Jump to content

ஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன்

குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து எவருமே அக்கறை செலுத்துவதில்லை. கடந்த கால கசப்பான பல சம்பவங்களிலிருந்து அம்மக்களை மீட்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு எம்முன் உள்ளது. 

IMG_0798.JPG

அதற்கு சிறந்த வழி அரசியல் ரீதியான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவே நான் ஜனாதிபதியின் ஆதரவோடும்  மக்களின்  கோரிக்கையோடும் வன்னி மாவட்டத்தில் எனது  அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன் என்று தெரிவிக்கிறார் 

முன்னாள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் விசேட திட்டங்களுக்கான பணிப்பாளரும்  ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன். 

இதேவேளை, நான் பிரதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தலைநகரில் அமைந்துள்ள 46 பாடசாலைகளுக்கும் ஏற்படுத்திக்கொடுத்த வளங்களை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டால் என்னால் கணிசமான வாக்குகளைப்பெற முடியும்.  அது வெற்றியடையச்செய்யும் வாக்குகளாக இல்லாவிட்டாலும் தமிழர் வாக்குகளை சிதறடித்து விடும். 

அதனால் தமிழர் பிரதிநிதித்துவம் ஒன்று இழக்கப்படும் அபாயமே உள்ளது. ஆகையால் தான் நான் ஜனாதிபதியின் ஆதரவோடும்  மக்களின்  கோரிக்கையோடும் வன்னி மாவட்டத்தில் எனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன்.

தனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வீரகேசரிக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு,

கேள்வி: திடீரென வன்னி மாவட்டத்தின் மீது கரிசனை ஏற்படக்காரணம்?

பதில்: ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்துக்கான விசேட திட்டங்களுக்கான பணிப்பாளர் என்ற வகையில் அங்குள்ள மக்களின் நிலைமைகளை நன்றாக அறிந்து வைத்துள்ளேன். அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்களில் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து எவருமே அக்கறை செலுத்துவதில்லை. கடந்த கால கசப்பான பல சம்பவங்களிலிருந்து அம்மக்களை மீட்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு எம்முன் உள்ளது. 

அதற்கு சிறந்த வழி அரசியல் ரீதியான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதே ஆகவே அம்மாவட்டத்தில் எனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன் . இது மக்களுக்கான ஒரு செயற்பாடு என்பதே முக்கியம். இல்லாவிட்டால்   அபிவிருத்திப்பணிப்பாளர் என்ற பதவியில் பேசாமல் இருக்கலாம் அல்லவா?

கேள்வி: வன்னி மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள் இந்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையா?

பதில்: நான் பிரதேசவாதம் பேசவில்லை. ஆனால், யதார்த்தமான உண்மைகள் சிலவற்றை இங்கு முன்வைக்க வேண்டும். வன்னி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப்பார்க்கும் போது ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யக்கூடிய அளவுக்கே இருக்கின்றனர். ஆனால், அங்கு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கணிசமான தமிழ் மக்களும் வாக்களித்துள்ளனர் என்பதே உண்மை. ஏனைய நான்கு ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரியவை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் அரசியல் உரிமை பிரச்சினைகளை விட அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திகளை எதிர்பார்த்துள்ளனர்.   

அதே வேளை இக்கிராமத்தின் முஸ்லிம் கிராமங்களைப்பார்க்கும் போது அங்கு சகல விதங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதிநிதிகளுக்கு தமது வாக்குகளை அளித்த தமிழ் மக்கள் இன்று கைவிடப்பட்டுள்ளனர். கூட்டமைப்பினரும் இவர்களை ஏமாற்றி வருகின்றனர்.   இதற்காக நான் முஸ்லிம் அமைச்சர்களைக் குறை கூறவில்லை மாறாக தமிழ் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய எவரும் அங்கு இல்லை என்பது இப்போதுள்ள குறை.  2013 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களுக்காக அங்கு சென்ற போது மக்கள் படும் அவலங்களை நேரடியாக கண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்தேன்.

கேள்வி: எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போகின்றீர்கள்?

பதில்: ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆனது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. ஆகவே, அதில் நான் போட்டியிடும் எண்ணம் உள்ளது அதே போன்று தனித்துவமாக எனது கட்சியில் போட்டியிடும் தைரியமும் உள்ளது. அதற்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளதையே நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

கேள்வி: ஐ.தே.கவில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டீர்கள் இப்போது அதை விமர்சிக்கும் அளவுக்கு செல்ல காரணம்?

