலுமாரிக்கை வைச்சு தண்ணி அடிக்கிறவை அப்படியே தொடரவும். இல்லையேல் என்னைப்போல் கண்ட இடத்திலும் தண்ணி அடித்துவிட்டு காரை பிரட்டிப்போட்டு அப்படியே விட்டுவிட்டு நாலு கிலோமீற்றர் ஓடி வீட்டை வர அடிச்ச தண்ணியின் வெறியும் முறிஞ்சுட்டுது.

இலவசமாக இதுபோல் கணக்க அற்வைஸ் என்னட்டை இருக்கு உங்களுக்கு தேவைப்படும் போது என்னிடம் தொடர்பு கொள்ளவும்

Link to comment
Share on other sites

நல்ல அட்வைஸ் யாரையோ கடிகிறமாதிரி இருக்குது அபி

நல்லாயிருந்தது சாத்திரி அண்ணா என் நண்பர்கள் பலரும் விரும்பி கேட்டனர்

Link to comment
Share on other sites

நானும் கேட்டேன், நன்றாக இருந்தது....

செல்போன் சாமத்தில் அடிப்பது போல் ஊளையிட்டு சவுண்ட் கொடுப்பது யார்? அதைக்கேட்க நல்ல பகிடியாக இருந்தது :lol:

Link to comment
Share on other sites

கனடாவின் தமிழ் தொலைக் காட்சி ஒன்றில் ஒரு தமிழ் மழிகைக் கடைக்கான விளம்பரத்தில், அக்கடை சிறந்த ஆட்டிறைச்சிக்குப் பெயர்போனது என்று காட்டுவதற்காகவும் ஆட்டிறைச்சிப் பிரியர்கள் அந்தக் கடையைத் தேடிச் சென்று ஆட்டிறைச்சி வாங்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், ஒருவர் ஒரு ஆட்டிடம் "மெய்ய ஆடு உன்ர இறைச்சியை நான் எங்க சிறப்பா வாங்கலாம்?" என்று கேட்க ஆடு குறிப்பிட்ட கடையின் பெயரைக்கூறுவதாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

விளம்பர தர்மத்தின் படி இந்த விளம்பரம் வெற்றி பெறுகிறது என்று கொள்ளலாம். அனைவரது கவனத்தையும் ஏதோ ஒரு வகையில்; (அது கோபமாக இருக்கலாம், அருவருப்பாக இருக்கலாம், எவ்வாறாயினும் இருக்கலாம்) இவ்விளம்பரம் கைப்பற்றி அதன் மூலம் கடையின் பெயரை விநயமாக விளம்பரப்படுத்துகிறது. அந்த வகையில் விளம்பரத்தின் நோக்கம் வெற்றி பெறுகிறது, கடைக்காரர் விளம்பரக் காரரிற்குக் கொடுத்த காசும் நியாயமாகிறது.

ஆனால், எவரேனும் மேற்படி விளம்பரத்தை விளம்பரமாகப் பாhக்காது ஒரு கலைப்படைப்பாகப் பார்த்து அதன் கலை நயம் பற்றி அதன் கருத்துப் பற்றிப் பேச விழைவார்களேயாயின், அங்கு அது வெற்றி பெறுகிறதா என்பது கேள்விக்குறியே.

ஓரு உயிரினைக் கொலை செய்தது மட்டுமல்லாமல் அதன் இறைச்சியையும் சிறப்பாக விற்கின்றோம் என்று தம்பட்டம் அடித்து விற்பது எத்தனை குரூரமானது என்று காட்டவும் அப்படியான ஒரு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு அந்தக் கடைக்கு இறைச்சி வாங்கச் செல்பவர் எத்தனை குரூரம் மிக்க சின்னப் பிறப்பு என்று காட்டவும் மேற்படி விளம்பரத்தின் படைப்பாளி முனைந்திருந்தார் என்றால் மட்டும் மேற்படி படைப்பு அற்புதமான கலைப் படைப்பாக வெற்றி பெறுகிறது, மிளிர்கிறது. ஆனால் அவ்வாறு நாம் இந்த விளம்பரத்தினை எடுத்துக் கொண்டால் அங்கு விளம்பரம் தோற்றுப் போகிறது. ஏனெனில்;, கடைக்காரரிடம் அவரின் ஆட்டிறைச்சியினை விளம்பரப் படுத்தித் தருகின்றேன், வாடிக்கையாளரை அதிகரிக்கச் செய்கின்றேன் என்று பணம் வாங்கியவர், மறு வளத்தில் புலால் உண்ணுதலின் மற்றும் விற்பதின் குரூரத்தை மக்களிற்கு நினைவு படுத்துவதன் வாயிலாக, கடையின் வாடிக்கையளாரைக் குறைக்கவே முயலுகிறார் . இது விளம்பர படைப்பாளி கடைக்காரரிற்கு உறுதி அளித்த விளைவிற்கு நேர் மாறானது.

