Jump to content

இழுத்தடித்தல் - மாகாண சபைகள் தேர்தல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இழுத்தடித்தல்

மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 02:13 Comments - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, உரியகாலம் வருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னரே, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். ஜோசியக்காரரின் கதையைக் கேட்டே அவர், அவ்வாறு செய்து, தோற்றுப் போனார் என்றாலும், அவரது அரசாங்கம் தேர்தல்களுக்காகப் பின்வாங்கியதாக விமர்சிக்கப்படுவது மிகக் குறைவாகும்.   

ஆனால், தற்போதைய ஐ.தே.மு அரசாங்கம், குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தலை இழுத்தடித்து வருகின்றது என்ற விமர்சனங்கள், பரவலாக எழுந்திருக்கின்றன.   

13ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம், 1988ஆம் ஆண்டு அறிமுகமான மாகாண சபைகள் முறைமையானது, மத்திய அரசாங்கத்திடம் குவிந்துள்ள அதிகாரத்தை, மாகாணங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் கோட்பாட்டின் ஆகக் குறைந்த பட்ச ஏற்பாடு எனலாம். 13ஆவது திருத்தம், முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேறு கதை.   

அது ஒருபுறமிருக்க, யுத்த காலத்தில் இணைந்த வடகிழக்கு மாகாணத்தில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதுடன், ஏனைய மாகாணங்களிலும் தாமதங்கள் நிலவின. யுத்தத்துக்குப் பின்னர், இந்நிலைமைகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாகக் குறிப்பிட முடியும்.   

இவ்வாறான ஒரு பின்னணியில், 2015ஆம் ஆண்டு, நல்லாட்சி என்ற அடைமொழியோடு ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம், தேர்தல் முறைமையை மாற்றி அமைத்தகையோடு, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்பிறகு, மாகாண சபைகளின் தேர்தல், ஆட்சியதிகாரம் உள்ளிட்ட முன்மொழிவுகளைக் கொண்டதாக, அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தது.   

மாகாண சபைகளுக்கு, ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும், என்ற விடயத்தை, 20ஆவது திருத்தம் வலியுறுத்துவதாகச் சொல்லப்பட்டது. அதாவது, 20ஆவது திருத்தத்தின் நோக்கம், அதுமட்டுமே என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைந்த அரசாங்கம், அதில் தோற்றுப் போனது என்றே கூற வேண்டும். ஏனெனில், அதில் வேறுபல விடயங்களும் உள்ளடங்கி இருந்தன.   

அதாவது, அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதி, நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்றும், அத்திகதி இறுதியாக நிறுவப்பட்ட மாகாண சபையின் பதவிக்கால முடிவு திகதிக்குப் பின்னராக இருக்கக் கூடாது என்றும், இது குறிப்பிட்டிருந்தது.  

தேர்தல் நடைபெறும் திகதிக்கு முன்னர், முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம், தேர்தல் திகதி வரை நீடிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற அதேநேரத்தில், குறித்துரைக்கப்பட்ட தேர்தல் திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும் என்றும் இதில் விதந்துரைக்கப்பட்டிருந்தது.   

இதற்கு மேலதிகமாக, ஏதேனும் காரணத்தால், மாகாண சபையொன்று கலைக்கப்படும் பட்சத்தில், அந்தச் சபையின் தத்துவங்கள், குறித்துரைக்கப்பட்ட தேர்தல் திகதி வரை, நாடாளுமன்றத்தால் பிரயோகிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.   

உண்மையில், நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடைபெறுவது நல்ல விடயமே. ஆனபோதும், கடைசியாக ஒரு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடையும் வரைக்கும், மற்றைய எந்தச் சபைக்கும் தேர்தல் நடத்தாமல் தாமதிக்க வேண்டும் என்ற உள்ளர்த்தத்தை இத்திருத்தம் கொண்டிருந்தது.   

இந்நிலையில், கிழக்கு மாகாண சபை கண்மூடித்தனமாக அத்திருத்தத்தை ஆதரித்த போதும், வடமாகாண சபை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்ததுடன், ஊவா, தென் போன்ற வேறுசில மாகாண சபைகள் திருத்தத்தைத் தோற்கடித்தன. அத்துடன், அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.  

அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதற்காகவே, இவ்வாறான முயற்சியொன்றை மேற்கொள்வதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த சூழலில், மேற்சொன்ன சூழலமைவுகளில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் சாத்தியங்கள் குறைவானது என்பதை உணர்ந்து, அம்முயற்சியைக் கைவிட்ட அரசாங்கம், மாற்று நடவடிக்கை ஒன்றை எடுத்தது எனலாம்.   

அதன்படி, 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சியில், அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டது.   

மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில், அரசமைப்பின் 154உ உறுப்புரையின், குறிப்பிட்ட ஒரு பகுதியானது, ‘அரசமைப்பின் 154ஈஈ எனும் உறுப்புரையின் நியதிகளின் படி குறித்துரைக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒன்றை நடத்துதல் என்று திருத்தப்படுகின்றது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  

அதாவது, 20ஆவது திருத்தத்தில் கொண்டுவர எத்தனித்த, ‘ஒரே நாளில் தேர்தல் நடத்துதல்’ என்ற விடயத்தை, மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டத்தின் ஊடாக, அரசாங்கம் கொண்டுவந்தது எனலாம். இத்திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையால், இப்போது ஒரே தினத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டிய நியதி காணப்படுகின்றமை நினைவில் கொள்ளத்தக்கது.   

நாட்டிலுள்ள மாகாண சபைகளுக்கு, இதற்கு முன்னர் தேர்தல் இடம்பெற்ற திகதியின் அடிப்படையில், ஐந்து வருட ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்த ஆறு மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து விட்டது. மூன்று சபைகளே, காலாவதியாகும் காலத்தை எதிர்பார்த்தனவாக இன்னும் ஆட்சியில் உள்ளன.  அந்தவகையில், கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் ஆட்சிக்காலம், 2017இல் முடிவுக்கு வந்துவிட்டது. வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களின் ஆயுட்காலம், கடந்த வருடம் நிறைவடைந்தது. இந்தச் சபைகள் எல்லாம் இப்போது மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.   

இந்நிலையில், தெற்கு, மேற்கு ஆகிய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவடைய இருக்கின்றது. அத்துடன், ஊவா மாகாணத்துக்குத் தேர்தல் நடைபெற்று, செப்டெம்பர் 20 உடன் ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன.   

இதற்கிடையில், தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்த அரசாங்கமானது மாகாணங்களுக்கும் கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னேற்பாடாக மாகாண எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், முஸ்லிம்களுக்குப் பாதகமான பல முன்மொழிவுகள் இருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.   

அதேநேரத்தில், திட்டமிட்டபடி அதைக் குறுகிய காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நடைமுறைச் சிக்கலை அரசாங்கம் எதிர் கொண்டுள்ளது எனலாம். அப்படி நிறைவேற்ற முடியாவிடின், பழைய விகிதாசார முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அதிகாரக் குத்துவெட்டுகள், அறுதிப் பெரும்பான்மையுடனான அரசாங்கம் ஒன்றை நிறுவுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை போன்ற நெருக்கடியான இன்றைய களச் சூழலில், அரசாங்கம் குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பின்வாங்குவதாகப் பரவலான அபிப்பிராயங்கள் வெளியிடப்படுகின்றன.   

அத்துடன், தேசிய அரசாங்கம் பற்றியும் ஜனாதிபதித் தேர்தல், அதன் வேட்பாளர் யார் என்பது பற்றியெல்லாம் பேசப்படுகின்றதே தவிர, மாகாண சபைத் தேர்தல் குறித்து திட்டவட்டமான அறிவிப்பு வெளியானதாகத் தெரியவில்லை. இந்நிலையில், மிக அண்மையில் வெளியாகியுள்ள இரண்டு அறிவிப்புகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியன.  

“எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்றால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் என்ற எனது பதவியை இராஜினாமாச் செய்வேன்” என்று மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கின்றார்.   

அதன்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்னர், நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, “கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய்வோம்” என்ற அறிவிப்பை வெளியிட்டியிருக்கின்றார். ஜனநாயக விரும்பிகளான மக்களுக்கு, இது ஆறுதலை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.  

நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில், ஆறு மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், ஏற்கெனவே முடிவடைந்து விட்டது. மீதமிருக்கின்ற இரண்டு சபைகளினதும் ஆயுட்காலம் மார்ச் மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ளது. ஊவா மாகாண சபையின் ஆட்சி செப்டெம்பர் மாதத்தோடு முடிவுக்கு வருகின்றது.   

இதன்படி, ஆறு மாகாணங்களிலுள்ள மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி செய்வதற்கு வழங்கிய ஆணை காலாவதியாகி விட்டது. மேலும், மூன்று மாகாணங்களிலுள்ள மக்களின் ஆணையும் காலாவதியாகப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும்.   

மார்ச் மாதத்தோடு, எட்டு மாகாண சபைகளின் காலம் முடிந்துவிடுமானால், மீதமுள்ள ஊவா மாகாண சபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஒரேநாளில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எந்தத் தடையுமில்லை. ஒரு வருடத்துக்கும் குறைவான ஆயுட்காலத்தையே கொண்டுள்ள அரசாங்கத்துக்கு அதுவே சிறந்த தெரிவாகவும் இருக்கும்.   

