Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1988 ஆடி மாதம் சனிக்கிழமை.
வேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால். 
 
என்ன மச்சான் கிளாசுக்காப் போகிறாய்?

ஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு ? 

எனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ். 

அங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான்.

சங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் .  நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்பனைப்போல கோபாலும் சமுகத்தின் மீது பற்றுள்ளவன். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கோபாலுக்கு ஈரோஸ் இயக்கத்தில் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி திரிவதுண்டு.

மல்லாகச் சந்தியில் இருந்து சுன்னாகம் போகும் வழியில் வலதுபக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் உள்ள மரத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். சுன்னாகச் சந்தையில் மரக்கறி வாங்கி வந்தவர்கள், தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வயது வேறுபாடின்றி ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு காவலாக இந்திய இராணுவத்தின் சீக்கியர்கள் துப்பாக்கி ஏந்தியவண்ணம் இருந்தார்கள். இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்த ஈபிஆர் எல் எவ் அமைப்பினர், தடுத்து வைத்திருப்பவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சங்கரின் பாடசாலை நண்பர் சிவனேசனை கறுத்த மெல்லிய சுருள்முடியுடன் இருந்த இளைஞன் ஒருவன் விசாரித்துக் கொண்டிருந்தான். 

எந்த ஊர்? 
 
குப்பிளான்.  

லோலாவைத் தெரியுமா?

தெரியாது.

"டேய் பொய் சொல்லாதே. அதில போய் நில்லு" என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சங்கரைக்கூப்பிட்டான். உடல் நடுக்கத்துடன் சங்கர் எழுந்தான். அப்பொழுதுதான் அந்த இளைஞன் சங்கருக்கு அருகில் இருந்த கோபாலைக் கண்டான்.  

'கோபால் நீ எங்கே இங்கை".

"கிளாசுக்கு போய்கொண்டிருந்தனான். எனக்கு கிளாசுக்கு நேரமாயிட்டுது"

'நீ கிளாசுக்குப் போகலாம்"

"இவர் என்ற நண்பர் சங்கர்"

" ஒ கே , இவரையும் கூட்டிக்கொண்டு போகலாம்"

சங்கரும் தப்பினேன் பிளைத்தேன் என்று நினைத்து துவிச்சக்கர வண்டியை நோக்கிப் போனான். "உனக்கு எப்படி உவனைத் தெரியும்?"

"அது ரவி. உனக்கு பிறகு சொல்கிறேன். கிளாசுக்கு நேரமாகிவிட்டது" என்று சொல்லி கோபால் துவிச்சக்கரவண்டியில் பறந்தான்.

-------------------------------------------------------
1986 சித்திரை மாதம் மாலை நேரம். க.போ.த சாதாரணதரம் சமுகக்கல்வி  புத்தகத்தினை கோபால் வாசித்துக் கொண்டிருந்தான். மார்கழியில் பரீட்சை. நல்ல பெறுபேறுகள் எடுக்க வேண்டும் என்று படித்துக்கொண்டிருந்தான். யாரோ பின் கதவினைத் தட்டும் சந்தம் கேட்டது. 

"யாரது?"

"கோபால் நான் ரவி"

இவனேன் முன்கதவினைத் தட்டாது பின்கதவினைத் தட்டுகிறான் என்று நினைத்து , அங்கே சென்றான். இரத்தக் காயங்களுடன் ரவி அங்கே நின்று கொண்டிருந்தான். விடுதலைப்புலிகளினால் டெலோ இயக்கம் தடைசெய்யப்பட்ட காலம். இதனால் ஏற்பட்ட மோதலில் காயப்பட்டு உயிர் தப்பி கோபாலிடம் உதவி கேட்க வந்திருந்தான். கோபாலும் ரவியை, வீட்டு மாட்டுக் கொட்டில் ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்து தெரிந்த வைத்தியர் ஒருவர் மூலம் சிகிச்சை வழங்கி காப்பாற்றினான். காயங்கள் ஆறியபின்பு ரவியைப் பாதுகாப்பாக சாவகச்சேரியில் ரவிக்கு தெரிந்த ஒருவரிடம் ஒப்படைத்தான். டெலோவில் இருந்த ரவி, பிறகு இந்திய இராணுவ வருகையின் போது , இந்திய இராணுவத்துணைக்குழுவான ஈபிஆர் எல் எவ்வுடன் சேர்ந்து வந்தான்.

