Jump to content

மிஸ்டர் ஆபீசரும், அவரின் புது உலகமும்


Recommended Posts

அன்று மிஸ்டர் ஆபீசர் தனது அலுவலக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற நாள். நெருங்கிய சில அலுவலக சகாக்களுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்று வீடு வந்தபோது அவர் மனைவி உமாவும், ஒரே ஒரு மகள் கவிதாவும் இன்னும் வேலையில் இருந்து வீடு திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவர் தனது அலுவலக  நினைவுகளை அசை போட்டார். நிர்வாக உதவியாளராகத் தொடங்கிய அவரது பணிக்காலத்தின் இடையே கம்ப்யூட்டர் மயமான பொழுதில் தொழிநுட்பத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக இறுதி வரை சாதாரண அலுவலராகவே வேலை செய்து ஒய்வு பெற்றார். (எனினும் அலுவலக உத்தியோகத்தர் என்னும் திமிர் அவரிடம் எப்போதுமே குடி கொண்டிருந்தது. வேலை தவிர்ந்த வெளியிடங்களில் நண்பர்கள், உறவினருடன் உரையாடும்போதும் 'எந்த ஆபிசில...' என்று ஆரம்பித்து தான் அலுவலகத்தில் வேலை செய்வதைக் காட்டிக்கொள்வார்). இதனால் தான் இவருக்கு மிஸ்டர் ஆபீசர் என்ற பட்டப்பெயர் கிடைத்தது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இவரது வீம்புப் பேச்சினாலேயே இவரது அலுவலகத்தில் சில ஊழியருடன் இவருக்குக் கருத்துவேறுபாடு முற்றி நிம்மதி இழந்து இன்று அறுபதாவது வயதில் ஓய்வெடுக்கும் நிலைக்கு வந்துள்ளார். 

அலுவலக நினைவுகளில் இருந்து மீண்டவருக்கு 'ஒய்வு பெற்றுவிட்டோம், இனி மேல் என்ன செய்யலாம்?. என்ன தான் இருந்தாலும் அலுவலகம் சென்று போது நேரம் போவது தெரியவில்லை. இனிமேல் வாழ்க்கை வெறுமையாக இருக்கப்போகிறதே. பொழுதுபோக்குக்காவது எதாவது வேலை செய்தாக வேண்டுமே' என ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது  உமாவும், கவிதாவும் வருவதைக் கண்டார். அவர்கள் வந்தவுடனே இருப்புக்கொள்ளாமல் தனது மனதில் வந்த குழப்பத்தை அவர்களிடம் இவ்வாறு பகிர்ந்தார்: "உமா, கவிதா இஞ்ச வாங்கோ. ஓய்வு பெற்று ஒரே விசராய்க்கிடக்கு. அலுவலக வேலைபோல, ஆனால்  அழுத்தம் (stress) இல்லாமல், ஆனால் ஒரே இடத்தில் இருந்து செய்யும் வேலை ஏதும் தேடுவம் என்று நினைக்கிறன். சம்பளம் பற்றிக் கவலை இல்லை. ஏதாவது செய்தாக வேணும்' என்றார்.

உடனே மகள் கவிதா சொன்னாள் "அதுக்கு முகநூலில் (Facebookல்) இணைந்தாலே போதும். நீங்க விரும்பினமாதிரி வேலை பார்க்கலாம்". 

அதற்கு ஆபீசர் சொன்னார்: "முகநூலா? என்ர அலுவலகத்திலும் அதைப்பற்றி எல்லாரும் சொல்லி இருக்கினம். உள்ள சோலியோட அதைப்பற்றி யோசிக்க நேரம் இருக்கேல. இருக்கிற வேலையையே ஒழுங்கா கம்ப்யூட்டர்ல செய்யக் காணேல. அப்படி முகநூலில் என்ன தான் விஷேஷம் இருக்கு?"

அதன் அருமை பெருமைகளை மனைவியும், மகளும் எடுத்துச் சொல்லலாயினர்; கவிதா சொன்னாள் 'இருந்த இடத்தில் இருந்தே உலகத்தைப் பார்க்கலாம்!'

"ஒரு சத்தமும் இல்லாமல் கொசிப் அடிக்கலாம்!" என்று உமா அடித்துவிட, 

"24 மணி நேரமும் திறந்து இருக்கும் - விரும்பிய நேரத்துக்கு வேலைக்குப் போய் வரலாம்!,
கிட்டத்தட்ட உங்கட சொந்த பிஸ்னசை மனேஜ் பண்ற மாதிரி!" என்று டெலிமார்க்கெற்றர் போல எடுத்து விட்டாள் கவிதா.

