Jump to content

மலையக வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை – வடிவேல் சுரேஷ்


Recommended Posts

மலையக வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை – வடிவேல் சுரேஷ்

 

 
IMG_3955

மலையக பெருந்தோட்ட தேயிலை மலைகளின் வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக விசனம் தெரிவித்துள்ள பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதை தடுப்பதற்கு பெருந்தோட்ட பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பதுளை மாவட்டத்தில் கிளேன்பீல் தோட்ட பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் பல்வேறு வகையான போதைப்பொருளின் விற்பனையில் ஈடுப்பட்டு வரக்கூடிய நபர்கள் கடந்த காலங்களில் நகர் பகுதிகளை பிரதான இடங்களாக கொண்டு விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இன்று அவ்வாறான போதை பொருட்களை மலையக பிரதேசங்களிலும் விற்பனை செய்து பெருந்தோட்ட சமூகத்தையும் இதற்கு அடிமையாக்கும் செயல்களை முன்னெடுக்கின்றனர்.

குறிப்பாக மலையக பெருந்தோட்டங்களை உள்வாங்கப்பட்ட நகர் பகுதிகளில் ஏதோ ஒரு மூலையில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ள நபர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி தோட்டப்பகுதிகளுக்குள் நுழைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் போதை பொருளுக்கு எதிராக ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் அதனை ஒழித்து கட்டும் நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ளும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு கெடுபிடியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் இதில் மாட்டிக்கொள்ளாமல் தமது வியாபாரத்தினை முன்னெடுக்க தற்போது பெருந்தோட்டங்களின் பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

பெருந்தோட்ட வீதிகளின் சந்திகள், மேட்டு பகுதிகளில் விற்பனைகளில் ஈடுபடும் நபர்கள் தப்பிக்க கூடிய வகையில் முச்சக்கரவண்டிகள் மற்றும் மறைவிடங்களை பயன்படுத்துவதாகவும் எமது கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்துள்ளனர்.

அதேவேளையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்கள் வரக்கூடியதை அவதானிக்க கூடிய இடங்களை தெரிவு செய்தே இவைகள் விற்பனை செய்யப்படுவது இப்போது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் கடந்த காலத்தில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராணியப்பு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் ஞாபகப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் குறித்த தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழும்பில் போதை பொருள் பாவனைக்கு தன்னை அடிமைபடுத்திகொண்டு பணத்தேவைப்பாட்டுக்காக தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியை கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்கு அழைத்து சென்று தனது தாய் தந்தையின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் பணத்தைக் கைப்பற்ற அவர்களை வீடொன்றில் கொலை செய்ததை ஞாபகப்படுத்தினார்.

எனவே மலையக சமூகம் இன்று அவர்களின் வாழ்க்கை நிலையில் படிப்படியாக முன்னேரும் தகுதிகளை பெற்றுவருகின்றனர்.

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு முறையாக அனுப்பி கல்வியறிவை வளர்கும் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறைக்காட்டியும் வருகின்றனர்.

எனினும் நமது பெருந்தோட்டப்பகுதிகளில் இவ்வாறாக போதை பொருள் பாவனை மற்றும் விற்பணைகளில் ஈடுபடுவோர்களிடமிருந்து நமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.

இது தொடர்பில் அவதானத்துடனும், நமது பிள்ளைகளின் அசைவுகளிலும் அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன் தோட்டங்களுக்கு உள்வாங்கும் வீதிகளின் சந்திகளில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள், மற்றும் முச்சரக்கர வண்டிகள் என காணப்படும் பட்சத்தில் அது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரின் கவனங்களுக்கும் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(அ)

-க.கிஷாந்தன்-
02 (3)

01 (7)

03 (4)

03 (4)

IMG_3974

IMG_3980

04 (4)

http://www.dailyceylon.com/177719

fff&text=Advertisement
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.