பதில்: 200௧ ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியூடாக சகோதரர் மனோ கணேசன் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். முதற்தடவையாக தலைநகரில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப்பிரதிநிதித்துவமாக அது அமைந்தது. 2004 ஆம் ஆண்டு மேலக மக்கள் முன்னணி என்ற எமது கட்சியினூடாக நான் மேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டேன். 2010 ஆம் ஆண்டும் கூட்டணி அமைத்து ஐ.தே.க யானைச் சின்னத்தில் மனோ கணேசன் கண்டியில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவ நான் கொழும்பில் வெற்றி பெற்றேன். 

இது ஐ.தே.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மட்டுமன்றி எங்களுக்கு ஒரு தேசிய பட்டியலை தருவதாக அச்சந்தர்ப்பத்தில் ரணில் வாக்களித்திருந்தாலும் கூட அதை அவர் செய்யவில்லை.  இதனால்  தலைநகரில் தமிழ் பிரதிநிதித்துவத்தை கட்டியெழுப்ப சகோதரரோடு ஒன்றிணைந்து சேவையாற்ற எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்து தேசிய பட்டியல் மூலம் அவரை உள்ளீர்க்க முன்வந்தும் அதை அப்போதைய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்றுக்கொள்ளவில்லை. 

இவ்வாறு தமிழ் பிரதிநிதிகளை ஏமாற்றும் பண்பு கொண்ட ரணிலின் உண்மை முகம் தெரிய வந்தது. அதன் பின்பு சகோதரர் மனோ கணேசனின் ஆலோசனையின் படியே மாநகர சபை தேர்தலில் ஐ.தே.கவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பஸில் ராஜபக்ஷவை சந்தித்தேன். அதற்கு அவர் நாம் கொண்டு வரும் 18 ஆம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு அளித்தால் 2011 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மாநகர சபை தேர்தல்கள் பற்றி பேசலாம் என்றார். அதன்படி பாராளுமன்றத்தில் நான் அதற்கு ஆதரவாக வாக்களித்தேன். அதேநேரம் தலைநகர் கல்வி அபிவிருத்திக்கு நான் விடுத்திருந்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்றார்கள். ஆனால், என்னை அவ்வாறு செயற்படக்கூறிய மனோ கணேசன் பின்பு என்னுடன் முரண்பட்டார்.

கேள்வி: கல்வி அபிவிருத்திக்காக எவ்வளவு செலவிட்டுள்ளீர்கள்?

பதில்: பஸில் ராஜபக்ஷ எனது கோரிக்கைக்கு செவி சாய்த்து 25 கோடி ரூபாவை கொழும்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கினார். இதன் மூலம் 46 தமிழ் பாடசாலைகளுக்கு கட்டிட,தளபாட ,கணனி வளங்களை,விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் ஏன் 2690 தமிழ் ஆசிரிய நியமனங்களை மேல் மாகாண  தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறேன்.    இதை குறித்த பாடசாலை சமூகமே கூறும்.

கேள்வி: தலைநகரில் கிட்டத்தட்ட 3 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். 3 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இடத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறுவதே சவாலாக இருக்கின்றது இதற்கு என்ன காரணம்?

பதில்: உண்மையில் நீங்கள் கூறும் தொகையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்  பேர் வரையிலேயே வாக்காளர்களாக இருக்கின்றனர். இதில் வடபகுதியைச்சேர்ந்தவர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களில் தேர்தல் காலங்களில் வாக்களிப்பவர்கள் 10 ஆயிரம் பேர் மட்டுமே. அதே போன்று அவிசாவளை,கொலன்னாவ,தெஹிவளை,மொரட்டுவ போன்ற பகுதிகளில் சிங்கள மக்களுடன் கலந்து வாழக்கூடிய தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கே வழங்குவர். மிகுதியான சுமார் 70 ஆயிரம் வாக்குகளே தமிழ் வேட்பாளருக்குக்கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. 

கடந்த முறை மனோ கணேசன் பெற்ற சுமார் 67 ஆயிரம் வாக்குகளில் கூட ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்கவிற்கும் அளிக்கப்பட்ட வாக்குகளும் இருந்தன. இல்லாவிட்டால் இன்னுமொரு பிரதிநிதித்துவமும் கிடைத்திருக்கும். அதாவது தமிழ் வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்ற மனோபாவம் தலைநகர் வாழ் தமிழர்களிடையே இன்னும் வளரவில்லை.