"பக்கத்து வீட்டுப் பெடியனிட்ட ஏதும் உதவி தேவை எண்டா உதில call பண்ணியும் கதைக்கலாம் - அவன் எங்க நிக்கிறானோ இல்லையோ முகநூலில் மட்டும் 24 மணி நேரமும் இருப்பான்!" என்று உமா சொல்லவும் இறுதியாக மிஸ்டர் ஆபீசர் முகநூலில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். முகநூலில் அவருக்கு Profile ஒன்று open பண்ணி, மகளும், மனைவியும் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை அவருக்கு நண்பர்களாக இணைத்து விட்டனர்.

ஆபீசர் விதம் விதமான படங்களை எடுத்துப் போட்டார்; அலுவலகத்தில் ரை கட்டியபடி எடுத்த ஒரு போட்டோ, பார்க்கில, பீச்சில மனைவி, மகளுடன் ஒரு செல்பி என குளியலறை, பள்ளியறை தவிர்த்து எல்லா இடங்களிலும் படம் எடுத்து முகநூலில் பகிர்ந்தார். அநீதிக்கு எதிராகப் போராடினார், முகநூலில் வீராவேசமான கருத்தெழுதி. மனித உறவுகளின் உன்னதத்தைப் பற்றி நிலைத் தகவலில் சிலாகித்து எழுதினார், இங்கே மனைவி, மகளுடன் நேரத்தைச் செலவிட நேரமின்றி. லைக்குகளும் ('Like's), வாழ்த்துக்களும் இன்ன பிற கமெண்ட்ஸ்ம் (comments) குவிந்தன. பசித்திரு-தனித்திரு-விழித்திரு என ராமலிங்க அடிகளார் ஆன்மிகத்தில் உபதேசித்ததை முகநூல் வாழ்வில் கடைப்பிடித்தார் ஆபீசர். 

போதாக்குறைக்கு அவரது பிறந்த நாளன்று வெளியே dinnerக்கு போக உமாவும், கவிதாவும் கேட்ட போது, "வெளி உலகத்திலை என்ன இருக்கு? இவ்வளவு காலமும் ஆபிஸ் ஆபிஸ் என காலத்தை வெறுமனே ஓட்டிட்டன்.  இங்க தான் (முகநூலில்) சுவாரசியமான உலகமே இருக்கு. இப்ப தானே இதுக்குள்ள இறங்கினனான். ஒரு கை பார்த்திட்டு தான் மற்ற வேலை" என்று சொல்லிவிட்டு பிறந்த நாளுக்கு வாழ்தியவர்களுக்கு நன்றி சொல்ல ஆயத்தமானார், முகநூலில். 

"இந்த முகநூலில் இவரை இணைத்தது பிழையாப் போச்சு" எனக் கவிதா சலித்துக்கொள்ள, "ஓமோம், நீ தானே எல்லாத்துக்கும் காரணம்; இந்த மனுசன் ஓய்வு பெற்றால் சமையல், தோய்சல் எண்டு எனக்கு உதவியா இருக்கும் எண்டு கனவு கண்டுகொண்டிருந்தன்..." என உமா பெருமூச்சு விட்டுக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றார். 

நாட்கள் சில சென்றன. ஒருநாள் வைகறைப் பொழுதில் மிஸ்டர் ஆபீசரின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த உமாவும், கவிதாவும் திடுக்கிட்டு விழித்தெழும்பி அவரது அறையை நோக்கி ஓடினர். அங்கே ஆபீசர் தனது தலையில் கைவைத்தபடி தன் கொம்ப்யூட்டரின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

"என்னப்பா உங்கட முகநூலை யாராவது ஹக் (hack) பண்ணிட்டாங்களா?" என்ற படி அவரருகே உமா சென்றாள், அப்படியாவது மனுசன் முகநூல் போதையை விட்டிடும் என்ற நப்பாசையில். "இல்லைப் பாரும், இந்த மூண்டு பேரும் எனக்கு நட்புக்கு அழைப்புக் (friend request) கொடுத்திருக்கிறாங்கள்" என்று அலறினார் ஆபீசர். 

