Jump to content

ராணு­வத்­தைக் காட்­டிக் கொடுத்த ரணிலை சிங்­க­ள­வர்­கள் மன்­னிக்­கவே மாட்­டார்­கள் -கொக்­க­ரிக்­கி­றார் கோத்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராணு­வத்­தைக் காட்­டிக் கொடுத்த ரணிலை சிங்­க­ள­வர்­கள் மன்­னிக்­கவே மாட்­டார்­கள் -கொக்­க­ரிக்­கி­றார் கோத்தா

பதிவேற்றிய காலம்: Feb 21, 2019

எமது இரா­ணு­வத்­தி­னர் போர்க்­குற்­றங்­க­ளில் ஒரு­போ­தும் ஈடு­ப­ட­வில்லை. இறு­திப் போரில் அவர்­கள் மனி­தத் தன்­மை­யு­டன் நடந்­தார்­கள். தமது உயிரை அர்ப்­ப­ணித்து தமிழ் மக்­களை மீட்­டெ­டுத்­தார்­கள். இரா­ணு­வத்­தி­ன­ரும் போர்க்­குற்­றம் புரிந்­த­னர் என்று வடக்­கில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மாபெ­ரும் பொய் ஒன்­றைச் சொல்­லி­யுள்­ளார்.

எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் வடக்கு மக்­க­ளின் வாக்­கு­களை தம் வசப்­ப­டுத்­தவே இந்­தப் பொய்யை தலைமை அமைச்­சர் கூறி­யுள்­ளார். ஆனால், தெற்­கில் உள்ள மக்­கள் அவரை மன்­னிக்­கவே மாட்­டார்­கள். இப்­ப­டிக் கூறி­யுள்­ளார் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போரின்­போது எமது இரா­ணு­வத்­தால் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளின் சட­லங்­க­ளின் படங்­க­ளை­யும், விடு­த­லைப் புலி­க­ளால் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட பொது­மக்­க­ளின் சட­லங்­க­ளின் படங்­க­ளை­யும் வைத்­துக்­கொண்டு இரா­ணு­வத்­தி­னர் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்று புலம்­பெ­யர் புலி­கள் அமைப்­பி­னர் கருத்து வெளி­யி­டு­கின்­ற­னர். இதை சில நாடு­க­ளும், சில பன்­னாட்டு அமைப்­பு­க­ளும் நம்­பு­கின்­ற­னர். இந்த நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில்­தான் ஜெனி­வா­வில் இலங்கை மீது போர்க்­குற்ற தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

தற்­போது இவற்றை நியா­யப்­ப­டுத்­தும் வகை­யில் தலைமை அமைச்­சர் ரணி­லும் கருத்து வெளி­யிட்­டுள்­ளார். தமிழ் மத்­தி­யில் தனது அர­சி­யல் இருப்பை தக்­க­வைக்­கவே தலைமை அமைச்­சர் பொய்­யு­ரைக்­கின்­றார்.

இறு­திப் போரின் பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ராக நான் இருந்­தேன். எமது இரா­ணு­வத்­தி­னர் எந்­தச் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை. அவர்­கள் மிக­வும் நேர்­மை­யு­டன் நடந்­தார்­கள்.

போரின் நிறை­வில் சர­ண­டைந்த 12 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட விடு­த­லைப்­பு­லிப் போரா­ளி­களை எமது இரா­ணு­வத்­தி­னர் பக்­கு­வ­மாக எம்­மி­டம் ஒப்­ப­டைத்­தார்­கள். அந்­தப் போரா­ளி­க­ளுக்கு நாம் மறு­வாழ்வு வழங்­கி­னோம். பின்­னர் அவர்­களை விடு­தலை செய்து சமூ­கத்­தில் இணைத்­தோம்.

இந்­நி­லை­யில், எமது இரா­ணு­வத்­தி­ன­ரைக் காட்­டிக் கொடுக்­கும் வகை­யில் தலைமை அமைச்­சர் ரணில் செயற்­ப­டு­கின்­றார். இதற்­கான தண்­ட­னையை தேர்­த­லின்­போது அவர் எதிர்­நோக்­கு­வார். தெற்கு மக்­கள் ஒரு­போ­தும் அவரை மன்­னிக்­க­மாட்­டார்­கள் – என்­றார்.

 

https://newuthayan.com/story/10/ராணு­வத்­தைக்-காட்­டிக்-கொடுத்த-ரணிலை-சிங்­க­ள­வர்­கள்-மன்­னிக்­கவே-மாட்­டார்­கள்.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பல வீடியேக்கள் எல்லாம் வந்ததே அவைகள் பொய்யா? சனல்4 வெளியிட்டாது எல்லாம் பொய்யா?

அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்

Link to comment
Share on other sites

மகா பொய் வம்சத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள பௌத்த மிலேச்ச பயங்கரவாதி கோத்தபாய போன்ற பயங்கரவாதிகளிடமிருந்து உண்மை வெளிவரும் என்று எப்போதும் எதிர்பார்க்க முடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.