-----------------------------
1988 புரட்டாதி மாதம்,

சுன்னாகம் வினாயம்ஸ் கல்வி நிலையம் அருகில் ஈபி ஆர் எல் எவ்வினர் ஆயூதங்களுடன் நடமாடினார்கள். துவிச்சக்கரவண்டியில் சங்கருடன் வந்த கோபால், ரவியைக் கண்டதும்  "என்ன பிரச்சனை. யாரைப் பிடிக்கப் போறீர்கள்" என்று வினாவினான். 
"உந்த மதிலுக்குப் பக்கத்திலை யாரோ புலி ஒன்று குண்டை வைத்திட்டுப் போட்டுது . நல்ல காலம் வெடிக்கவில்லை. அதுதான் தேடுகிறோம்" என்று சொல்லி வேகமாக ரவியும், மற்றைய ஈபி ஆர் எல் எவ்வினரும் அவ்விடத்தினை விட்டு சென்றார்கள். "உனக்கு தேவையில்லாத கேள்வி. உவங்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும். உவன் ரவி எத்தனை அப்பாவிகளை சித்திரவாதை செய்து போட்டிருக்கிறான். உவனோட தொடர்புகளை வைக்காதே' என்று சங்கர் புத்திமதி சொன்னான்.

-----------
1989 தை மாதம். மாலை நேரம் 7 மணி

சங்கர் வீட்டில் இருந்து படித்துக் கொண்டிந்தான். சட புட என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தினைக் கேட்டான்.மனதுக்குள் ஏதோ செய்தது. யாரையோ சுட்டுப்போட்டாங்கள். 

மாலை 9 மணியிருக்கும். சங்கரின் வீட்டின் முன்கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அங்கே கோபாலின் அத்தான் மிகவும் பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்தார். 

"பின்னேரம் டியூசனுக்குப் போன கோபாலை இன்னும் காணவில்லை. அதுதான் தேடி வந்தனான்".

"கோபாலை நான் நேற்றுத்தான் பார்த்தனான்.  நீங்கள் வேறு யாரையும்  விசாரித்தனீங்களா?"

"கிளாஸ் முடிய மோகனுடன் மல்லாகச்சந்தியில் டீ குடித்ததாக மோகன் சொன்னார். பலரையும் விசாரித்துவிட்டேன் எங்கே போயிட்டான் என்று தெரியவில்லை." 

"ஈபி ஆர் காம்பிலையும் போய் விசாரித்தேன். ரவியை அங்கு கண்டேன். தான் காணவில்லை. நாங்கள் ஒருவரும் கோபாலைப் பிடிக்கவில்லை என்றும் சொன்னான்".

மறு நாள் ஏழாலைக்கும் சுன்னாகத்துக்கும் இடையில் புகையிரதத் தண்டவாளத்துக்கு அருகில் கோபாலின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சித்திரவாதைகள் செய்து மிருகத்தனமாக கோபால் கொல்லப்பட்டிருந்தார். நிகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. கைகள் முறிக்கப்பட்டிருந்து. முகத்தில் பல காயங்கள். ரவி கொல்லப்பட்டிருந்த இடம் இந்திய இராணுவம், ஈபி ஆர் எல் எவ் முகாம்களுக்கு மிக அருகில். கோபாலுடன் வேறு இருவரும் அன்று கொல்லப்பட்டிந்தார்கள்.  துப்பாக்கிச்சத்தம் கேட்க முன்பு, மாலை 6மணியளவில் கோபாலை ரவி கூட்டிக்கொண்டு சென்றதினைக் கண்டவர்கள், சிலர் சொன்னார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டு தண்டவாளத்துக்கு அருகில் இருந்த வீட்டில் உள்ளோர்கள் ,அவ்விடத்தில் ஈபிஆர் எல் எவ்காரர்கள் திரிவதைக் கண்டதாகவும் சொன்னார்கள். கோபாலின் கைக்கடிகாரம், பாதணிகள், மோதிரம், துவிச்சக்கரவண்டியும் களவாடப்பட்டது. கோபாலின் துவிச்சக்கரவண்டியில் ஈபி ஆர் எல் எவ்வினர் சவாரி செய்வதினை கோபாலின் நண்பர்கள் பிறகு பார்த்திருக்கிறார்கள்.  

