Jump to content

புல்வாமா தாக்குதல்: தண்டனை நிச்சயம் - சூளுரைத்த நரேந்திர மோதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
மோடிபடத்தின் காப்புரிமை Mikhail Klimentyev

புல்வாமாவில் நடந்த தாக்குதளுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றும் அவர்கள் இது தொடர்பாக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பதில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, ''இது போன்ற தாக்குதல்களால் இந்தியாவை நிலைகுலைய வைத்துவிடலாம் என்ற மாயையில் பாகிஸ்தான் இருக்கவேண்டாம். பாகிஸ்தானின் கனவு நிறைவேறாது'' என்று கூறியுள்ளார்.

சிறப்புஅந்தஸ்தை ரத்து செய்த இந்தியா

உலக வர்த்தக நிறுவனத்தின் சரத்துகளின்படி, 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த 'மிகவும் நெருக்கமான நாடுகள்' எனும் அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தில் அந்நாட்டுக்கு இந்தியா குறைவான வரிகளை விதித்து வந்தது.

இதுவரை பாகிஸ்தான் இந்தியாவுக்கு இந்த அந்தஸ்தை வழங்கவில்லை.

https://www.bbc.com/tamil/india-47252134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிழம்பு said:

உலக வர்த்தக நிறுவனத்தின் சரத்துகளின்படி, 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த 'மிகவும் நெருக்கமான நாடுகள்' எனும் அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்து

_40716540_leg_lance_anim.gif

சிக்ஸ் அடிப்பார் எண்டு பார்த்தால் "டொக்கு" வைத்து விட்டீனம் .. அதுசரி அயல் நாட்டு விவகாரம் எல்லாம் நமக்கு எதுக்கு .. ?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி நாடு சிறிலங்காவே இந்தியாவை வெருட்டிகொண்டிருக்கு இந்த லட்சண‌த்தில் பாகிஸ்தானுக்கு உவையள் சவால் விடியினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்காக கொஞ்சப்பேரை இந்தியாவே மிகவும் திட்டமிட்டுப் பலியாக்கிவிட்டினம் மற்றும்படி ஒன்றுமில்லை வெடித்தது 350 கிலோ வெடிமருந்து எனக்கூறும்போகே தெரியவில்லையா உங்களுக்கு என்ன தற்கொலைக்குண்டுதாரி துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுத்திட்ட செத்தவன் இவ்வ்ளவு நிறை என

அந்த இடத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுசெய்யும் அந்த ஊர் ஜெயராஜா கூறியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க இந்தியாவால் திரைமறைவில் இயக்கப்படும் ஒரு தீவிரவாதக்குழுவால் இந்திய அரசாங்கத்தின் மறைவுவேலையால் செய்யப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்

இன்னும் சில வாரத்திலோ மாதத்திலோ நாம் எல்லொரும் இதைப்பத்தி மறந்திருக்கும்வேளை இந்திய இராணுவம் ஒரு சேர்ஜிகல் ஸ்ராக் செய்தது என சினிமா செற்போல ஒரு செற்றைப்போட்டு அங்கு நிருபர்களைக் கண்ணைக்கட்டிக்கூட்டிக்கொண்டுபோய் சுத்தவர நிக்கவைச்சிட்டு ஒரு நாடகம் ஆடுவாங்கள் 

கஸ்மீரும் பாகிச்தானும் பச்சையாகவும் இந்தியா மஞ்சளாகவுமா காட்சியளிக்குது எல்லா நிலமும் அந்தப்பகுதியில் ஒரேமாதிரித்தான் இருக்கும் சுண்ணாகத்தை ப் படமெடுத்துவிட்டு இணுவில் என்று சொன்னால் நம்பமாட்டியளோ அதுபோல்தான் இதுவும்.

Link to comment
Share on other sites

இதுவரை 10000 க்கும் மேற்பட்ட  காஷ்மீர்சிறுமிகளை கற்பழித்த இந்திய_ராணுவத்தினர்
ஐநா மன்றம் வெளியீடு 2018 ஏப்ரல்15..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2019 at 3:57 PM, பிழம்பு said:

புல்வாமாவில் நடந்த தாக்குதளுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

44 பேர் பலிக்கு இப்படி பதறுகிறீர்களே ஈழத்தில் 150000 தமிழர் இந்தியாவின் உதவியால் கொல்லப் பட்டார்கள் நாங்கள் எப்படி பதறியிருப்போம்...

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.