Jump to content

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_0997.jpg?zoom=1.2100000262260437&res

 

4474 மில்லியனில்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(15) ஆரம்பித்து வைத்துள்ளார்.

 

மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைக்கைகளுக்கு அமைவாக 4474 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டில் 1974 மில்லியன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியாகவும் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையின் கட்டம் இரண்டின் பணிகளுக்கான அடிக்கல்லானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவ ரீதியாக இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1974 மில்லியன்கள் கட்டடத்திற்கும், 2500 மில்லியன்கள் மருத்துவ உபகரணங்களும் ஆகும்.

கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியற்றினூடாக கடந்த காலங்களில் பல்வேறு கட்டமாக மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனங்களை அடுத்தே கிளிநொச்சி மாவட்டவைத்திய சாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் சாத்தியமாகியுள்ளது.

அடிக்கல் நாட்டும் வைபவத்தினைத் தொடர்ந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கென 50 மில்லியன் பெறுமதியான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் வைபவரீதியாகப் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரால் வைத்தியசாலையிடம் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் கட்டுமாணப் பணிகள் 2003ம் வருடம் 600 கட்டில்களுடன் கூடிய அதிநவீன மருத்துவமனைக்கான திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் 2006ஆம் வருடம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததுடன் அக்கட்டுமாணப் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டிருந்தன.

சேவையின் தேவை கருதி அவ்வாறு இடைநடுவில் நின்றுபோன வைத்தியசாலையின் கட்டட வளங்களுடன் கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையானது 2006ம் ஆண்டிலிருந்து இயங்கியிருந்தது.

2008 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெயரும் வரை 200 கட்டில்களுடன் இயங்கிய இந்த வைத்தியசாலை 2009ம் ஆண்டு மீள் குடியேற்றத்துடன் 10 கட்டில்களுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

2010ம் ஆண்டிலிருந்து மீண்டும் 200 கட்டில் வசதிகளுடன் இவ்வைத்தியசாலை தனது சேவையினைத் தொடர்ந்தாலும் இடை நடுவில் நின்றுபோன கட்டுமாணப் பணிகளை மீளவும் முன்னெடுப்பதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் விளைவாக 2016ம் ஆண்டின் இறுதியில் மாவட்ட, மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி பொறியியல் பீடாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் அனைவரும் இணைந்து 4474 மில்லியன் உத்தேச மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் கூடிய கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையுடன் இணைந்த மகப்பேற்றியல் விசேட வைத்திய மையத்தினை உள்ளடக்கிய கட்டம் இரண்டிற்கான முன்மொழிவினை உருவாக்கியிருந்தனர்

ஐந்து பகுதிகளாக கொண்ட, 36 மாதங்களில் கட்டி முடிப்பதற்குத் திட்டமிடப்பட்ட மேற்படி அபிவிருத்தித் திட்டத்திற்கு 2017ம் வருடம் வைகாசி மாதம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டதனை தொடர்ந்து இன்றைய தினம் பிரதமரினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, அமைச்சர்களான வஜிர அபேயகுனவர்தன, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம். ஹரிசன், சாகல ரத்னாயக்க, விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சித்தார்த்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 IMG_1000.jpg?zoom=1.2100000262260437&resIMG_1002.jpg?zoom=1.2100000262260437&resIMG_1016.jpg?zoom=1.2100000262260437&resIMG_1022.jpg?zoom=1.2100000262260437&res

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.