Jump to content

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை


Recommended Posts

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை

 

ferry-300x199.jpgபொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“இந்தியாவின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது. இந்தியாவின் உதவியுடன் அங்கு புதிய முனையம் அமைக்கப்படும்.

அங்குள்ள பழைய சீமெந்து தொழிற்சாலை அகற்றப்படும். அங்கு புதிய முனையம் அமைக்கப்படும்.

மன்னார்- வவுனியா- திருகோணமலை இடையிலான நெடுஞ்சாலைக்கும் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இந்த தாங்கிகள் எமது தேவைக்கும் அதிகமானவை. எனவே இந்தியாவின் தேவைக்கான எண்ணெயையும் இங்கு களஞ்சியப்படுத்தப்படும்.

வடக்கில் தென்னைகளைப் பயிரிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இங்கு காணிகளை வாங்கி தென்னைகளை பயிரிட பாரிய தோட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

சிறிய காணிகளை உரிமையாளர்களிடம் இருந்து அவர்கள் குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். கூட்டு முயற்சி நிறுவனங்களையும் இயக்கலாம்.

அதுபோல பனைமரங்களை பயிரிடும் திட்டமும் விரிவுபடுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/02/19/news/36489

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கப்பல் சேவையினால் தென்னிந்திய குப்பைகள் இலங்கைக்கு வராமல் இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

இந்த கப்பல் சேவையினால் தென்னிந்திய குப்பைகள் இலங்கைக்கு வராமல் இருக்க வேண்டும்

 தென்னிந்திய குப்பைகளை நுகராத தமிழினம், இலங்கையில்  இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இந்த கப்பல் சேவையினால் தென்னிந்திய குப்பைகள் இலங்கைக்கு வராமல் இருக்க வேண்டும்

கடுமையான கண்டனங்களை  தெரிவிக்கின்றேன்

முதலில்  உங்களை துடையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ரணில் வெறும் பிரதமர் மட்டுந்தான்  என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். இந்தத்திட்டங்களால் பயன்படப்போவது உள்ளுர் மக்களா அல்லது இந்தியாவா சிறிலங்காவா? முதலில் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு  அமைய அவர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும். தமிழ் பிரதேசங்களிலிருந்து  இராணுவம் திரும்பப் பெறப்பட்டு காடையர் வாள்வெட்டுக்குழு என்பன அடக்கப்படவே ண்டும். இவை நடைமுறைப்படுத்தப்படாவிடின் எந்தத்திட்டங்களும் தமிழருக்கு உதவாத திட்டங்கள்தான். எமது மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ ஆவன செய்துகொடுக்கப்படவேண்டும்.

ரணில் சொல்வது  வெறும் திட்டங்கள் மட்டுந்தானா  அல்லது திரைமறைவில் போடப்படும் சதிவலையா? மகிந்த  ரணிலின் அரசைக் கவிழ்க்க சதிப்புரட்சி செய்தபோது  பரிதாபகரமாக அலரிமாளிகையில் ஒழிந்திருந்த ரணில் தமிழ் பிரதேசங்களில் புதிய திட்டங்கள் பற்றி பேச புறப்பட்டிருக்கிறார்.  இவை நாடாளுமன்ற தேர்தல் ஒன்று வரப்போவதை கட்டியங்கூறுகிறது.

இந்தியா இதுவரை சிறிய படகில் தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்த போதைப்பொருட்கள் இனிமேல் பொதுமக்களின் பாவனைக்கென்று விடப்படும் பெரியகப்பல்களில்  கொள்கலன்களில் ஏற்றப்பட்டு இலங்கை இந்திய அரசுகளின் முழு ஆசீர்வாதத்துடன் அனுப்பிவைக்கப்படும். அவற்றை முஸ்லிம் அரசியல்வாதிகளும் இராணுவ காடையர்ககளும் தமிழ் பிரதேசங்களில் விற்று எமது இளைய சமுதாயத்தைச் சீரழிப்பார்கள்.

ஆமாம் வடக்கில் எல்லா இடத்திலும் தென்னையை பயிரிடுங்கள் அதைவைத்து தமிழ் சமுதாயம் தலைமுறை தலைமுறையாக தேங்காயில் நார் புடுங்கி வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு ரணில் புதிய வழியொன்றைச்சொல்கிறார். பாரிய தோட்ட நிறுவனங்களில்  வகைதொகையின்றி சிங்களைவர்கள் வேலைக்கமர்த்தப்படுவார்கள்.  எமது தமிழ் அரசியல் வாதிகளுக்கோ சிங்கள அரசின்  கபடத்தனமான நிகழ்ச்சிநிரலுக்கெதிராக ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட திராணியில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.