கேள்வி: இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இ.தொ.காவுடன் இணைந்து கொழும்பில் போட்டியிட்டும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறமுடியவில்லையே?

பதில்: உண்மை. ஆனால் தனித்துப்போட்டியிட்டிருந்தால் சில வெற்றிகளைப்பெற்றிருக்கலாம் என்று கூறியவர்களும் இருக்கின்றார்கள் .அதற்காக நான் இ.தொ.கா வை குறை கூற மாட்டேன்.ஏனென்றால் கடந்த முறை நான் தேர்தல் கூட்டணிக்காகவே இ.தொ.காவுடன் இணைந்து போட்டியிட்டேன். அப்போது எமது கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.எனக்கு சின்னம் தேவைப்பட்டது. அதற்காக எனக்கு உதவிகளை நல்கிய இ.தொ.காவுக்கு நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.அதே நேரம் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால் ஆசனங்களைப்பெற்றிருக்கலாம் என்ற மக்களின் எண்ணங்களையும் புரிந்து கொள்கிறேன்.

கேள்வி: புதிய அரசியலமைப்பு பற்றி பேசப்படுகிறதே?

பதில்: மலையகம் மற்றும் தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணி வடபகுதியில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாகத்தான் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாகியது.அப்போது அவர்கள் கூறியது என்னவென்றால் எமது அரசாங்கத்தை நாம் உருவாக்கியுள்ளோம் அதன் மூலமாக எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்பதாகும்.ஆனால் நான்கு வருடங்கள் சென்றும் கூட அரசியலமைப்பு குறித்து எவ்வித முன்னேற்றங்களும் இல்லை. இதனால் மக்கள் வெறுப்பை இவர்கள் சம்பாதித்துள்ளனர். இறுதியாக இருக்கும் ஒரு வருட காலத்தில் என்ன செய்ய முடியும்? 

ஆகையால் அரசியல் அமைப்பை தரப்போகிறோம் என்ற தேர்தல் வாக்குறுதியையே  இவர்கள் முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு நாடகமாகும். அடுத்து  நடக்கவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற இவர்கள் முன்னெடுத்திருக்கும் ஒரு பிரசார நடவடிக்கையே இது. மேலும் இதை சட்டமாக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் தற்போதுள்ள பாராளுமன்றில் அத்தகைய பெரும்பான்மை உள்ள கட்சி ஒன்றுமே இல்லை.

கேள்வி: தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: நான் கொழும்பில் வாழ்ந்தாலும் வடபகுதியோ மலையகமோ அப்பகுதி மக்களுக்கு பிரச்சினையானால் குரல் கொடுக்க என்றும் தயங்கியதில்லை. இம்முறை ஆயிரம் ரூபா சம்பளக்கோரிக்கை தேசிய ரீதியாக எழுச்சி பெற்று சர்வதேசத்தையும் சென்றடைந்து இவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இருந்த போது துரதிர்ஷ்டவசமாக அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டு அவர்களின் போராட்ட வேகத்தில் மந்த கதி ஏற்பட்டது.

அந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்ட தருணத்தில் அதற்கான தீர்வும் கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சினையை தமிழ் முற்போக்குக்கூட்டணி சரியான முறையில் தீர்த்திருக்கலாம்.ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் கதிரையில் அமர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  மட்டுமே அவர்கள் அக்கறை செலுத்தினார்கள்.  

கேள்வி: போதைப் பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகள் பற்றி?

பதில்: அதை வரவேற்கிறேன். இன்று எமது நாடு சிக்கிக்கொண்டிருக்கும் அரசியல் ,பொருளாதார பிரச்சினைகளில் இதுவும் கொழுந்து விட்டெரிகிறது. அதை கட்டுப்படுத்த ஜனாதிபதி எடுத்திருக்கும் சில முடிவுகள் எமது நாட்டின் சுபீட்சத்துக்கு வழிவகுக்கும். எமது சந்ததியினரை பாதுகாக்க சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. வன்னி மற்றும் அதை அண்டிய கடற்பிராந்திய பகுதிகளிலேயே போதை பொருட்கள் எமது நாட்டிற்குள் அதிகமாக ஊடுருவுவதாகக்கூறப்படுகிறது. ஆகவே இதை தடுப்பதற்கு சகல வழிகளிலும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன்.

நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்

 

http://www.virakesari.lk/article/50161

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.