 வடகிழக்கு மாகாணத்தில் முதல் அமைச்சராக ஈபிஆர் எல் எவ்வின் வரதராஜப் பெருமாள் அப்பொழுது இருந்தார். யாழ் மாவட்டத்தில் வேறு கட்சிகள் போட்டியிடாததினால், போட்டியின்றி ஈபி ஆர் எல் எவ் அனைத்து இடங்களையும் வென்றது. 89 பெப்ரவரியில் இலங்கையின் பாராளுமன்றத்தேர்தலில் ஈபி ஆர் எல் எவ் , தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டது. விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் ஈரோஸ் இயக்கம் அத்தேர்தலில் போட்டியிட்டது. இதனால் ஈரோஸ் இயக்கத்தினர், ஆதரவாளர்கள் சிலர் இந்திய இராணுவத்தின் துணைப்படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 86ல் கோபால் தனது நண்பன் ரவியினைக் காப்பாற்றினான். ஆனால் 89ல் ரவி?.

---------------------------------------

ஆவணி மாதத்தில் நடைபெறவிருக்கும் பரிட்சைக்கு படிக்க முடியாமல் சங்கர் அவதிப்பட்டான். புத்தகத்தினைத் திறந்தால் கோபாலின் சகோதரிகள், பெற்றோரின் முகங்கள் , அவர்கள் சங்கரை கண்டால் கதறி அழுவது, சங்கரால் படிக்கமுடியவில்லை. மேலும் மேலும் துயரச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. 
சங்கரின் ஆரம்பகாலத்து பள்ளி மாணவனும், முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன்( பரியோவான் கல்லூரி மாணவன்), முரசொலிப்பத்திரிகையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சந்திப்பு பற்றிய செய்திவெளியிட்டதினால் இந்திய இராணுவ துணைப்படைகளினால் கொல்லப்பட்டார். யூனியன் கல்லூரி  பிரேமானந்தன் உட்பட 90 பேர் தெல்லிப்பளையில் வைத்து அமைதிப்படையினால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அமைதிப்படையும் இலங்கையினை விட்டு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. பிரேமானந்தன் பற்றிய செய்தி இன்னும் தெரியவில்லை. பிரேமானந்தன் கைதானதற்கு பிறகுவந்த அவனது பிறந்த நாளில் அவரது தகப்பன், மகன் பிரிவால் மாரடைப்பினால் காலமானது சோகத்தின் மேல் சோகம். பரிட்சை நாட்கள் நெருங்க நெருங்க ஈபி ஆர் எல் எவ்வினால் வீதிகளில் சென்ற இளையோர்கள் பிடிக்கப்பட்டு துணை இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். இதனால் தனியார் கல்வி நிலையங்களில் பெண்கள் மட்டுமே படிக்கச் சென்றார்கள். முக்கியமான படங்கள் கற்காமல் ஆண்கள் பரீட்சை எழுத வேண்டியிருந்தது. சங்கரின் நண்பர்கள் பலர் படிப்பும் வேண்டாம் ,தப்பினால் போதுமென்று கொழும்புக்கு ஓடி வெளினாடு சென்றார்கள். சிலர் பிடிபட்டார்கள். சிலர் காணாமல் போனார்கள். 

------------------------------------------
பொறியியாலாளாராக வரவிரும்பிய சங்கரின் எண்ணம் நிறைவேறவில்லை. சங்கரைப்போல வலிகாமம் வடக்கில் பல இளைஞர்களின் கனவுகள் நிறைவேறவில்லை. கொழும்புக்கு சென்ற சங்கர் ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டு கணக்கியலைப் படித்தான்.

மாசி மாதம் 89ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் யாழ் நகரில் பதினொன்றுக்கு 8 இடங்களை ஈரோஸ் பிடித்து வெற்றி பெற்றது. சுரேஸ் பிரேமசந்திரன் , ஆனந்த சங்கரியின் சகோதரர் யோகசங்கரி உட்பட மூவர் ஈபி ஆர் எல் எவ் அணியில் வெற்றி பெற்றார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனால் வழிகாட்டலுடன் இயங்கிய மண்டையன் குழுவில் இருந்த ரவியினால் கொல்லப்பட்டவர்கள் அதிகம். இந்திய இராணுவம் ஈழத்தினை விட்டு வெளியேறியதும், ரவி இலங்கை இராணுவத்தின் துணைப்படையில் சேர்ந்தான். விடுதலைப்புலிகளினால் ரவி கொல்லப்பட்டதாக ஒரு தகவல். யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமான பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணானந்தன் ஆசிரியரும் அவரது வீட்டில் ஈபி ஆர் எல் எவ்வினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

-----------------
2019 மாசி மாதம்.
வலைகுடா நாடொன்றில் கணக்காளராக சங்கர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கீழே கிட்டத்தட்ட 50 கணக்காளர்கள் வேலை செய்கிறார்கள்.  வேலையில் இருக்கும் சங்கரின் கைத்தொலைபேசி அழைப்பு வந்தது.

