Jump to content

அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!


nunavilan

Recommended Posts

அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!

 
  

பயங்கரவாதத்தினால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நாங்கள் (இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறோம். அந்த வகையில், தீவிரவாதம் – பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி முழுமையாக உதவ தயராக உள்ளோம் என அறிவித்துள்ளது இஸ்ரேல்.

ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பை சார்ந்த 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஜெய்ஷ் – இ- முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் பாகிஸ்தானிலேயே ஒளிந்திருப்பதாகவும், புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு உள்ளது எனவும் வெளிப்படையாக குற்றம் சாட்டிவருகிறது இந்தியா.

புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டுமென” தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரோன் மல்கா.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “காஷ்மீரில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்துக்குரியது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனை இன்றி உதவ இஸ்ரேல் தயாராக உள்ளது. எங்கள் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.neruppunews.com/2019/02/20/அகிம்சையை-கைவிடுங்கள்-அ/

http://www.neruppunews.com/2019/02/20/அகிம்சையை-கைவிடுங்கள்-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!

இன்னுமா இந்தியாவில அகிம்சை இருக்குதென்று உலகம் நம்புது?

அகிம்சை பற்றி கதைத்தவர்களையே போட்டுத் தள்ளிய நாடாச்சே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலை அகிம்சை இருந்தால் எங்களுக்கு ஏன் இந்தப்பாடு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

இஸ்ரேல், பாலஸ்த்தீனர்களின் பூமியை அடாத்தாக ஆக்கிரமித்துக்கொண்டு, அதற்கெதிராகப் போராடிவரும் பாலஸ்த்தீனர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், அயல் நாடுகளான லெபனன், ஜோர்டன் மற்றும் சிரியா ஆகியவற்றில் தலைமறைவாகச் செயற்படும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய பாலஸ்த்தீனப் போராளிக் குழுக்களைக் கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது எல்லைகடந்து வலிந்த தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த அடாவடித்தனம் பற்றி எவருமே பேசுவதில்லை. அமெரிக்காவின் வெளிப்படையான ஆசீர்வாதமும், ஆதரவும் இருப்பதால் இஸ்ரேலினை அயலிலுள்ள அரபு நாடுகளால் எதுவுமே செய்ய முடிவதில்லை. 

இந்தியாவும் இஸ்ரேலுக்குச் சளைத்தது அல்ல. தனக்குச் சொந்தமில்லாத காஷ்மீரில் லட்சக்கணக்கான படையினரைக் குவித்து வைத்துக்கொண்டு அம்மக்களை முற்றான ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்கிறது. தனது ஆக்கிரமிப்பிற்கெதிராகப் போராடிவரும் காஷ்மீர்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு, இஸ்ரேல் பாணியிலேயே அம்மக்களை அவப்போது கொன்றுவருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறிக்கொண்டு, தனக்குச் சொந்தமில்லாத நாட்டின் எல்லையொன்றில் போய்நின்றுகொண்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. ஈழ விடயத்தில், இலங்கைக்கு எதிராக தமிழ்ப் போராளிக் குழுக்களை 1980 களின் ஆரம்பத்தில் இந்தியா ஆதரித்தது போன்று, பாக்கிஸ்த்தான் காஷ்மீர் போராளிகளைப் பாவிக்கிறது. இந்திய - பாக்கிஸ்த்தானிய எல்லைச் சண்டையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டு வருவது, காஷ்மீர் மக்களென்றால் அது மிகையாகாது.

ஆனால், ஒரு விடயத்தில் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் செயற்பட முடியாது. தனக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல்களை நடத்த முடியாது. அணுவாயுத வல்லமையைப் பெற்றிருக்கும் இவ்விரு நாடுகளும் ஒருவர் மீது மற்றையவர் தாக்குவதை தவிர்த்தே வருகின்றனர். இடைக்கிடையே கார்கில் போன்ற மரபுவழிப் போர்களில் ஈடுபட்டாலும்கூட, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குவதைத் தவிர்த்தே வந்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

இஸ்ரேல், பாலஸ்த்தீனர்களின் பூமியை அடாத்தாக ஆக்கிரமித்துக்கொண்டு, அதற்கெதிராகப் போராடிவரும் பாலஸ்த்தீனர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், அயல் நாடுகளான லெபனன், ஜோர்டன் மற்றும் சிரியா ஆகியவற்றில் தலைமறைவாகச் செயற்படும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய பாலஸ்த்தீனப் போராளிக் குழுக்களைக் கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது எல்லைகடந்து வலிந்த தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த அடாவடித்தனம் பற்றி எவருமே பேசுவதில்லை. அமெரிக்காவின் வெளிப்படையான ஆசீர்வாதமும், ஆதரவும் இருப்பதால் இஸ்ரேலினை அயலிலுள்ள அரபு நாடுகளால் எதுவுமே செய்ய முடிவதில்லை. 

இந்தியாவும் இஸ்ரேலுக்குச் சளைத்தது அல்ல. தனக்குச் சொந்தமில்லாத காஷ்மீரில் லட்சக்கணக்கான படையினரைக் குவித்து வைத்துக்கொண்டு அம்மக்களை முற்றான ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்கிறது. தனது ஆக்கிரமிப்பிற்கெதிராகப் போராடிவரும் காஷ்மீர்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு, இஸ்ரேல் பாணியிலேயே அம்மக்களை அவப்போது கொன்றுவருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறிக்கொண்டு, தனக்குச் சொந்தமில்லாத நாட்டின் எல்லையொன்றில் போய்நின்றுகொண்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. ஈழ விடயத்தில், இலங்கைக்கு எதிராக தமிழ்ப் போராளிக் குழுக்களை 1980 களின் ஆரம்பத்தில் இந்தியா ஆதரித்தது போன்று, பாக்கிஸ்த்தான் காஷ்மீர் போராளிகளைப் பாவிக்கிறது. இந்திய - பாக்கிஸ்த்தானிய எல்லைச் சண்டையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டு வருவது, காஷ்மீர் மக்களென்றால் அது மிகையாகாது.

ஆனால், ஒரு விடயத்தில் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் செயற்பட முடியாது. தனக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல்களை நடத்த முடியாது. அணுவாயுத வல்லமையைப் பெற்றிருக்கும் இவ்விரு நாடுகளும் ஒருவர் மீது மற்றையவர் தாக்குவதை தவிர்த்தே வருகின்றனர். இடைக்கிடையே கார்கில் போன்ற மரபுவழிப் போர்களில் ஈடுபட்டாலும்கூட, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குவதைத் தவிர்த்தே வந்திருக்கின்றன.

இது எதிரிக்கு எதரி  நண்பன்  கதை  தான்...

அத்துடன்  வியாபாரம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.