Jump to content

பிரசார ஆயுதமாகும் போர்க்குற்ற விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரசார ஆயுதமாகும் போர்க்குற்ற விசாரணை

கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 01:07 Comments - 0

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கில் நீதி கோரும் மக்களின் போராட்டங்கள், தீவிரம் பெறத் தொடங்கி விட்டன.   

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள்; காணிகளைப் பறிகொடுத்து நிற்கிறவர்களின் போராட்டங்கள்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள்; இறுதிக்கட்டப் போரின் போது, நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதியை வழங்கக் கோரும் போராட்டங்கள், போன்றவை நடக்கின்றன.   

இத்தகைய போராட்டங்கள், போர் முடிவுக்கு வந்த பின்னர், சுமார் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது இவை தீவிரமடையும்; பின்னர் சில நாள்களில் தணிந்து போகும்.  

இலங்கை விவகாரம் ஜெனீவாவில் பேசப்படுகின்ற காலகட்டங்களில் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், அந்தக் கட்டத்தில் எழுப்பும் குரல்கள், ஐ.நாவின் காதுகளில் வலுவாக எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையில், இத்தகைய கூட்டத்தொடர் காலங்களில், நீதிகோரும் போராட்டங்கள் வலுவடைவது வழக்கம்.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர், வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தான், கடந்த சில வாரங்களாகவே, நீதி கோரும் மக்களின் போராட்டங்கள் தீவிரம் பெற ஆரம்பித்திருக்கின்றன.  

ஐ.நாவின் ஊடாகத் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விட வேண்டும்; தாம் எதிர்கொண்ட அநீதிகளுக்கு, நீதியைப் பெற்று விட வேண்டும் என்ற ஆவலில் தான், இத்தகைய போராட்டங்களைத் தமிழ் மக்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் கடப்பாட்டை, சர்வதேச அமைப்புகள் நிறைவேற்றத் தவறியிருக்கின்றன.   

போர்க்கால மீறல்கள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும் தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போதும், எதுவுமே நடந்திருக்கவில்லை.  

ஒட்டுமொத்தத்தில் போருக்குப் பிந்திய 10 ஆண்டுகளில் இலங்கையில் நிகழ்ந்த மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கின்ற முயற்சிகள், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.  

போரின் போது, தமிழர்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதை, போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதை, ஏற்றுக்கொண்ட சர்வதேச சமூகத்தால், ஐ.நா அமைப்பு முறைகளால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவோ, குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவோ முடியவில்லை.  

குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை நிரூபிக்க முடியாமல் போனதால், இந்த நிலை என்று கருத முடியாது. குற்றங்கள் நிகழ்ந்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் பல இருந்தும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும் உருப்படியான எந்தப் பொறிமுறையையும் சர்வதேச சமூகத்தால் உருவாக்க முடியாமல் போனதே, இந்த நிலைமைக்கான காரணம்.  

உருப்படியான ஒரு பொறுப்புக்கூறச் செய்யும் பொறிமுறை உருவாக்கலில் இதுவரை சந்தித்துள்ள தோல்விக்கு, சர்வதேச சமூகம் கையாண்ட வழிமுறை தவறா அல்லது வேறேதும் காரணமா என்று ஆராயப்பட வேண்டியுள்ளது.  

கடந்த நான்காம் திகதி கிளிநொச்சியில், நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், “இலங்கை விவகாரத்தை ஐ.நா பொதுச்செயலாளரிடம் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் காலம் வந்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.  

போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பான தீர்மானங்களை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியவர் விக்னேஸ்வரன். அவர், ஒரு முன்னாள் நீதியரசரும் கூட. ஆனாலும், அவரது எதிர்பார்ப்பும் கருத்தும், வியப்புக்கு உரியவையாக உள்ளன.   

ஏனென்றால், இலங்கை விவகாரத்தை ஐ.நா பொதுச்செயலாளரிடம் கொண்டு செல்லும் நேரம் வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஐ.நா பொதுச்செயலாளரிடம் இலங்கையில் நடந்த மீறல்கள் தொடர்பான விவகாரம் கொண்டு செல்லப்பட்டு, 10 ஆண்டுகளாகின்றன. போர் முடிந்த பின்னர், அதுபற்றி ஐ.நா பொதுச்செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரும் நேரில் வந்து, போர் நடந்த பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.  

போர் முடிந்து ஓர் ஆண்டுக்குப் பின்னரும், பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கை எடுக்காத நிலையில், அதுபற்றி ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவொன்றை 2010இல் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.  

