Jump to content

ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’

Editorial / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:13 Comments - 0

 -க. அகரன்

‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய காலத்தில் வழங்கப்படும் பட்சத்திலேயே, அதற்கான பெறுமதியும் தீர்வும் தர்மத்துக்கும், நியாயத்துக்கும் அதற்கும் மேலாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கும் ஏற்புடையதாக இருக்கும்.  

image_b68451f401.jpgஇலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளக விசாரணைகளின் ஊடான சாதாரண வழக்குகளும் சரி, பாரிய வழக்குகளுக்கும் சரி, கால நீடிப்பின் பின்னரே, தீர்ப்புக் கிடைக்கின்ற நிலை காணப்படுகின்றது. அது, இலங்கை நீதிச்சேவையின் பலவீனமான, இறுக்கமற்ற தன்மையில் காரணமானது என்பது, அதுகுறித்து முன்வைக்கப்படும் விமர்சனம் ஆகும்.   

இந்நிலையில், தமிழ் மக்களின் வரலாற்றுத் தடத்தில் பதியப்பட்ட முள்ளிவாய்க்கால் கொடூரங்களுக்கான நீதி, எந்தப் பொறிமுறையின் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்ற, ஆரம்பப்புள்ளி விடயமே முடிவுக்கு வராமல், 10 வருடங்கள் கடந்து விட்டன. இந்தவிடயத்தில், நீதி வழங்குவதற்குள்ள அக்கறை குறித்தும் அது, எந்தளவுக்கு வலுவிழந்து செல்கிறது என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. 

இவ்விடத்தில், குறித்த கொடூரங்களுக்கான நீதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்குமா, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்குமா? அதன் சாத்தியப்பாடுகள் குறித்த கோணத்தில் பார்க்கின்றபோது, சற்றுச் சஞ்சலத்துக்குரிய விடைகளே கிடைக்கப் பெறுகின்றன.  

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்கொண்டு செல்லப்பட்ட, இறுதி யுத்தம் தொடர்பான நீதி விசாணைக்கான ஆதரவுக் களம், அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகள், எந்தளவுக்குத் தற்போதும் சிரத்தையுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயம் தொடர்பில், தமிழ் மக்களால் செலுத்தப்படும் கவனம், தமிழ்  அரசியல் தலைமைகளால் செலுத்தப்படுவதில்லை என்ற உண்மை கசக்கத்தான் செய்கிறது.  

ஐ. நாவால், இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள், இன்று பின்பற்றப்படுவதாகவோ, அது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவோ பதிவுகள், போதியளவில்லை காணப்படாத நிலை உள்ளது.   

ஜெனீவா மனித உரிமைகள் போரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர், ஆண்டு தோறும் நடத்தப்படும் சில கருத்தரங்குகளும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் வடக்கு, கிழக்கு நோக்கிய படையெடுப்புகளும் ஜெனீவாவை ஏமாற்றும் களங்களாக, தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றன.   

குறிப்பாக, ஜெனீவா கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதிகளான மார்ச், செப்டெம்பர் மாதங்களுக்கு அண்மைய நாள்களில், வடக்கு நோக்கி மய்யம் கொள்ளும் தெற்கு அரசியல்வாதிகளின் பார்வை, நிலைமாறு கால நீதிக்கான பொறிமுறைகளைக் கொண்டமைந்துள்ளதா என்பதைச் சற்று அவதானிக்க வேண்டும். 

காணிகள் விடுவிப்பு, இன்றளவும் வடக்கிலும் கிழக்கிலும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கேப்பாப்புலவில் இன்றுவரையும் இராணுவ முகாமுக்கு முன்பான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

ஆண்டுதோறும் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்யும் இலங்கை அரசாங்கம், மக்கள் காணிகளில் இருந்து, இராணுவ முகாம்களை அகற்றுக்கின்ற போது, மீள்குடியேற்ற அமைச்சிடம் நிதியைப் பெற்றே, மற்றைய முகாமை அமைக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.    

எனினும், மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளே வழங்கப்படுவதால், அந்த மக்கள் கடன் சுமைக்குள் தள்ளப்படும் சம்பவங்கள் நிகழ்தேறி வருகின்றன. இவை மீள்குடியேறிய மக்கள் மத்தியில், கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு வழிசமைக்கின்றமையை எவரும் உணரத்தலைப்படவில்லை.  

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பான விடயம், இதுவரை முழுமை பெறாத நிலையில், இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்டும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் போராட்டம் அவர்களது உறவுகளால் இன்றை வரை இரண்டு வருடங்களையும் கடந்து இடம்பெற்று வருகின்றது. இதற்கான தீர்வு கிடைக்காத நிலையிலேயே இப்போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் 18 பேர் வரையில் மரணித்திருக்கின்றார்கள்.  

பல ஆணைக்குழுக்கள், ஜெனீவாவை மய்யப்படுத்தி காலத்துக்குக் காலம் அமைக்கப்பட்டு வந்தாலும் கூட, காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் இல்லை. அவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்தை நம்புகின்ற நிலைப்பாட்டில் இருந்து, விலத்தியே உள்ளனர். இதனை, வெளிப்படையாகவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தங்களது விடயத்தில், நேரடியாகத் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி, பாரிய கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.  

