Jump to content

போதும்! காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவு கட்டுவோம்: புல்வாமா தாக்குதலுக்கு ரஜினிகாந்த் கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 
rajinijpg
Published : 15 Feb 2019 18:48 IST
Updated : 15 Feb 2019 18:49 IST
 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 45 பேர் பலியானதையடுத்து உலகம் முழுதும் கண்டனங்களும் இரங்கல்களும் குவிந்து வருகின்றன.

தவறவிடாதீர்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  போதும்.. நடந்தவரை போதும்..! இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

பலியான ஜவான்களின் குடும்பத்தினருகாக  என் இருதயம் கலங்குகிறது.  உலகைவிட்டுப் பிரிந்த தைரியமான அந்த இருதயங்கள்.. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு கூறினார் ரஜினிகாந்த்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26282029.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய ஆமியின்ரை கொடுமையை ஈழத்தமிழரை கேட்டால் தெரியும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 45 பேர் பலியானதையடுத்து உலகம் முழுதும் கண்டனங்களும் இரங்கல்களும் குவிந்து வருகின்றன.

இது... பச்சைப்  பொய். இதனை...  மிக உன்னிப்பாக, அவதானித்து கொண்டு இருக்கின்றோம். 
ஈழத் தமிழர்களுடன், ஸ்ரீலங்கா சிங்கள மக்களும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களும்... 
மிக மகிழ்ச்சியாக உள்ளார்கள், என்பதே... உண்மை. 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி முடிவு கட்டுவதாக உத்தேசம்? இலங்கையில் மே 2009 இல் சிங்கள அரசுடன் சேர்ந்து ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்ததே உங்கள் அரசாங்கம், அந்த முறையிலா?

ஆக, இலங்கையில் நீங்கள் பரீட்சித்துப் பார்த்த இனவழிப்பு வழிமுறையினை காஷ்மீரிலும் பாவித்துப் பார்க்கலாம் என்கிறீர்கள்?

அதெல்லாம் இருக்கட்டும், உங்களின் இரங்கல் எல்லாம் அறிக்கையுடன் மட்டும்தானா?? அப்பாவிகளைக் கொல்லப் புறப்பட்டுப் போய் ஈற்றில், தாமே பலியானவர்களின் குடும்பங்களுக்கு உங்களிடம் அளவிற்கு மீறிச் சேர்ந்திருக்கும் பணத்தில் ஏதாவது செய்யும் நோக்கம் உண்டா??? 

Link to comment
Share on other sites

ரஜினியை ஏளனம் செய்பவர்கள் பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த ரஜனியின் திரைப்படத்தில் காஷ்மீர் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் இரானுவத்தையும் ரஜனி தனி ஒருவனாக துரத்தி துரத்தி துவம்சம் செய்யப்போவதை. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.