Jump to content

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21


Recommended Posts

       உலகில் பிறந்த எத்தவொரு மனிதனுக்கும் தாய் மொழி என்பது உரித்தானது. மனிதன் தன் உணர்வுகளையும் உள்ளக் கிடக்கைகளையும் வெளிக்காட்டுவதற்கு மொழி உதவுகின்றது .         1999 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தினம் உலகமெலாம் கொண்டாடப்படுகிறது.

               நம்முடைய  தாய்மொழியாம்  தமிழ்  மிகவும்  தொன்மையானதும்,  இனிமையானதும்  ஆகும். தாய்மொழியில்  எழுதவும் பேசவும்  சிறப்புற்ற  மனிதனின்  சிந்தனை ,செயல் என்பன சிறப்பானதாகவே இருக்கும். தாய்மொழி கற்றலில் சிறந்த மனிதனால் வேற்றுமொழிகளையும் சிறப்புற கற்க முடியும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. நம் தாய் மொழியாம் தமிழின் மீதான பற்று தமிழர் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

               புலம்பெயர் நாடுகளில் எம் சிறார்கள் வாழிடமொழியிலேயே தம் கல்வியை தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார்கள். பிறமொழியை அவர்கள்  கற்றாலும், எம் தமிழ் மொழியை அவர்கள் கற்பதற்கு நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.   தாய்மொழி பேணல் மூலமே எம் கலாச்சாரம், பண்பாடு  என்பவற்றை  காக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. புலம்பெயர் மண்ணில் இன்றைய இளம் பிராயத்தினரில் பெரும்பாலானோர் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரின் தமிழ் கற்பதை  கண்கூடாக காண்கின்றோம். இவர்களை அடுத்து வரும் தலைமுறை தமிழ் பேசுமா? என்பது ஐயமாக உள்ளது. தமிழை விருப்புடன் கற்க நாம் தூண்டவேண்டும். தாய் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் எம் இளைய சமுதாயத்தை நாம் தயாராக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழியை பேணிப்பாதுகாக்க இந்நாளில் உறுதிகொள் வோம்.

Link to comment
Share on other sites

அண்மையில் ஒரு சிறுவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு சென்றேன். சிறுவர்களின் பெயர்கள் கென்றி, ஜோகான், ராகுல், ஜோதிகா, கொன்சில்யா, கரிஸ்,டிலான்.  பெயர்களைப் பார்த்தால் சிங்கள, போத்துக்கேய, ஆங்கில, கிந்திப் பெயர்கள். ஆனால் இவர்கள் ஈழத்தமிழர்கள்.  இவர்கள் பிற்காலங்களில் சாதனைகள் படைக்கும்போது அவை ஒரு சிங்களவர் அல்லது போத்துக்கேயர் அல்லது  கிந்திக்காரர் என்றே பெரும்பான்மையினரால் அழைக்கப்படுவார்கள். தமிழில் அழகான பெயர் எத்தனையோ இருக்கின்றன. சேயோன், கயல், மயூரன், அகிலன், சுடர், சுரபி, செவ்வேள், இலக்கியா .  சைவ சமயத்தினைப் பின்பற்றும் தமிழர்கள் எண்சோதிட மாயையினால்  தமிழ் அல்லாத சிங்கள ,கிந்தி, தெழுங்குப் பெயர்களைச் சூடுகிறார்கள். எண் சோதிடம் ஆங்கில எழுத்துக்களை வைத்துக் கணிக்கிறார்கள்.  வெள்ளைக்காரர்கள் இலங்கையினை ஆண்டபோது ஆங்கில எழுத்துக்கள் இலங்கைக்கு வந்தன. கிட்டத்தட்ட 300 வருடங்கள். சீனர்கள் வந்திருந்தால் சிலவேளை எண்சோதிடம் சீன எழுத்துக்களை வைத்துக் கணிக்கப்பட்டிருக்கலாம்.  எண்சோதிட மாயையில் சிக்கி அடையாளத்தினை இழக்கிறார்கள் சைவ சமயத்தினர். அதேபோல கத்தோலிக்க சமயத்தினைப் பின்பற்றுபவர்கள் ஆங்கில ,போத்துக்கேயர் பெயர்களை சூடுகிறார்கள்.  தமிழிலும் கத்தோலிக்க மதப்பெயர்கள் இருக்கின்றன். உ+ம் சூசை.  தாய்மொழியைப் பேணிப்பாதுகாப்பதுடன், பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப்பெயர்களை சூட்டுவோம் என்று உறுதிகொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2019 at 4:04 AM, ஜெகதா துரை said:

