Jump to content

ஜனாதிபதிக்கு எதிராக மற்றுமொரு அடிப்படை உரிமை மனுத் தாக்கல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

104186025_3f53780c-fe7c-4adb-b593-02cbb8368ef3.jpg

ஜனாதிபதிக்கு எதிராக மற்றுமொரு அடிப்படை உரிமை மனுத் தாக்கல்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என குற்றம் சுமத்தியே இந்த மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

14 நாட்கள் வரையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதும், நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை மீண்டும் மீண்டும் நியமிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்ட நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் பரிந்துரைத்து வருகிறார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் மற்றும் ஏனைய உயர்மட்ட அரச பதவிகளுக்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடனேயே நியமனங்களை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதிக்கு-எதிராக-மற்ற/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.