"யாரப்பா அது?" என்று கவிதா கேட்க, "என்ர அலுவலகத்தில என்னோட வேலை செய்தவங்கள். இவங்களால எப்போதும் எனக்கு வேலையில் நிம்மதி இருக்கவில்லை. என்னை எப்பவும் மனேஜரிட்ட மாட்ட வைத்துக்கொண்டே இருப்பாங்கள். இவங்கட கரைச்சல் தாங்காமல் தான் நான் கொஞ்சம் வெள்ளனவே ஓய்வெடுத்திட்டன் (retired) எண்டு சொன்னனான் தானே. இப்ப முகநூலிலையும் வந்து கரைச்சல் குடுக்கிறாங்கள். ராகு, கேது, சனி மூன்றும் வந்து friend request குடுக்கிறது போல இருக்கு" ஒரே மூச்சில் சொன்னவர் "கட்டாயம் இந்த நட்பு அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள(accept) வேண்டுமோ?" என கவிதாவைப் பார்த்து அப்பாவித்தனமாகக் கேட்டார். அவள் தான் இந்த விசயத்தில் அவருடைய ஆலோசகர். 

கவிதா யோசித்துவிட்டுச் சொன்னாள் "ஏற்றுக்கொண்டால் அவங்கள் உங்களுக்கு முகநூலிலும் கரைச்சல் கொடுப்பாங்கள். ஏற்காமல் மறுத்தால் (reject) அதுவும் அவங்களுக்குத் தெரியும்" என்று சொல்ல ஆபீசர் குறுக்கிட்டு "இப்ப என்ன தான் செய்ய பிள்ளை?" என்று ஏக்கத்துடன் கேட்டார். "நீங்கள் ஒண்டுமே பண்ண வேண்டாம். அப்படியே விட்டிடுங்க. அப்படியே விட்டாலும் எப்படியாவது நோண்டப் பார்ப்பாங்கள். ஆகவே இனி முகநூலைப் பாவிக்கிறதைக் குறைத்துக் கொள்ளுங்கோ" என்று கவிதா கூற உமாவும் அதை ஆமோதித்தாள். 

இது ஆபீசருக்குச் சற்று அதிர்ச்சியாக இருத்தாலும், சற்று நேரம் யோசித்துவிட்டு நடிகர் திலகம் அழுகையை அடக்கிப் பேசும் தொனியில் சொன்னார் "எனது முகநூல் நான் கடந்த மூன்று மாத காலமாகக் கட்டியெழுப்பிய அறிவு சார்ந்த சொத்து (intellectual property). அதை இலகுவாக விட்டுவிட முடியாது. எனினும் இந்த இக்கட்டான நிலையில் அதில் அதிக நேரம் செலவிடாது, ஏதாவது ஓர் தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரமாகத் தொண்டரா (voulnteer)  வேலை செய்தாலும் நல்லது தானே".

உமாவும், கவிதாவும் இதை ஆமோதித்தனர். "இப்ப தான் உங்களைப் பிடித்த சனி (முகநூல் போதை) விலகியிருக்கு" என உமா சொல்ல, "எல்லாம் அந்த ராகு, கேது, சனியால் தான்" என ஆபீசர் குறும்பாகச் சொல்ல எல்லோரும் கலகலப்பாகச் சிரித்தனர்.

"இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள்.

(பின் குறிப்பு: இக்கதை  முழுக்க முழுக்கக் கற்பனையே. யாரையும் தனிப்படக் குறிப்பிடும் நோக்கிலோ அல்லது, நோகடிக்கும் நோக்கத்திற்காகவோ சித்தரிக்க முனையவில்லை. எனினும், மிஸ்டர் ஆபீசர் போன்றோரை நாம் நம் வாழ்வில் பல இடங்களில் பார்த்திருக்கலாம். மிக முக்கியமாக நமக்குள்ளேயே பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! நன்றி 😊)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வெடுக்கிற கிழவர்கள் மனக்குறையை அனுபவித்து எழுதியிருக்கின்றிர்கள்.....அது அவர்களுக்குத் தானே நன்றாக இருக்குறது. இந்த ராகு, கேது, சனி சொந்த வீட்டை விட்டு இவர் வீட்டில உச்சம் பெற்றிடும் கவனம்.......!  😁

Link to comment
Share on other sites

11 hours ago, suvy said:

ஓய்வெடுக்கிற கிழவர்கள் மனக்குறையை அனுபவித்து எழுதியிருக்கின்றிர்கள்.....அது அவர்களுக்குத் தானே நன்றாக இருக்குறது. இந்த ராகு, கேது, சனி சொந்த வீட்டை விட்டு இவர் வீட்டில உச்சம் பெற்றிடும் கவனம்.......!  😁

ஆம், கிரகங்கள் எந்த வடிவிலும் வரலாம்! 🤣

கருத்துக்கு நன்றி சுவி அண்ணா 😊

Link to comment
Share on other sites

On 2/20/2019 at 9:47 PM, suvy said:

ஓய்வெடுக்கிற கிழவர்கள் மனக்குறையை அனுபவித்து எழுதியிருக்கின்றிர்கள்.....அது அவர்களுக்குத் தானே நன்றாக இருக்குறது. 