அண்மையில், ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டி வந்தபோது, அதை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்றும் மக்கள் வழங்கிய ஆணையை உறுதி செய்யவேண்டும் என்றும் கூறியே, ஐ.தே.கவும் முஸ்லிம், தமிழ்க் கட்சிகளும் களத்தில் இறங்கிப் போராடின. உரிய காலத்தில் தேர்தலை நடத்துவது அதைவிட, ஜனநாயகத் தன்மை வாய்ந்தது.   

எனவே, இனியும் மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது. இறைமையைத் தம்வசம் வைத்திருப்பவர்களான மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையூடாக, மாகாணங்களை ஆட்சி செய்வதற்கான ஆணையைப் புதுப்பித்துக் கொள்ளும் விதமாக, மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.   

இரு கருத்துகள்:  ஜனாதிபதி மைத்திரியும் தவிசாளர் மஹிந்தவும்

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற, மக்களின் எதிர்பார்ப்புக்கு சமாந்தரமாக, உரிய காலத்தில் அது நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில், நாட்டின் ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியமானவையாகத் தோன்றுகின்றன.  

image_9fe7c3a1d8.jpg“இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஆராய்ந்து, அறுதியும் உறுதியுமான ஒரு தீர்மானத்தை எடுக்கப் போகிறேன்” என்று இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.   

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான மஹிந்த தேசப்பிரிய, “இந்த வருடம் செப்டெம்பர் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறவில்லை என்றால், நான் வகித்துவரும் தவிசாளர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வேன்” என்று சற்றுக் காட்டமான அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே, ஜனாதிபதி மேற்கண்ட விதத்தில், அமைச்சரவையில் உறுதியான கருத்தைத் தெரிவித்திருந்தார்.   

image_c70b04b6dd.jpgஇதற்கிடையில், “முன்கூட்டியே தேர்தலை நடத்தும் முட்டாள்தனமான செயலைச் செய்து, நான் தோற்றுப் போனதுபோல, நீங்களும் செய்ய வேண்டாம்” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்குக் கூறியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் உரைநிகழ்த்தியதாகவும் இன்னுமொரு தகவல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.   

எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் உத்தேசத்துடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சவையில் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். அந்த அடிப்படையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் ஆராயப்படலாம்.  

குறிப்பாக,  பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதா? இல்லை புதியமுறையிலா? என்பது குறித்துப் பரிசீலிக்கப்படலாம். ஏனெனில், பழைய முறையில் நடத்துவதென்றால் சட்டத்தைத் திருத்த வேண்டும். அத்துடன், புதிய முறையில் என்றால், எல்லை மீள்நிர்ணயச் சிக்கலுக்கு முடிவுகாண வேண்டும்.  
தேர்தல் நடத்துவதாயின் மீதமாகவுள்ள மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவுக்கு வரவேண்டும்; அன்றேல், கலைக்கப்பட வேண்டும். அத்துடன் மாகாணஆளுநர்களின் சம்மதம் பெறுதல், ஏனைய ஒழுங்கு முறைகள் குறித்தும் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடும் வாய்ப்புள்ளது.  

முஸ்லிம்களின் எண்ணம்  

மாகாண சபைத் தேர்தலொன்று நடைபெறுமாயின், அதற்கான வாக்கெடுப்பைப் பழைய விகிதாசார முறைப்படியே நடத்த வேண்டும் என்பதே, முஸ்லிம்களின் எண்ணமாக இருக்கின்றது.   

மாகாண எல்லை மீள்நிர்ணயத்துக்கான பரிந்துரையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் இறுதி அறிக்கையானது, அக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகித்த பேராசிரியர் மர்ஹூம் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் முன்னெச்சரிக்கை செய்தது போலவே, முஸ்லிம்களுக்குப் பாதகமான பல பரிந்துரைகளை உள்ளடக்கி இருக்கின்றது.   

முன்பிருந்த விகிதாசாரத் தேர்தல் முறைமையைப் போலேனும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விதத்தில், மாகாணங்களினதும் அதற்குள் அடங்கும் தொகுதிகளினதும் எல்லைகள் பரிந்துரை செய்யப்படவில்லை. அத்துடன், அதே காரணத்துக்காக இரட்டை அங்கத்தவர் தொகுதிகளையும் அக்குழு முன்மொழியவில்லை.   

எனவே, இவ்வாறான குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் புதிய கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், பொதுவாக நாடு தழுவிய ரீதியிலும் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியில் வெகுவாகக் குறைவடையும் என்று முஸ்லிம்கள் நியாயமாக அச்சப்படுகின்றனர்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இழுத்தடித்தல்/91-229681

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.