அந்தக் குழுவின் அறிக்கை, 2011இல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் மீது, தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற நிலையில் தான், பான் கீ மூன் அதை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளைக்கு 2012ஆம் ஆண்டு அனுப்பினார்.   

அதை அடிப்படையாகக் கொண்டு தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த அறிக்கையை வைத்து, அவரால் எதுவும் செய்யக்கூடிய நிலை இருந்திருந்தால், பான் கீ மூன், அதை நவநீதம்பிள்ளைக்கு அனுப்பியிருக்கமாட்டார்.  

ஐ.நா பொதுச்செயலாளர் அந்த அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பியிருந்தால், அங்கு ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளாலும் நிராகரிக்கப்பட்டிருக்கும். அப்போதைய நிலையில் மாத்திரமன்றி, இப்போதைய நிலையிலும் கூட, ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாத நிலையே உள்ளது. அதை உணர்ந்தே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக, நெருக்கடி கொடுக்கட்டும் என்று, நவநீதம்பிள்ளைக்கு அந்த அறிக்கையை பான் கீ மூன் அனுப்பியிருந்தார்.  

எனவே, ஐ.நா பொதுச்செயலாளரின் கவனத்துக்கு இலங்கை விவகாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விக்னேஸ்வரனின் கருத்து, வலுவற்றதொன்றாகவே இருக்கிறது.  

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் அதிகாரமற்ற நிலையையும் அரசுகளின் அமைப்பான ஐ.நாவில், நீதி என்பதற்கு அப்பால், அரசுகளின் கூட்டுகளே கவனம் பெறுகின்றன என்பதையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது.   

இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளரிடம் இந்த விவகாரத்தை மீண்டும் கொண்டு செல்வதன் ஊடாக, எதையாவது உருப்படியாகச் சாதிக்க முடியுமா என்றால், அதற்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் தென்படவில்லை.  

அதைவிட, சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்தும் சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை ஒன்றின் ஊடாக, நீதி, பொறுப்புக்கூறலுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஐ.நா பொதுச்சபையை வலியுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.  

ஐ.நா பொதுச்சபை அல்லது பாதுகாப்புச் சபையின் ஊடாக, தமிழர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, உலகின் எந்த நாட்டிடமும் இருப்பதாகக் கூறமுடியாது. ஜெனீவாவில் தீர்மானம் கொண்டு வந்த நாடுகள் மத்தியிலும் அத்தகைய எண்ணப்பாடு இல்லை.  

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்களைக் கொண்டு வந்தமை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தவும் தான் என்ற கருத்துத் தவறானது. அந்த நாடுகள் தமது பூகோள அரசியல் நலன்களை அடைவதற்கு, இந்த மனித உரிமை மீறல் விவகாரத்தை, போர்க்குற்ற விவகாரத்தை ஒரு துருப்புச் சீட்டாகவே பாவித்தன.  

அவ்வாறில்லாவிட்டால், 10 ஆண்டுகளாக நீதிக்காக ஏங்கும் மக்களின் குரல்களை, அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது; அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்க  முடியாது.  

இலங்கையின் ஊடாக, தமது நலன்களை அடைய எத்தனிக்கும் நாடுகள், வரையறுக்கப்பட்ட அழுத்தங்களைக் கொடுக்கும் நகர்வுகளின் ஊடாக, தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டன.

அத்தகைய நாடுகளைப் பொறுத்தவரையில், பாதுகாப்புச் சபையின் ஊடாகவோ, பொதுச்சபையின் ஊடாகவோ இந்தப் பிரச்சினை அணுகப்படுவது சாதகமற்றது. அதனால், இதனை வைத்து, அந்த நாடுகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.  

அதைவிட, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெற்றுக் கொண்டதைப் போன்று, பாதுகாப்புச் சபையிலோ, பொதுச்சபையிலோ, இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தையோ, சுதந்திரமான ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைக்கும் தீர்மானத்தையோ இலகுவாக நிறைவேற்றி விட முடியாது. இந்த யதார்த்தம் வடக்கின் முன்னாள் முதலமைச்சருக்குத் தெரியாதது அல்ல.   

ஆனாலும், அவரும் அவரைப் போன்றவர்களும், இந்த விவகாரத்தை ஜெனீவாவில் இருந்து நியூயோர்க் நோக்கி நகர்த்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.  

ஏனென்றால் இது, எந்தக் காலத்திலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கைகொடுக்கக் கூடிய ஒரு மலிவான பிரசார ஆயுதமாக இருக்கிறது. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிரசார-ஆயுதமாகும்-போர்க்குற்ற-விசாரணை/91-229621

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.