ஆஹா சுவி அண்ணா, கிழவர்களுக்கு என்று மட்டும் இதை எழுதவில்லை. தனிமையில் உள்ள எவருமே முகநூல் போன்ற சமூகத்தளங்களுக்கு அடிமையாகலாம் தானே! இந்தக் கதையில் வரும் ஓய்வு பெற்றவர் சிறு உதாரணம் மட்டுமே அண்ணா! நன்றி 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 11:21 AM, மல்லிகை வாசம் said:

இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள்.

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 5:21 AM, மல்லிகை வாசம் said:

இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள்.

யாழ்இல் எழுத நாங்க வாங்கிற பேச்சை யாடம் சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ்இல் எழுத நாங்க வாங்கிற பேச்சை யாடம் சொல்ல?

நீங்க எழுதுவதற்கு பேச்சு வாங்குறீங்க, நாங்க எழுத மூச்சு வாங்குது!

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

ஆபீசர் மீது இனி கொஞ்ச காலம் மனைவியின் பார்வை இருப்பதால் யாழ்களம் மீது அவர் பார்வை தற்போதைக்கு இருக்காது போல் தெரிகிறது! 🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ்இல் எழுத நாங்க வாங்கிற பேச்சை யாடம் சொல்ல?

எல்லா இடமும் இதே கதை தான் போலிருக்கு, அண்ணை! 😀

1 hour ago, ஏராளன் said:

நீங்க எழுதுவதற்கு பேச்சு வாங்குறீங்க, நாங்க எழுத மூச்சு வாங்குது!

எல்லோரும் இங்கு வரும் போது மூச்சு வாங்கிட்டுத் தான் வருவார்கள். நாளடைவில் எழுத, எழுத இலகுவாகிவிடும். 😊

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் முழுநேர வேலையாக இருந்து அலப்பறை செய்பவர்கள் இப்போது எல்லாம் முதியவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் இளையவர்கள் முகநூலை அதிகம் விரும்புவதில்லை.

மிஸ்டர் ஆபிஸர் ராகு, கேது, சனியை எல்லாம் நட்பு வட்டத்தில் சேர்த்து வைத்திருக்கலாம். விரும்பிய நேரத்தில் ‘unfriend' ஆக்கமுடியும். அவர்களுக்கே தர்மசங்கடமானவகையில் பதிவுகளைப் போடமுடியும். ஆக மொத்தத்தில் ஒரு குட்டி இராஜாங்கமே முகநூலில் நடாத்தலாம். அதைச் சொல்லிக்கொடுக்காமல் விட்டது தப்பு!

Link to comment
Share on other sites

17 hours ago, கிருபன் said:

மிஸ்டர் ஆபிஸர் ராகு, கேது, சனியை எல்லாம் நட்பு வட்டத்தில் சேர்த்து வைத்திருக்கலாம். விரும்பிய நேரத்தில் ‘unfriend' ஆக்கமுடியும். அவர்களுக்கே தர்மசங்கடமானவகையில் பதிவுகளைப் போடமுடியும். ஆக மொத்தத்தில் ஒரு குட்டி இராஜாங்கமே முகநூலில் நடாத்தலாம். அதைச் சொல்லிக்கொடுக்காமல் விட்டது தப்பு!

ஹி...ஹி... ஆபிஸரின் பார்வையில் இது அநியாயம் தான். 

எனினும், அவர் முகநூலுக்கு அடிமையானதால் அவரை அதிலிருந்து மீட்க அவரது மனைவிக்கும், மகளுக்கும் கிடைத்தது இந்த வாய்ப்புத் தான். முகநூலை அளவாகப் பயன்படுத்தினால் தவறில்லை. ஆனால் மிதமிஞ்சிய பாவனை ஆபிசர் போன்றவர்களுக்கும், அவரது குடும்பத்தவர்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமல்லவா? 😊

முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களால் இளையோருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், ஓய்வுநிலையிலுள்ள அங்கிள்மார், தாத்தாக்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளும் ஏராளம். உடலியக்கத்தை மட்டுப்படுத்துவது மட்டுமல்ல, உளவியல் ரீதியான அழுத்தங்களையும் கொடுக்கிறது.

