Jump to content

இனியும் ஜெனீவாவை நம்பியிருக்கலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் ஜெனீவாவை நம்பியிருக்கலாமா?

0fdf9816b978c40128455785949dd0dd?s=26&d=By வானகன் On Feb 15, 2019
 
 
Share

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி சகல மட்டங்களிலும் எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா கூட்டத் தொடரை இலக்கு வைத்த இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் அனைத்துத் தரப்புக்களினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா.வின் உயர் மட்டக்குழு ஒன்று சிறிலங்காவிலும், தமிழர் தாயகப் பகுதிகளிலும் விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத் தரப்பும், தமிழ் மக்களும் எவ்வாறான உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் நாடி பிடித்துப் பார்ப்பதற்கு ஐ.நா. அதிகாரிகள் முற்பட்டுள்ளார்கள். ஆனால், ஜெனீவாவில் வரப்போகும் தீர்மானம் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையுமா என்பதற்கான பதிலைத்தான் நாம் தேட வேண்டியிருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை அமெரிக்கா இல்லை. வழமையாக சிறிலங்கா குறித்த தீர்மானங்கள் அமெரிக்காவினால்தான் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவை கடும் நிர்ப்பந்தத்துக்குள்ளாக்குவது போலக் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானங்களில் இருக்கும் “காரம்” பின்னர் குறைக்கப்படுவதுதான் கடந்த கால அனுபவம். சிறிலங்காவே இணை அனுசரணை வழங்கும் அளவுக்கு தீர்மான வாசகங்கள் கடந்த இரண்டு சந்தர்ப்பங்களில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. அதனைக் கூட, சிறிலங்கா நடைமுறைப்படுத்தவில்லை என்பது சர்வதேசத்தின் கவனத்துக்குரிய விடயம்.

இம்முறை அமெரிக்காவின் இடத்தை பிரித்தானியா எடுத்துக்கொள்கின்றது. சிறிலங்கா குறித்து புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக பிரித்தானியா இப்போது அறிவித்திருக்கின்றது. பிரித்தானியாவுடன் இணைந்து கனடா, ஜேர்மனி, மொன்டனேக்ரோ, மெசடோனியா ஆகிய நாடுகள் இணைந்தே இந்தப் பிரேரணையைக் கொண்டுவரப்போகின்றன. இந்த ஐந்து நாடுகளும்தான் இப்போது சிறிலங்கா விவகாரத்தைக் கையாளப்போகும் பிரதான நாடுகளாக இருக்கின்றன. இதற்குத் தலைமை தாங்கும் நாடு என்ற முறையிலேயே பிரித்தானியா புதிய தீர்மானததைக் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கின்றது.

“இலங்கையில் நல்லிணக்கத்தையும்? பொறுப்புக் றலையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்” என்ற பெயரில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பொறுப்புக் கூறல், நிலைமாறுகால நீதி என்பவற்றை உள்ளடக்கிய பிரேரணை ஒன்று 2015 இல் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான காலக்கெடு 2017 இல் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. வரும் மார்ச் மாதத்துடன் அந்தக் காலக்கெடு முடிவுக்கு வருகின்றது. அதனை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் வகையிலேயே புதிய பிரேரணையைக் கொண்டுவருவதற்கு பிரித்தானியா தலைமையிலான நாடுகள் திட்டமிட்டுள்ளன.

மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் என்பன அவற்றின் இராஜதந்திர நகர்வுகளில் முக்கியமானவையாக உள்ளன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதனைவிட முக்கியமாக தமக்கு ஆதரவான நாடுகளைப் பாதுகாப்பதில் அவற்றின் கவனம் அதிகமாக இருக்கும் என்பதுதான் யார்த்தம். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேற்குலகுக்குச் சார்பான ஒன்று என்பது வெளிப்படை. 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறிலங்கா மீதான அழுத்தத்தை மேற்குலக நாடுகள் பெருமளவுக்குக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. அல்லது அந்த அழுத்தங்கள் பெயரளவுக்கானதாகவே இருக்கின்றது. ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் கூட பெரளவுக்கானவையான இருந்துள்ளனவே தவிர, ரணில் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை – சங்கடத்தைக் கொடுப்பதை அவை தவிர்த்துக்கொண்டேயிருந்தன.

