Jump to content

இன்று ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dc-Cover-ssn7u0rpcvirpgdgg2ska3tc63-20180607055256.Medi_-720x450.jpeg

ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,600 மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகருக்குள் வரக்கூடிய அனைத்து வீதிகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்துவதற்கான பணியிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலம் தூத்துக்குடி நகர் முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்தது. எனினும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7ஆம் திகதியன்று திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://athavannews.com/ஸ்டெர்லைட்-வழக்கின்-தீர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

ஸ்டெர்லைட்டை திறக்க தடை என்பது மட்டும் தான் முன்னிலைப்படுத்தப்படும். 
ஆனால் பிரச்சினை இன்னும் முடியவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.