Jump to content

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை


Recommended Posts

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும்.

இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை இங்கிருந்த நடத்த முடியும்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, ஓடுபாதை அபிவிருத்தியை முன்னுரிமை கொடுத்து முதற்கட்டமாக மேற்கொள்ளுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அருகில் உள்ள கட்டடங்களை தற்காலிகமாக புறப்படுகை மற்றும் வருகை முனையங்களாகப் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறான நடைமுறை பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிரந்தர முனைய கட்டடங்களை இரண்டாவது கட்ட அபிவிருத்திப் பணியின் போது கட்ட முடியும் என்றும்,  முதலில் விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் உயர் முன்னுரிமை கொடுப்பதாகவும், குடாநாட்டின் அனைத்துலக விமான நிலையம் பிராந்தியத்தில் பாரிய பொருளாதார எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது விமான நிலையத்துக்கான மின்சாரம் , குடிநீர் வசதிகள், வீதி, எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதிகள் தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், வடக்கிலுள்ள மக்களுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என்றும்,  வணிக மற்றும் தொழில் வாய்ப்புகள் கிட்டும் என்றும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2019/02/18/news/36467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அவுஸ்ரேலியா

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

ஒரு  செக்கன்  என்றாலும் கற்பனை  செய்ய  விடமாட்டீயளே...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

அவையள் வாயாலை வடை சுட்டுக்கொண்டிருக்கினம்....நீங்களும்  இதை ஒரு கதையெண்டு தூக்கிபிடிக்கிறியள்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இது செய்யாப்படும். இதன் மூலம் பல புலம்பெயர் மக்கள் நன்மையடைவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஏ-320, ஏ—321 விமானங்கள்

அவற்றின் அதிக பட்ச பறப்பு 6500km என்கினம் நேரடி பறப்பு கேள்விதான் .

5 minutes ago, colomban said:

நிச்சயமாக இது செய்யாப்படும். இதன் மூலம் பல புலம்பெயர் மக்கள் நன்மையடைவர்.

புலம்பெயருக்கு பூசை பண்ணி காரியம் ஆகாது  வடகிழக்கில் ஓரளவுக்காவது இயல்பு நிலையை கொண்டுவந்து கேப்பபிளவு போன்ற இடமக்களுக்கு காணியை குடுத்து கள்வர் கொள்ளையர் வால் வெட்டு குழுக்களை அடக்கினாலே புலம்பெயர் எட்டிபார்க்கும் இல்லையேல் அங்கு வந்து திரும் புவர்கள் தான் அடிக்கடி வருவினம் இன்னும் 40 வருடம்கள் தாண்டி சொந்த மண்ணை பார்க்காத புலம்பெயர் நிறைய இருக்கினம் . இன்னும் பதின்ஐந்து இருபது வருடங்களில் இவ்வளவு பேர் போய் வருவார்களா என்பது கேள்வி குறி தான் .

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

அவற்றின் அதிக பட்ச பறப்பு 6500km என்கினம் நேரடி பறப்பு கேள்விதான் .

The aircraft family can accommodate up to 236 passengers and has a range of 3,100 to 12,000 km (1,700 to 6,500 nmi), depending on model.

https://en.wikipedia.org/wiki/Airbus_A320_family

6 hours ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

ஆனால் Melbourne க்கு நேரடி சேவை இருக்குதே // தெரியாதா 

பறப்பு நேரம்  - 10 மணி 05 நிமிடம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ஒரு  செக்கன்  என்றாலும் கற்பனை  செய்ய  விடமாட்டீயளே...??

விசுகர்! சிங்கள சிறிலங்காவை வைச்சு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ.....

முருகண்டி கோயில் வாசல்லை கொத்துரொட்டி கடை இருக்கிற மாதிரி நான் கனவு கண்டன்......இத்து எப்பிடியிருக்கு? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

நிச்சயமாக இது செய்யாப்படும். இதன் மூலம் பல புலம்பெயர் மக்கள் நன்மையடைவர்.

சிங்கள அரசுக்கு ஈழத்தமிழர்கள் பொன்வாத்து முட்டை மாதிரி.

அது அன்றும் இன்றும்...
சேர்.பொன் இராமநாதன் காலம் தொட்டு இன்றுவரைக்கும் தமிழர்களிடமிருந்தே சகலதையும் அறுவடை செய்கின்றார்கள்.

இது இப்படியிருக்க....

பலாலி விமானநிலையத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால் கதை அவ்வளவுதான்.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இலையான் அடிக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அவையள் வாயாலை வடை சுட்டுக்கொண்டிருக்கினம்....நீங்களும்  இதை ஒரு கதையெண்டு தூக்கிபிடிக்கிறியள்...:grin:

எலக்சனில நிக்கிறார் ரணில்... இன்னும் வடை சுடுவார்....

அது சரி, மகிந்த கட்சியின் துட்டு வள்ளல், ஒரு பெரிய தூள் கோஸ்டியை, துபாயில நரித்தனமா மாட்டி வைத்துட்டாராமே...

 

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

எலக்சனில நிக்கிறார் ரணில்... இன்னும் வடை சுடுவார்....

