Jump to content

ரவிராஜ்க்கு ஒரு நீதி லக்ஸ்மன் கதிர்காமருக்கு ஒரு நீதியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ்க்கு ஒரு நீதி லக்ஸ்மன் கதிர்காமருக்கு ஒரு நீதியா? மறப்போம் மன்னிப்போம்! – சுமந்திரன்

0a765ae3bb289b44652e0b9938c7e08a?s=26&d=By Admin On Feb 16, 2019
 
 
Share

sumanthiran-300x200.jpg“யுத்தக்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும், எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, போரின் போது ஒரு தரப்பார் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை. உண்மையை கண்டறிந்து, மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார். இதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2009 இலிருந்து வலியுறுத்தி வருகிறது“

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்தரன்.

இன்று (16) யாழில் நடந்த தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்-

தமிழ் இளைஞர்களிடம் பேசும் பலர் பாதி உண்மையை மட்டும்தான் சொல்கிறார்கள். ஊடகங்கள் அதவிட மோசம். அவர்களும் பாதி உண்மையை மட்டும்தான் சொல்வார்கள். தமிழீழு விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் இழைத்தார்கள் என சுமந்திரன் சொன்னார் என்றுதான் சொல்வார்கள்.

யுத்தக்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும், எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, போரின் போது ஒரு தரப்பார் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை. பேரென்றாலே கொடூமானது. உயிரை கொல்வது. மனிதநேயத்திற்கு எதிரானது.

சர்வதேச மேற்பார்வை உள்ளதால்தான், பிரதமர் கிளிநொச்சியில் அந்த கருத்தை சொன்னார். தென்னாபிரிக்காவை போல உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நிறுவி உண்மையை சொல்லலாம் என்ற யோசனையை சொல்லியிருக்கிறார். உண்மையை கண்டறிவோம், மன்னிப்போம், மறப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார்.

உண்மை கண்டறியப்படுவது அத்தியாவசியம். உண்மை கண்டறியப்படாமல், பேசப்படாமல், ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒரு காலமும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. இதை 2009 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வருகிறோம். உண்மை கண்டறியப்பட்டு, அந்த உண்மையின் அடிப்படையில் நீதி செய்யப்பட வேண்டும்.

முதன்முறையாக உண்மையை ஆணைக்குழுவின் முன்பாக வந்து உண்மைகளை சொல்லியுள்ளார். குற்றமிழைத்தவர்களே முன்வந்து, இதைஇதை செய்தோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். தென்னாபிரிக்காவில் நடந்தது அதுதான்.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு அமைத்தபோது, பொலிஸ், இராணுவ அதிகாரிகள் முன்வந்து உண்மையை சொன்னார்கள். முழுமையான உண்மையை சொன்னால் மன்னிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்பதே தென்னாபிரிக்கா கைக்கொண்ட முறைமை.

அப்படி விண்ணப்பித்த பலரது மன்னிப்பு விணணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முழுமையான உண்மையை சொல்லாத பலரது வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நேற்று பிரதமர் சொன்னதில் ஒரு தவறுள்ளது. தென்னாபிரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யவில்லையென்றார். அது தவறு. பலர் மீது வழக்குகள் உள்ளன. அது, அவர்கள் முழுமையான உண்மையை சொல்லாததால் தாக்கல் செய்யப்பட்டது.

படையினரும் குற்றமிழைத்திரக்கலாமென மஹிந்த சொன்னதையோ, கிளிநொச்சியில் பிரதமர் மறப்போம், மன்னிப்போம் என்று சொன்னதையோ ஆதரிக்க முடியாது. இதை பிரதமருக்கு தெளிவாக சொல்லிவைக்க விரும்புகிறோம். உண்மை கண்டறியப்பட வேண்டும்.

பிரதமருக்கு இதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் அதேவேளை, எங்கள் தரப்பிற்கும் இதை சொல்லிக் கொள்ள வேண்டும். எங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி, குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம்.

சட்டமா அதிபர் என்னிடம் கேட்டார், ரவிராஜ் கொலையாளிகளை தண்டிக்க வேண்டுமென நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள்தான் மேன்முறையீடு செய்கிறீர்கள். ஆனால் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கேட்கிறீர்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி, இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதியா என கேட்டார். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்.

எல்லாம் மற்றவர்கள் செய்தவர்கள் என சொல்ல கூடாது. நாங்கள் சுயாதீன குழுவாக சென்று சர்வதேசத்திற்கு சென்று நியாயம் கேட்கும்போது, எங்கள் தரப்பிலிருந்து இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றியும் பேசுகிறோமா என்பதிலேயே அது வெற்றியடையுமா இல்லையா என்பது தங்கியிருக்கிறது.

தந்தை செல்வா- பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் செய்யபோது, அதில் சமஷ்டி என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. செல்வா- டட்லி ஒப்பந்தத்திலும் சமஷ்டி என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சமஸ்டி கட்டமைப்பிலான தீர்வை பற்றி ஒஸ்லோவில் உடன்பாடு எட்டப்பட்டபோது, சமஷ்டி என குறிப்பிடப்படவில்லை என்றார்.

தாரகம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.