இந்தப் பின்னணியில்தான் “மறப்போம். மன்னிப்போம்” என அவர் கிளிநொச்சியில் வைத்து வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கின்றார். போரில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஆயுதந் தாங்கிய எதிர்த்தரப்பை சமர் ஒன்றின் போது கொல்வது போர்க் குற்றமல்ல. அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவதும், கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்தவர்களைக் கணாமற்போகச் செய்வது போன்றனதான் போர்க் குற்றங்களாக ஐ.நா. வரையறுத்துள்ளது. இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் தொகை ஒரு லட்டசத்துக்கும் அதிகம். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தான். கைதாகிக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 8 ஆயிரம். இவை அனைத்தையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியுமா?

ஐ.நா.வில் தொடர்ந்தும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தமிழர்களின் இந்தக் கோரிக்கைகள் நீர்த்துப்போய்விடும் என்பது அரசாங்கத்தின் கணக்கு. மேற்குலகும் இதனைத்தான் விரும்புவதாகவே தெரிகின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனைத்தான் விரும்புகின்றதா?

போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்காக எந்தவொரு இராணுவ வீரரையும் தண்டனைக்கு உள்ளாக்கப்போவதில்லை என்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு. “மறப்போம். மன்னிப்போம்” என்பதன் மூலம் இதனைத்தான் ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றார். மைத்திரிபால சிறிசேனவோ இதனை வெளிப்படையாகவே கூறிவருகின்றார். ஆக, பொறுப்புக்கூறல் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு மீண்டும் ஒரு கால அவகாசத்தை வழங்கிளாலும் கூட, சிறிலங்கா அரசாங்கம் அதனைச் செய்யப்போவதில்லை.

இதனைத் தெரிந்திருந்தும் கூட, கால அவகாசத்தை வழங்கும் தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. “ஐ.நா.வின் கண்காணிப்பைத் தொடர்ந்தும் வைத்திருத்தல்” என சுமந்திரன் இதனை நியாயப்படுத்துகின்றார். “வரப்போகும் பிரேரணை கடுமையானதாக இருந்தால் மட்டுமே நாம் அதனை ஆதரிப்போம்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். தீர்மானம் கடுமையானதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்போவதுயார்?

ஜனாதிபதித் தேர்தல் உட்பட முக்கியமான தேர்தல்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில், கடுமையான தீர்மானம் ஒன்றை மேற்கு நாடுகள் கொண்டுவரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனைவிட, தீர்மானம் கடுமையானதாக இருக்கின்றதா இல்லையா என்பதை மதிப்பிடப்போவது யார்? ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொள்ளப்படும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சங்கடத்தைக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்புத் தலைமை செயற்படுமா என்பது அடுத்த கேள்வி!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலுள்ள மிகப்பெரிய பலவீனம், குறிப்பிட்ட ஒரு நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த நாடு குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இதனால்தான் கடந்த நான்கு வருடங்களில் சிறீலங்காவினது ஒத்துழைப்பையும் பெறலாம் என்ற நம்பிக்கையில் பிரேரணையின் வாசகங்களில் காணப்பட்ட கடுமையை மேற்கு நாடுகள் பெருமளவுக்குக் குறைத்தன. அப்படியிருந்தும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் எந்தவிதமான அக்கறையையும் காட்டவில்லை. இப்போது, கடுமையான தீர்மானம் வந்தால் அதனை நாம் ஆதரிப்போம் என மாவை கூறுகின்றார். மென்மையான தீர்மானத்தையே நடைமுறைப்படுத்தாத சிறிலங்கா கடுமையான தீர்மானத்தை நடைமுரைறப்படுத்துமா? அதுவும் இந்த தேர்தல் ஆண்டில்!

ஆக, மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகளை நிறைவேற்றுதில் அர்த்தமிருக்கப்போவதில்லை என்பதுதான் கடந்த வருடங்களில் நாம் படித்துக்கொண்ட பாடம். அதனால், மாற்று வழிகளைப் பற்றி சந்திக்க வேண்டிய தருணம் இது. ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது, இதற்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற வாத் இப்போது பல தரப்புக்களாலும் முன்வைக்கப்படுகின்றது.

தமிழர்களின் பிரதிநிதிகளாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கூட்டமைப்பு இதற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க வேண்டும். அதற்கான இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பு இவ்விடயத்தில் செயற்படாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழ் மக்களுடைய அமைப்புக்கள், தாயகத்திலிருந்து இதே கருத்துடன் செயற்படும் அமைப்புக்களுடன் இணைந்து இதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகத்துக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. இந்த நேரத்திலாவது தனிநபர் வாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு இதற்காக நாம் இணைந்து செயற்படவிட்டால், வரலாறு எம்மையும் மன்னிக்காது!

தாரகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.