மச்சான் என்ன நித்திரை கொள்ளவில்லையா? இப்ப எத்தனை மணி? . நாளைக்கு வேலையில்லையா?

சிட்னியில இப்ப 11 மணியாகிறது. நித்திரை வரவில்லை. மனுசியும் பிள்ளைகளும் படுத்திட்டார்கள். எங்கட கிளாஸ்மேட்டுகளோட கதைச்சனியே?

குமாருடன் கதைத்தேன். இப்ப ஆள் பிரின்சிப்பலாக இருக்கிறார். அவருடைய தகப்பன் செல் விழுந்து செத்துப்போனார். பாவம் குமார்தான் குடும்பத்தினைப் பார்த்து எம் எஸ் இ வரை படித்திருக்கிறான். தேவா இறுதி யூத்தம் வரை வன்னியில் இருந்து கஸ்டப்பட்டிட்டான். மயூரன் மாவீரர் ஆகிவிட்டார். குப்பி இப்ப நியூசிலாந்தில் இருக்கிறான்.மப்பு ஜேர்மனியில. மான்ஸ் திருக்கோணமலையில இருக்கிறான். பிரபா இப்ப கனடாவில இருக்கிறான். நல்ல கெட்டிக்காரன். உனக்கு தெரியும்தானே. 

ஓம் முதல் தரம் எடுக்கேக்க பிசிக்கல் சயன்ஸ் கிடைத்தது.  இரண்டாவது தரம் எடுக்கேக்க பேரதேனியா கிடைத்தது. ஆனால் மறுமொழி வரமுன்பு பிசிக்கல் சயன்சுக்கு ஓமென்று சைன் வைத்திட்டான். படிக்கும் போது அவனுடைய தகப்பன் இறந்திட்டார். குடும்பத்தினைப் பார்க்க வெளினாடு போய் இப்ப கனடாவில படித்தவேலையும் செய்யாமல் குளிருக்க கஸ்டப்படுகிறான். எங்கட பச்சில மூன்று பேர் பேராசிரியர்கள் என்பது சந்தோசம். யாழ், வன்னி, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் வேலை பாக்கினம். எல்லோரையும் பார்த்து 30 வருடங்களாகிவிட்டது. பார்க்க ஆசையாக இருக்கிறது.

86காரங்கள் 50 பேர் ஆண்கள் பெண்கள் என கம்போடியா, தாய்லாந்து, மலேசியா என்று போய் வந்தார்கள். 87காரர்கள் எல்லோரும் சந்தித்து புத்தகம் ஒன்று வெளியிட்டார்கள். 88காரர்கள் இந்தவருடம் எதோ பெரிதாக செய்வதாக கேள்விப்பட்டேன். நாங்களும் எல்லோரும் சந்தித்தால் என்ன?

சந்திப்போம். இலங்கை வேண்டாம். எல்லாம்போய்விட்டது. போனால் கவலைவரும்.

உனக்கு ஊரில ஆக்கள் இல்லை. வெளினாட்டிலதான் இருக்கினம். எங்கட உறவுகள் இலங்கையிலதானே இருக்கினம். அதோட உவன் சித்தங்கேணி,விஜயகுமார் எல்லாம் ஊரிலதானே. அவங்களால வெளினாடு வரமுடியுமே?

 நித்திரை கொள்ளமால் யாரோட அலட்டிக்கொண்டிருக்கிறியள் என்று மனுசி திட்டும் குரல் கேட்கிறது. பிறகு கதைப்போம். 

ஒம் எனக்கும் இப்ப வேலையில மீட்டிங் இருக்கிறது. குட் நைட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு பழைய ரொக்காட்டை எடுத்து ஓடவிட்டிருக்கிறீர்கள்.கீறு விழாமல் இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீறு  விழுந்தாலும் ஓடவிட்டுக்கொண்டுதான் இருக்க வேண்டும்.....அப்படியும் மனசு ஆறாது......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ ஆறாத ரணங்களைச் சுமந்தபடி வாழும் நாம் கடந்து போன வாழ்வின் பக்கங்களை சுமைகளை வேதனைகளை அப்பப்போ இரைமீட்டிப் பார்க்காமல் வாழ்வது சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ரணங்களை மீட்டுஎழுதியிருக்கின்றீர்கள் ,தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 1:04 AM, ஈழப்பிரியன் said:

என்ன கந்தப்பு பழைய ரொக்காட்டை எடுத்து ஓடவிட்டிருக்கிறீர்கள்.கீறு விழாமல் இருக்கட்டும்.

