Jump to content

பாசமலர்ச் சோலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

cbbek-5r454.jpg

பாசமலர்ச் சோலை

கை நிறைய மலர்கள் புன்னகையின் இதழ்கள்
கண்களிலோ மொழிகள் கலகலக்கும் ஒலிகள்

பாசமலர்ச் சோலை பால் மணக்கும் மழலை
நேசமுடன் வருடும் மயிலிறகாய் விரல்கள்

சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை
மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள்

பஞ்செனவே கால்கள் பழங்களென விழிகள்
பிஞ்செனவே விரல்கள் கொஞ்சுகின்ற பார்வை

கண்சிமிட்டும் அழகு கை அசைப்பில் அழைப்பு
சிந்துகின்ற சிரிப்பு சேய் அவனின் துடிப்பு

அபிநயமோ வேதம் அணைப்பினிலோ மோகம்
என்னவென்று வியக்கும் எடுத்தணைத்தால் மயக்கம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மயக்கும் மழலைகள் கவிபாட வைத்துள்ளார்கள்.  அழகோ அழகு அவர்களின் சிரிப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலிருந்து பிறக்கும் கவிதைகளை விட  இதயத்தில் இருந்து பிறக்கும் கவிதைகள் சுகமானவை ......!   🌺

சுட்டிகளுக்கேற்ற குட்டிக் கவிதை......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிலாமதி said:

 மயக்கும் மழலைகள் கவிபாட வைத்துள்ளார்கள்.  அழகோ அழகு அவர்களின் சிரிப்பு 

மடியில் தவழும் மழலைகள் கவி பாட வைத்துள்ளார்கள் நன்றிகள் நிலாமதி

27 minutes ago, suvy said:

அறிவிலிருந்து பிறக்கும் கவிதைகளை விட  இதயத்தில் இருந்து பிறக்கும் கவிதைகள் சுகமானவை ......!   🌺

சுட்டிகளுக்கேற்ற குட்டிக் கவிதை......!  😁

உண்மைதான் சுவி. குட்டிக் குட்டிக் கவிதைகளாய்  என் மடி தவழும் பேரக் குழந்தைகள். 

உண்மைதான் சுவி. குட்டிக் குட்டிக் கவிதைகளாய்  என் மடி தவழும் பேரக் குழந்தைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமில்லா உள்ளங்களின் பிரதிபலிப்பு.....எவ்வாறு இருக்கும் என்பதற்கு....உங்கள் கவிதை;யும்....படமும் நல்ல எடுத்துக்காட்டு....!

வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புங்கையூரன் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம். வாழ்த்துக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

5 hours ago, Kavallur Kanmani said:

சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை

மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள்

மெட்டுப் போட்டுப் பாடுதற்கு உகந்த கவி வரிகள். 😊

கவிதையை வாசித்தபோது உள்ளமும், முகமும் மலர்ந்தது. குழந்தைகள் உலகத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள், அக்கா. 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழலைகள் அருகில் இருந்துவிட்டால் எம் மனக் கவலைகள் அனைத்தும் மறந்துவிடுகிறோமல்லவா? குழந்தையாய் மனிதன் இருந்து விட்டால் குழப்பம் கலக்கம் ஏதுமில்லை என்று தெரியாமலா பாடி வைத்துள்ளார்கள். உங்கள் கருத்துக்கு நன்றிகள் மல்லிகை வாசம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை.

கள்ளமில்லா குழந்தைகள் எல்லாக் கவலைகளையும் மறக்கடிக்கச்செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரப் பிள்ளைகளுடன் குத்தாட்டம் போடுறதை சொல்லாமல் சொல்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/27/2019 at 1:12 PM, Kavallur Kanmani said:

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் கிருபன்

கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராத வரையில் வேலைப்பளு அதிகரித்துவிட்டது. அதனால் ஆறுதலாக ஆக்கங்களை வாசிக்கமுடியவில்லை. ஒவ்வொரு சொல்லையும் செதுக்கி எழுதும் ஆக்கங்களை செய்திகளையும் அரசியல் கட்டுரைகளையும் மேய்வதுபோல படிப்பது எழுதுபவர்களை அவமதிப்பதாகும் என்பதால் இன்னமும் பலவற்றைப் படிக்காமல் உள்ளேன். எனினும் எல்லாவற்றையும் விரைவில் படித்துவிடுவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுபவித்து எழுதிய அழகான கவிதை உணர்வுக்குள் தேங்குவதால் விமர்சிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.