Jump to content

விகிதாசார தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் -ரவூப் ஹகீம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விகிதாசார தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் -ரவூப் ஹகீம்

(நா.தினுஷா)

சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு விகிதாசார தேர்தல் முறையே சிறந்த தெரிவாக அமைவதோடு விகிதாசார தேர்தல் முறைமையில் எதிர்வரும் தேர்தல்களை நடத்த அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நகரத்திட்டமிடல் , நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.Rahuff_akkim.jpg

தேசிய ரீதியான சில முக்கிய கட்சிகள் கடந்த காலத்தில் விகிதாசார தேர்தல் முறைக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. அதன் விளைவாகவே கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் புதிய முறையொன்றினம் கீழ் நடத்தப்பட்டது. 

ஆனால் அந்த புதிய முறையினால் ஏற்பட கூடிய பாதகத்தினை அனைவரும் நன்கு உணர்நதுள்ளனர்.

இருப்பினும் சிறுப்பான்மை கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் விகிதாசார பிரதிநிதித்துவத்தையே வலியுறுத்தினோம். அதற்கான அழுத்தங்களையும் வழங்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த உள்ளளூராட்சி மன்ற தேர்தலில் இடம்பெற்ற பாதகமான விடயங்களின் காரணமாக தற்போது புதிய தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் அதிருப்த்தியினை வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் அனைத்து கட்சிகளும் விகிதாசார முறைக்கு தனது ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ளதுடன் அதற்கான விருப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

எனவே எதிரகால்ததில் இடம்பெறும் தேர்தல்கள் விகிதாசார தேர்தல் முறையின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த தேர்தல் முறையினூடாகவே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

ஊவா மாகாணத்துக்கான நீர்வழங்கள் வேலைத்திட்டத்தின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/50330

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.