இனப் படுகொலைகாரர்களின் ஜால்ரா கோஷ்டிகள் இப்போதிருந்தே "எல்லாம் அந்தமாதிரி இருக்கு" என்று துள்ளப் போகிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

விட்டுபாத்தவங்கள் நீங்கள் ஒருவருமே ஏறவில்லை என்று நிற்பாட்டிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

The aircraft family can accommodate up to 236 passengers and has a range of 3,100 to 12,000 km (1,700 to 6,500 nmi), depending on model.

https://en.wikipedia.org/wiki/Airbus_A320_family

ஆனால் Melbourne க்கு நேரடி சேவை இருக்குதே // தெரியாதா 

பறப்பு நேரம்  - 10 மணி 05 நிமிடம் 

அதுதான் சிட்னி என்று போட்டிருக்கிறேன்....மெல்பேர்ன் தெரியும்:14_relaxed:

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

 

பலாலி விமானநிலையத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால் கதை அவ்வளவுதான்.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இலையான் அடிக்க வேண்டியதுதான்.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால், மத்தள விமான நிலையத்தைவிட பரிதாபமாக இருக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையம்போல் ஒருபோதும் வராது.

Link to comment
Share on other sites

8 minutes ago, thulasie said:

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால், மத்தள விமான நிலையத்தைவிட பரிதாபமாக இருக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையம்போல் ஒருபோதும் வராது.

அது வடபகுதியின் வர்த்தக பொருளாதார வளர்சசி, சுற்றுலாத்துறை வளச்சி போன்ற விடயங்களில் தங்கி உள்ளது. பரிதாபமாக இருக்கும் என்று எடுத்த எடுப்பில் கூற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தி வட பகுதியை ஒர் சிறந்த ஆன்மிக சுற்றுலாதளமாக மாற்றலாம். இதன் மூலம் பல அன்னிய செலவாணியை பெறலாம். தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தி வட பகுதியை ஒர் சிறந்த ஆன்மிக சுற்றுலாதளமாக மாற்றலாம். இதன் மூலம் பல அன்னிய செலவாணியை பெறலாம். தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும்

  • பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தி வட பகுதியை ஒர் சிறந்த மகிழ்சியான சுற்றுலாதளமாக மாற்றலாம். இதன் மூலம் பல அன்னிய செலவாணியை பெறலாம். தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி கொழும்புக்கு வர தேவையில்லை நேரடியாக பலாலிக்கு வந்தே இறங்கலாம், டோன்ற் வெறி அவனுகள் செய்யுறானுகள் இல்லையோ அப்படி சர்வதேச விமான நிலையமாகினால் கனபேர் வந்து இறங்குவார்கள் என நினைக்கிறன் இது கற்பனக்கல்ல  அப்படியே யாழில் தரமான ஆஸ்பத்திரி , கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் வடக்கு செம யான அபிவிருத்தி காணப்போகிறது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

விட்டுபாத்தவங்கள் நீங்கள் ஒருவருமே ஏறவில்லை என்று நிற்பாட்டிவிட்டார்கள்.

இனியும் ஏறமாட்டோம்... I love.பண்டாரநாயக்க விமானநிலையம்:14_relaxed:

34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இனி கொழும்புக்கு வர தேவையில்லை நேரடியாக பலாலிக்கு வந்தே இறங்கலாம், டோன்ற் வெறி அவனுகள் செய்யுறானுகள் இல்லையோ அப்படி சர்வதேச விமான நிலையமாகினால் கனபேர் வந்து இறங்குவார்கள் என நினைக்கிறன் இது கற்பனக்கல்ல  அப்படியே யாழில் தரமான ஆஸ்பத்திரி , கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் வடக்கு செம யான அபிவிருத்தி காணப்போகிறது :)

அப்படி வரும் என்று நாங்கள் 74,75 ஆண்டுகளில் நினைத்தோம்....யாழில் நியுமார்க்கட்,புகையிரத நிலையம் எல்லாம் கட்டி அழகாக இருந்த காலம் ஒன்று இருந்தது அதை திட்டமிட்டு நாசமாக்கியோர் யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை....ரணில் விரும்பினாலும் மகிந்தா விரும்பவேணுமே.... 

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

அப்படி வரும் என்று நாங்கள் 74,75 ஆண்டுகளில் நினைத்தோம்....யாழில் நியுமார்க்கட்,புகையிரத நிலையம் எல்லாம் கட்டி அழகாக இருந்த காலம் ஒன்று இருந்தது அதை திட்டமிட்டு நாசமாக்கியோர் யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை....

ஐயோ

அந்தாள் துரோகியல்லோ 

சுட்டுக் கொன்றவர்கள் தியாகிகள் இல்லையா 

என்ன லொள்ளப்பா இது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

ஐயோ

அந்தாள் துரோகியல்லோ 

சுட்டுக் கொன்றவர்கள் தியாகிகள் இல்லையா 

என்ன லொள்ளப்பா இது 

தியாகி ,துரோகி எல்லாம் இதுக்குள் எதற்கு ஜீவா.....காவல் காக்க வேண்டிய பொலிஸார் அதை அந்த மார்க்கட்டை எரித்து நாசமாக்கியதை தான் சொன்னேன் ....அன்றே மத்திய அரசு தகுந்த நட‌வடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வளவு தூரம் இது போய் இருக்காது..

.அது சரி சிறந்த நூலகத்தை எரித்தவர்களுக்கு மார்க்கட் எரிப்பது பெரிய வேலையா என்ன?

தேர்தல் காலத்தில் எவ்வளவு வாக்குறுதிகளையும் வழங்கலாம் ,ரணில் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்.....ம‌கிந்தா வந்தால் நிச்சயம் இது நடக்காது(விமான நிலையம் ,காகேசந்துறை திட்டங்கள்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.