ஆக, மேற்படி விடயத்தில், விளம்பரம் அல்லது கலைப்படைப்பு ஆகிய இரண்டில் ஒரு இலக்குத் தான் வெற்றி பெற முடியும். இரண்டும் எப்போதும் வெற்றி பெற முடியாது.

சாத்திரியின் நாடகங்களைக் கேட்கும் போது மேற்படி விளம்பரம் ஏற்படுத்துவன போன்ற உணர்வுகளே எனக்குள் எழுகின்றன. யாரேனும் ஆகாதவர்களைத் தாக்குவதற்காக மட்டும் இந்நாடகங்கள் உருவாக்கப் படுகின்றன என்றால், அது தொடர்பில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் என்னால் இவற்றை கலா இரசனை மிக்க படைப்புக்களாகவோ அல்லது ஆக்கபூர்வமான சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்ட படைப்புக்களாகவோ பார்க்க முடியவில்லை. மனிதனின் அருவருப்பான வழுக்களை இரசிக்கும் பக்குவம் எனக்கு இல்லை என்பதால் இதை என்னால் இரசிக்க முடியவில்லை என்கிறேன். ஏன் இது ஆக்கபூர்வமற்றதாய் எனது தனிப்பட்ட கருத்து அமைகிறது என்பதைக் கீழே கூறுகின்றேன். இரண்டும் எனது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே.

போட்டி, பொறாமை, புழுகல், பொய், கர்வம், ஆணவம் இப்படிப் பலவகையான வழுக்கள் இன மொழி மத மற்றும் இதர பேதங்கள் அனைத்திற்கும் அப்பால் அனைத்து மனிதர்களிடத்திலும் உள்ளன. மற்றவரிற்குத் தான் இந்தக் குணங்கள், ஆனால் அவற்றின் சுவடே எங்களில்இல்லை என்று நினைப்பவர்கள்

உண்மையான சுயபரிசீலனை செய்தால் நிட்சயம் அவற்றின் வகையறாக்கள்

(ஒருவேளை வடிவங்கள் வேறுபட்டாலும்) அனைவரிலும் எங்கோ ஒரு ழூலையில் இருப்பது புலனாகும். மட்டுப்படுத்தப் பட்ட உணவிற்காக அடிபட்ட ஆதி மனிதனில் இருந்து அபரிமித நுகர்வியல் மோகத்தில் அல்லல் படும் இன்றைய மனிதன் வரை, இந்தப் போட்டி பொறாமை மனிதனின் இயலாமைகளின், ஏக்கங்களின் ஒரு வெளிப்பாடாகவே இருக்கின்றன.

இந்த நிலையில், உங்கள் படைப்புக்களில் ஒரு சமூகப் பிரச்சினை அல்லது இயல்பு பற்றி கையாழ முனைகிறீர்கள் ஆயின் ,குறிப்பிட்ட விடயம் உங்களில் ஏற்படுத்திய தாக்கத்தினை உங்களது நேயர்களும் உணர வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள் ஆயின், முடிவுகளைத் திணிப்பதற்குப் பதிலாக, அதற்கான சிந்தனையைத் தூண்டும் தளத்தினை ஏற்படுத்திவிட்டு சிந்திப்பதை நேயர்களிடம் விட்டு விடுங்கள். தற்போது உள்ள வடிவத்தில், உங்கள் படைப்புக்களில் காணப்படும் ஒரு பெரிய பிரச்சினை என்னவெனில், நீங்கள் கோடிட்டுக் காட்டும் பிரச்சினைகளிற்கு நீங்கள் அப்பாற்பட்டவர் என்பது போன்று நீங்கள் காட்ட விழைவது போன்ற சிந்தனையே உங்களது இலக்கு நேயர்களில் எழுவதற்குச் சாத்தியம் அதிகம். ஏனெனில் ஒரு விமர்சனம் என்று வரும் போது பொதுவாக பலரது அது தொடர்பான எதிர்வினை "அங்க மட்டும் என்ன வாழுதாம்?" என்ற அடிப்படையில் தான் அமைவது வழமை. இதனால் சொல்லப்படும் கருத்து எடுபடுவதற்குப் பதில் பழிவாங்கல் படலமும் அதற்கான திட்டமிடலும் தொடங்குவதே அதிகம்.

