Jump to content

ஸ்டெர்லைட் தீர்ப்பு: ’மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி’ - வைகோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ஸ்டெர்லைட்படத்தின் காப்புரிமை Getty Images

"ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது." என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துவக்கம் முதலே போராடி வந்தவரும் வழக்கில் வாதிட்டவருமான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நீதி வென்றது, அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது. ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஆனால், தாங்கள் உச்ச நீதிமன்றம் கூறியபடி உயர்நீதிமன்றத்தை விரைவில் அணுக உள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ ராம்நாத் தெரிவித்திருக்கிறார். தீர்ப்பு வெளிவந்த பிறகு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரித்து முடிவெடுக்குமாறு கூறியுள்ளதால், நாங்கள் மீண்டும், உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். இந்த உத்தரவின் கோப்புகளை முழுவதுமாகப் படித்து, அதில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை பார்த்து முடிவுசெய்வோம்.

எங்களின் ஆலையிலிருந்து எந்த கழிவும் வெளியேறுவதில்லை என பசுமைத் தீர்ப்பாயமே தெரிவித்துவிட்டது. 2013லேயே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆலையின் மேலாண்மை குறித்தே உச்சநீதிமன்றத்தில் பேசியுள்ளனர். ஆலையின் சிறப்பம்சங்கள் (Merits) குறித்து பேசவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில், சிறப்பம்சங்கள் குறித்து நாங்கள் முன்வைப்போம். அவை எங்களுக்கு சாதகமாக இருப்பதாக் கருதுகிறோம்" என ராம்நாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

’தொழிற்சாலைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது’

இன்று வெளிவந்த தீர்ப்பை தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்தத் தீர்ப்புத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி. தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்குவதை வரவேற்கிறோம். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டார். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "இந்தத் தீர்ப்பு தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட ஒன்று என்பதையும், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடரும்போது ஆலை மூடப்பட்டதற்கான காரணங்களை ஆதாரங்களுடன் பட்டியலிடவும் வலிமையான வாதங்களை முன்வைக்கவும் தமிழக அரசு தயாராக வேண்டும்" என அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆலை மூடப்பட்டே இருக்கும்: தூத்துக்குடி ஆட்சியர்

இந்தத் தீர்ப்பு வெளிவந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படிதான் இந்த ஆலை மூடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டால், அது குறித்து விசாரிக்கும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லையென வாதிடப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த ஆலை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும். தேவைப்பட்டால் தொடர்ந்து இது தொடர்பான வழக்குகளைச் சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

வேதாந்தாபடத்தின் காப்புரிமை VEDANTA

ஸ்டெர்லைட் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாவதை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. "காவல்துறை பாதுகாப்பு, அந்தந்தச் சூழலைப் பொறுத்து அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்" எனவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம்

ஸ்டெர்லைட் வழக்கில் எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என மூத்த பத்திரிகையாளர் ஜெ. வெங்கடேசனிடம் கேட்டபோது, "இந்த மேல்முறையீட்டில், தமிழக அரசு வைத்த முக்கிய வாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்பதுதான். இதில் சுற்றுசூழல் பாதிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு சட்ட பிரச்னைகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், ஆலையை சேர்ந்தவர்கள் எவ்வாறு மாசுகளையும், கழிவுகளையும் வெளியிடுகிறார்கள் என்பது குறித்து பசுமை தீர்ப்பாயம் முழுமையாக விசாரிக்கவில்லை என்ற வாதத்தையும் அவர்கள் தங்களின் குறிப்புகளில் தெரிவித்து இருந்தனர். அதனடிப்படையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.இந்த மேல்முறையீட்டின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்ற அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில், தமிழக அரசு மேல் முறையீட்டில் கூறியிருந்ததை முழுமையாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இதை விசாரிக்க முகாந்திரம் இல்லை. ஸ்டெர்லைட் புதிய ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளன.

ஸ்டெர்லைட்

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூடுவதற்காக அளித்த உத்தரவிற்கு தடை வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை கேட்பதால், அதை சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது" என்று விளக்கினார்.

https://www.bbc.com/tamil/india-47278282

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.