பழையது என்று நாங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதினால்தான் , வந்தான் வரத்தான் என்று எல்லோரும் நாம் வாழ்ந்த இடங்களுக்கு உரிமைகோருகிறான். பொலநறுவை. புத்தளம் என தமிழன் இருந்தான். தமிழ்ப் பெளத்தர்கள் பலர் இருந்தார்கள். எங்களது பாட்டன், பாட்டிக்கு முன்பு இருந்தவர்கள் பற்றித் தகவல் எதுவும் தெரியுமா? வரலாறுகள் தெரியுமா?. எனென்றால் நாங்கள் பழமை என்று கண்டுகொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2019 at 12:55 PM, கந்தப்பு said:

மப்பு ஜேர்மனியில.

 கந்தப்பு! மப்பு ஜேர்மனியிலை எந்த இடமெண்டு சொன்னியளெண்டால் போகேக்கை போத்திலோடை போகலாமெல்லே...😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 1:39 AM, suvy said:

கீறு  விழுந்தாலும் ஓடவிட்டுக்கொண்டுதான் இருக்க வேண்டும்.....அப்படியும் மனசு ஆறாது......!

ஆறாது ஆறாது சாகும்வரை இருக்கும் வலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 2:57 AM, Kavallur Kanmani said:

எத்தனையோ ஆறாத ரணங்களைச் சுமந்தபடி வாழும் நாம் கடந்து போன வாழ்வின் பக்கங்களை சுமைகளை வேதனைகளை அப்பப்போ இரைமீட்டிப் பார்க்காமல் வாழ்வது சாத்தியமில்லை.

உண்மைதான். அத்துடன் எமக்கு நடந்தவற்றை வேறுநாட்டவர்களுக்கு கட்டாயம் சொல்லவேண்டும். நாங்கள் நடந்தவற்றை சொல்லாததினால்தான் கண்டவன் கிண்டவன் எல்லாம் கற்பனைக் கதைகளைச் சொல்லுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 5:44 PM, putthan said:

பழைய ரணங்களை மீட்டுஎழுதியிருக்கின்றீர்கள் ,தொடருங்கள் 

அமைதிப்படை  தெல்லிப்பளையில் 90 அப்பாவிகளைக் கைது செய்தது என்று சொன்னேன் அல்லவா. அக்காலத்தில் சென்னை வானொலியில் 'அன்புவழி', 'வெற்றிமாலை' என்ற நிகழ்ச்சிகளில் 90 புலிகளைப் பிடித்ததாக செய்திகள் வந்தன.  அதில் தென்கச்சி சுவாமிநாதன் பல பொய்களைச் சொல்வார். 
இன்று பாகிஸ்தானில் இந்திய விமானங்கள் குண்டு போட்டு 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தியினை இந்திய ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. இவற்றில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எத்தனையோ?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு மீள அந்த நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள். இயக்கமோதல்களால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பலர் மீளவில்லை. அதே சமயம் இந்த இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இந்தத் துணைப்படையின் செயற்பாடுகளால் பாதிக்கப்படாத தமிழர்கள் இல்லை என்றே சொல்லலாம். மறக்க நினைத்தாலும் முடிவதில்லை. எது சரி எது பிழை என்றே தெரியாமல் அன்றைய காலத்தில் பல இளையவர்கள் இந்திய அரசியல் சூழ்ச்சிகளால் பலியாகிப்போனார்கள். மறுக்கமுடியாது. இந்தியாவை என்றுமே மன்னிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மோடு வாழ்ந்தவர்களின் மரணமும் அது தரும் வலியும் என்றும் ஆறாததுதான். நீங்கள் கூறியதுபோல் பழையனவற்றை நாம் எழுதினால்த்தான் புதியவர்களுக்கு அது தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதி காக்க வந்த இராணுவத்தால் எனது தந்தை கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கி பிடியினால் தாக்க முனைந்த போது துப்பாக்கியை பிடித்துவிட்டார் என்று சுற்றி வளைத்து பூட்ஸ் கால்களாலும் துப்பாக்கி பிடியினாலும் மோசமாக தாக்கப்பட்டார்.
எங்கள் கிராமத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் வீடுவீடாக சென்று தாக்கப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் நடந்த கோரமான கொலைகளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்த கந்தப்புக்கு நன்றி.

கொலைகள் மலிந்த நிலமாக இருந்த காலத்தில் பார்த்த மரணங்கள் சுடலையில் பிணம் எரியும்போது அருகில் இருந்து விடுப்புக் கதைக்கும் அளவிற்கு பதின்ம வயதினரான எங்களையும் மாற்றியிருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.