Jump to content

வருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன :

February 15, 2019

 

children.jpg?zoom=3&resize=335%2C191

உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயுத மோதல்கள் மற்றும் அதன் தாக்கத்தினாலும் பசி பட்டினியாலும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் குழந்தைகளைக் காப்போம் என்னும் தொனிப் பொருளுடன் இயங்கிவரும் சேவ் தி சில்ட்ரன்ஸ் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஈராக், மாலி, நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளில் அதிகபட்ச அளவில் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் மட்டும் 2013 – 2017 ஆண்டுகளுக்டைப்பட்ட காலங்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்கு பிந்தைய விளைவுகளினால் நேர்ந்த இழப்புகள் குறிப்பாக அவர்களுக்கு ஏற்பட்ட பசி, மருத்துவமனைகளும் அடிப்படை கட்டமைகளும் சேதமுற்றமை , சுகாதாரப் பாதுகாப்புக்கான பற்றாக்குறை, மேலும் உதவி மறுக்கப்படும் மோசமான சூழ்நிலை போன்றவைகளும் அவர்களது உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன.

அத்துடன் ஆயுதக் குழுக்களில் இணைத்துக்கொள்ளுதல், கடத்தப்படுதல் அல்லது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் ஆகியவற்றையும் இக்குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த இருபதாண்டுகளாக உலகில் உள்ள ஐந்து குழந்தைகளில் ஒன்று எந்த நேரத்திலும் போர்வெடிக்கும் அல்லது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே வாழ நேரிடுகிறது எனவும் கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற குழந்தைகள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் போர்ச்சூழலின் மறைமுக விளைவுகளினால் மட்டுமே 5 வயதுக்குள் இறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம் ஆகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/113437/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.