இந்நிலையிலேயே தமிழ்த் தலைமைகள் ஜெனீவா கூட்டத்தொடருக்கான அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒரு சாரார் நீதி கோரிய போராட்டங்களையும் ஜெனீவா கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்ககூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். மறுசாரார், கால அவகாசம், தேவையான விடயம் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.  

வடக்கு நோக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின்போது, கிளிநொச்சியில் வைத்து “மறப்போம் மன்னிப்போம்” என்ற, சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தபோது, கூட்டமைப்பின் தலைமைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்தை முன்வைக்காமை தொடர்பில், பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.  

தமிழர்கள் மறக்கமுடியாத துன்பியலுக்குள் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், அதற்கான நீதி கோரிய தமது போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதை மறந்து விடுவது என்பது, எந்தளவுக்குச் சாத்தியப்பாடுகள் நிறைந்தது என்பது தொடர்பில், பாதிப்புக்குள்ளான சமூகத்தின் சார்பில் இருந்து நோக்கப்படவேண்டிய விடயமாகும்.   

யுத்த நிறைவின் பின்னராக 10 ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டிய பல நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளை, அரசாங்கம் செயற்படுத்தாத நிலையில், அதனூடான வெறுப்புணர்வுகள் தமிழர்களிடம் அதிகரித்தே உள்ளன. 

சமாதானமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாடு, தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்ற கருத்தியலை வைத்து, அவர்கள் எதையும் மறந்து, மன்னித்து விடுவார்கள்; அதனூடாக அவர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளை மறைத்து விடலாம் எனத் தமிழர் பகுதியில் வைத்தே வெளியிடும் துணிவை, பிரதமருக்கு யார் வழங்கி இருக்கின்றார்கள் என்ற சந்தேகம், கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்த் தலைமைகளால், பலமான கேள்வியாக இன்று முன்வைக்கப்படுகிறது.   

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான எக் கருத்தையும் முன்வைக்காத நிலையில், எம். ஏ. சுமந்திரன், “பிரதமர் போர்க் குற்றம் நடத்ததாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது” என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் ‘மன்னிப்போம், மறப்போம்’ எனக் கருத்துத் தெரிவிக்கும்போது, குறுக்கிடவோ, எழுந்து வெளியேறவோ, ஏதாவதொரு எதிர்ப்பையோ சி. சிறிதரன் எம்.பி உட்பட அங்கிருந்த தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எவரும் முன்வரவில்லை.   

 “நாகரிகம் கருதி அமைதியாக இருந்தோம். எனினும், கடந்த காலத் தவறுகளை, மறப்போம் மன்னிப்போம் என தெரிவித்த கருத்தின் மூலம், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பிரதமர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்” என விழுந்தும் மீசையில் மண்படாத கதையாகக் கூறி, தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முற்பட்டுள்ளார்கள்.  

எனினும், இறுதி யுத்தத்தின் கொடூரங்களுக்கு நேரடியாக முகம்கொடுத்த போராளிகள், தமது ஜனநாயக போராளிகள் கட்சியின் அறிக்கையில் ஊடாகக் காட்டமான கருத்தை வௌிப்படுத்தி இருக்கிறார்கள்.  ‘ஓர் தேசிய இனத்தின் ஆன்மாவை சிதைக்கின்ற கருத்துகளைக் கூறி, அரசியல் காழ்ப்புணர்ச்சியை உமிழும் மிலேச்சத்தனமான அரசியல் பகடையாட்டத்தைக் காலாகாலமாக ஆட்சியாளர்கள் ஆடி வந்திருக்கிறார்கள். 

மீளிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச அழுத்தங்களைப் புறந்தள்ளும் தந்திரோபாய சொல்லாடல்களை உபயோகிப்பதன் மூலம், ஜெனீவாவில், இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான இராஜதந்திர மதிநுட்பத்தைப் பிரயோகிக்க பிரதமர் ரணில் முற்படுகின்றார்’ எனத் தமது ஆதங்கத்தைப் பதிவிட்டிருக்கின்றார்கள்.  

இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, எவ்வாறான கருத்துகளை முன்வைத்து, மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற கைங்கரியத்தில் இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி வருவது வௌிப்படையாகத் தெரிகிறது.

இந்நிலையில், அதற்குப் பக்கபலமாக சில தமிழ் தலைமைகளும் செயற்பட்டு வருகின்றமை, தமிழ் மக்கள் ஏங்கி நிற்கும் நீதி, கை நழுவிப்போக வழிசமைக்கப்பட்டு விடுமோ என்கின்ற ஐயப்பாட்டை, தோற்றுவித்துள்ளது என்பதே யதார்த்தம்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெனீவாவை-நோக்கிய-மறப்போம்-மன்னிப்போம்/91-229772

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.