உடல் ஊனமுற்று ஓரிடத்தில் இருப்பவர்கள் தவிர ஏனையோர் இன்னும் சமூகத்தில் பயனுள்ள வேறு பல வேலைகளைச் செய்யலாம். குறைந்த பட்சம் வீட்டுவேலைகளையாவது செய்யலாம். இவை அவர்களது ஆரோக்கியத்தைப் பேணவும் உதவலாம். 

இவை தவிர, online privacy பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லாத ஆபிசர் போன்றவர்கள் தமக்குமட்டுமல்ல, தம்மைச்சூழ உள்ளவர்களுக்கும் ஆபத்தைத் தேடித்தரலாம். தனது மகளின் appointment letterஐ முகநூலில் பகிர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இதனால் வெளிப்படையாகப் பாதிப்பு இல்லாதது போல் தெரிந்தாலும் அதைப் பார்ப்பவர்கள் misuse பண்ணச் சாத்தியமிருக்கிறது.

இன்னும், சில மூத்தோர் முகநூலில் அடிக்கும் கொசிப்புக்கள், வதந்தி பரப்புதல்கள் இவற்றால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் எழுதலாம். நீண்ட கட்டுரையாகிவிடும்! 

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிருபன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2019 at 11:48 PM, குமாரசாமி said:

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

அதுவும் சும்மா இல்லை உச்சத்தில இருக்கு எல்லாம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுவும் சும்மா இல்லை உச்சத்தில இருக்கு எல்லாம். 😀

ராகு கேதுவால பாதிக்கப்பட்டிருப்பாவோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

இன்னும், சில மூத்தோர் முகநூலில் அடிக்கும் கொசிப்புக்கள், வதந்தி பரப்புதல்கள் இவற்றால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் எழுதலாம். நீண்ட கட்டுரையாகிவிடும்

அப்படியா! 

நான் மூத்தோரை எல்லாம் கனம் பண்ணுவதுதால் அவர்களை முகநூலில் அண்டுவதில்லை😬

தப்பித்தவறி சிலரைச் சேர்த்தாலும் அவர்களை மூத்தோர்களாக கருதுவதில்லை!😎

Link to comment
Share on other sites

15 hours ago, கிருபன் said:

நான் மூத்தோரை எல்லாம் கனம் பண்ணுவதுதால் அவர்களை முகநூலில் அண்டுவதில்லை😬

தப்பித்தவறி சிலரைச் சேர்த்தாலும் அவர்களை மூத்தோர்களாக கருதுவதில்லை!😎

ஹாஹா...🤣 பொதுவாக எனக்கு மூத்தோருடன் நட்பாக இருப்பதில் பிரச்சினையில்லை. உண்மையில் நான் மதிக்கும், சந்தித்த பல மூத்தோரின் அலைவரிசை என்னுடன் ஒத்துப்போவதை உணர்ந்துள்ளேன். எனினும் நீங்கள் குறிப்பிட்டது போல் சிலர் மூத்தோர் போல நடப்பதில்லை! அவர்கள் முகநூலில் இன்னும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

கிடுகு வேலிக்கிடையே, தகர வேலிக்கிடையே என்று பேசப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள் தொலைபேசி மூலம் பரவிய காலம் தாண்டி இப்போது முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் இன்னும் தீவிரமாக, வேகமாகப் பரவுகின்றன. நல்ல ஒரு பரிணாம வளர்ச்சி தான்! 😀 Gossips/rumours without borders! 🤣

Link to comment
Share on other sites

இக்கதைக்குத் தொடர்பில்லாத ஒரு காணொளி. முகநூலால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கு எழுதும் போது நினைவுக்கு வந்தது. 

இங்கு பேச்சாளர் தான் ஏன் முகநூலைப் பயன்படுத்துவதில்லை எனவும், அதன் விளைவாகத் தான் அடைந்த நன்மைகளையும் விளக்குகிறார். மிகவும் பயனுள்ள ஒரு TedTalk. 🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2019 at 5:18 AM, குமாரசாமி said:

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

வந்தால் ஆள மட்டும் சொல்லுங்கள் மற்ற அலுவலை நான் பார்க்கிறன் 

 

வாவ்  முகநூலுக்கு அடிமையான கதையொன்று  நன்றாக இருந்தது மல்லிகை வாசம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.