Jump to content

சீதனம் – குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக, அவுஸ்ரேலிய சட்டத்தில் உள்ளடக்க பரிந்துரை..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் – குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக, அவுஸ்ரேலிய சட்டத்தில் உள்ளடக்க பரிந்துரை..

February 15, 2019

dowry-abuse.jpg?resize=790%2C444

அவுஸ்ரேலியாவில் சீதனம் வாங்குவதை குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் உள்ளடக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட செனட் குழு, அரசிடம் இதனைப் பரிந்துரைத்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் சீதனம் கொடுப்பது – வாங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் குறிப்பிட்ட செனட் குழுவினர் ( Senate Standing Committee on Legal and Constitutional Affairs) அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இறுதி அறிக்கையிலேயே இந்த யோசனை பிரேரிக்கப்பட்டிருக்கிறது.

அவுஸ்ரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள குடிவரவாளர்களுக்கான திட்டங்களின் கீழ் தற்காலிக விஸாவில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு மிகக்குறைவாக   உள்ளது என்றும் இந்தச் சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான சீதனக்கொடுமை பெரும் எண்ணிக்கையில் நடைபெறுகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பல தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு சீதனக்கொடுமை காரணமாக அமைந்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ள இக்குழு, கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக கடைப்பிடிக்கப்படும் இந்த சீதன நடைமுறையானது அவுஸ்ரேலியாவில் பேணப்படுகின்ற அடிப்படை விழுமியங்களுக்கு முரணாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக திருமணத்தின் பெயரால் பணம் கொடுத்து பெண்களை இன்னொருவரது உடமையாக்கும் இந்த கலாச்சாரம் அவுஸ்ரேலியாவில் பேணப்படுகின்ற பால் சமத்துவ முறைக்கு முற்றிலும் எதிரானது என்றும் இந்த செனட் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், அவுஸ்ரேலியாவில் குடியுரிமையுடைய மாப்பிள்ளைகளுக்கு அதிக சீதனம் வசூலிக்கப்படுகின்ற நடைமுறையும் இங்கு இடம்பெற்றுவருகிறது. அதாவது, அவுஸ்ரேலியாவில் குடியுரிமையானது இந்த சீதன நடைமுறையின் கீழ் உயர் விலைக்கு விறக்கப்படுகிறது. சீதனத்தை உறுதிசெய்தபடி கொடுக்காத பெண்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பவும் சொந்த நாட்டுக்கு துரத்தப்படுவதாக மிரட்டப்படுகிறார்கள்.

உறுதியளிக்கப்பட்ட சீதனத்தைவிடவும் அதிக பணத்தை தருமாறு நிபந்தனை விதிக்கும் சம்பவங்களும் அதிகம் இடம்பெறுகின்றன – என்றும் இந்த செனட் குழு தனது ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளது.

பெற்றுக்கொண்ட பல்வேறு முறைப்பாடுகளின் பிரகாரம், சுமார் 12 யோசனைகளை அரசிடம் முன்வைத்துள்ள இந்த சட்ட மற்றும் அரசமைப்பு விவகார செனட் குழு, ‘economic abuse’ என்ற பதத்தை ஏற்கனவே உள்ள குடும்பச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

ஆனால் இச்செயற்பாட்டினை குற்றவியல் பிரிவின்கீழ் தண்டிப்பதற்கென்று தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என இக்குழு பரிந்துரைக்கவில்லை.

Senate Inquiry into the practice of dowry and the incidence of dowry abuse in Australia

 

http://globaltamilnews.net/2019/113321/

 

Link to comment
Share on other sites

சீதனம் உண்மையில் குடும்ப வன்முறை என்பது உண்மை தான். இன்னொரு வகையில் கூறுவதானால் ஒரு பெண் பணத்தை வாங்கிக்கொண்டு  ஒரு ஆணுடன் படுக்கைக்கு சென்றால் விபச்சாரம் என்பது போல எமது சமுதாயத்தில் ஆண் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு முதலிரவுக்கு சென்றால் அதுவும் விபச்சாரம் தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.