நான் ஒரு நாடக விற்பன்னர் இல்லை. எனவே எனது பார்வை தான் சரியானது என நான் சொல்லவில்லை. ஒரு நேயராக மட்டும் எனது உணர்வை ஒளிவு மறைவின்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

வணக்கம் இன்னுமொருவன் எந்தவொரு கலைஞனின்படைப்பையும் இரண்டாக பிரிக்கலாம் சமூகம் சார்ந்த படைப்பும் அவனைச்சுற்றி அல்லதுஅவனது சமூதாயத்தின் நடக்கின்ற தாக்கங்களே படைப்புக்கள் ஆகின்றது அதுதான் மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது அது தவிர்ந்த படைப்புக்கள் மற்றையது வெறும் கற்பனையான ஆனால் பிரமாண்டமானதாக இருக்கும் இது ஒரு தற்காலிக பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். எனது எழுத்துக்கள் என்னை பாதித்தவையே புலத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த நாடகத்தில் வரும் புளுகு பாத்திரம் மற்றது இரவில் தொலைபேசியடித்து மற்றவர்களிற்கு தொல்லை கொடுப்பதென்பது பொதுவாக நடக்கின்ற நிகழ்வுகள்தான்.மற்றபடி இதில் உங்களின் ஆட்டு விழம்பரத்தை பற்றி கதைக்க தொடங்கினால் அது வேறுபக்கமாக போய் கோயிலில் உள்ள பாதி நிர்வாண அம்மன் சிலையை கடவுளாய் பார்க்கிறீர்களா?? காமமாய் பார்க்கிறீர்களா?? என்று பக்கம் பக்கமாக எழுதவேண்டிவரும் ஆனால் ஒரு வரியில் உங்கள் சந்தேகத்திற்கு பதில் சொல்லிவிடுகிறேன் இந்த நாடகத்தை மட்டுமல்ல எல்லா நாடகங்களையுமே பார்த்த கேட்ட சம்பவங்களையே பொதுவாக நாடகமாக்குகின்றேன். அது பலரை சிரிக்க வைக்கிறது சிலரை கோபபடுத்துகின்றது .சிந்தியுங்கள.......; அந்த சிலரை ஏன் கோபபடுத்துகின்றது என்றால் அது அவரில் ஏதோவொரு தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றது என்பதுதான் அர்த்தம் .அவர் ஏன் தன்னில் அந்த நாடகம் தாக்கத்தை உருவாக்குகின்றது என்று உணருகிறார் என்றால் அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பாத்திரமாக இருந்திருக்கிறார்.; என்பதுதானே அர்த்தம். ஆனாலும் எனது நாடகங்களை வானொலிகளில் மட்டும் போடகொடுத்து விட்டு பேசாமல் நானும் இருந்து விடலாம் கேட்பவர்களும் கேட்டு விட்டு வனொலிகாரரை தங்கள் மனதிற்குள் திட்டிவிட்டு போசாமல் இருந்து விடுவார். ஆனால் யாழில் இடுவதன் காரணம் இதன் பிரதி பலன்களை நானும் மட்டுமல்ல தாக்கமடைந்தவர்களும் உணரவேண்டும் என்பதே கோப படுபவர் மற்றவர்களின் கருத்துகளால் சிந்திக்கவேண்டும் என்பதுமே. நன்றி அன்புடன் சாத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகம் அருமை . நன்றாக இருக்கிறது. ஒரு கலைப்படைப்பு அதன் வெற்றிய அடைவது வாசகர்கள் நேயர்களால் அந்த வெற்றியை இந்த நாாடகம் பெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு பாத்திரமும் அருமையாக செய்துள்ளார்கள். மக்களை வெல்லும் கலைகள்தான் காலத்தை வெல்லும். சாத்திரி அவர்கள் கூறியிருப்பது போல ஒருவனின் படைப்பு அவன் சார்ந்த சமூகத்திலிருந்தே பிறக்கிறது. தனித்த தனித்த சிக்கல்கள் பிரச்சனைகள் தான் பெரும் கலைப்படைப்பாகிறது.

இன்னும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.