   நம்முடைய  தாய்மொழியாம்  தமிழ்  மிகவும்  தொன்மையானதும்,  இனிமையானதும்  ஆகும். தாய்மொழியில்  எழுதவும் பேசவும்  சிறப்புற்ற  மனிதனின்  சிந்தனை ,செயல் என்பன சிறப்பானதாகவே இருக்கும். தாய்மொழி கற்றலில் சிறந்த மனிதனால் வேற்றுமொழிகளையும் சிறப்புற கற்க முடியும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. நம் தாய் மொழியாம் தமிழின் மீதான பற்று தமிழர் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

உலகம் பிறக்கும் போது பிறந்த மொழி தமிழ் என்கிறார்கள்.ஆனாலும் இப்போ மிகவும் சுருங்கிக் கொண்டு போவது கவலை தரும் விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஜெகதா துரை .......உங்களின் ஆதங்கம் புலப்படுகின்றது......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கந்தப்பு said:

அண்மையில் ஒரு சிறுவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு சென்றேன். சிறுவர்களின் பெயர்கள் கென்றி, ஜோகான், ராகுல், ஜோதிகா, கொன்சில்யா, கரிஸ்,டிலான்.  பெயர்களைப் பார்த்தால் சிங்கள, போத்துக்கேய, ஆங்கில, கிந்திப் பெயர்கள். ஆனால் இவர்கள் ஈழத்தமிழர்கள்.  இவர்கள் பிற்காலங்களில் சாதனைகள் படைக்கும்போது அவை ஒரு சிங்களவர் அல்லது போத்துக்கேயர் அல்லது  கிந்திக்காரர் என்றே பெரும்பான்மையினரால் அழைக்கப்படுவார்கள். தமிழில் அழகான பெயர் எத்தனையோ இருக்கின்றன. சேயோன், கயல், மயூரன், அகிலன், சுடர், சுரபி, செவ்வேள், இலக்கியா .  சைவ சமயத்தினைப் பின்பற்றும் தமிழர்கள் எண்சோதிட மாயையினால்  தமிழ் அல்லாத சிங்கள ,கிந்தி, தெழுங்குப் பெயர்களைச் சூடுகிறார்கள். எண் சோதிடம் ஆங்கில எழுத்துக்களை வைத்துக் கணிக்கிறார்கள்.  வெள்ளைக்காரர்கள் இலங்கையினை ஆண்டபோது ஆங்கில எழுத்துக்கள் இலங்கைக்கு வந்தன. கிட்டத்தட்ட 300 வருடங்கள். சீனர்கள் வந்திருந்தால் சிலவேளை எண்சோதிடம் சீன எழுத்துக்களை வைத்துக் கணிக்கப்பட்டிருக்கலாம்.  எண்சோதிட மாயையில் சிக்கி அடையாளத்தினை இழக்கிறார்கள் சைவ சமயத்தினர். அதேபோல கத்தோலிக்க சமயத்தினைப் பின்பற்றுபவர்கள் ஆங்கில ,போத்துக்கேயர் பெயர்களை சூடுகிறார்கள்.  தமிழிலும் கத்தோலிக்க மதப்பெயர்கள் இருக்கின்றன். உ+ம் சூசை.  தாய்மொழியைப் பேணிப்பாதுகாப்பதுடன், பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப்பெயர்களை சூட்டுவோம் என்று உறுதிகொள்வோம்.

கலோ கந்தப்பர்! மேலைத்தேயத்தை ஆதாவது வெள்ளைக்காரனை பாத்து நாங்கள் திருந்த வேணுமெண்டு உங்கை/இஞ்சை கனபேர் சொல்லிக்கொண்டு திரியினம்...சாப்பாடு கலை கலாச்சாரத்திலை வெள்ளைக்காரர் திறமாம்.மற்றது எங்கடை பெயர் எல்லாம் கொம்பியூட்டருக்கு நீண்டு போச்சுதாம். வெள்ளைக்காரங்களின்ரை வாயிலையே நுளையாத பெயராம். என்ரை பெயர் திருலோகச்செல்வன் குமாரசாமி. இந்தப்பெயர் நீளம் கூடிப்போச்சாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கந்தப்பு said:

அண்மையில் ஒரு சிறுவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு சென்றேன். சிறுவர்களின் பெயர்கள் கென்றி, ஜோகான், ராகுல், ஜோதிகா, கொன்சில்யா, கரிஸ்,டிலான்.  பெயர்களைப் பார்த்தால் சிங்கள, போத்துக்கேய, ஆங்கில, கிந்திப் பெயர்கள். ஆனால் இவர்கள் ஈழத்தமிழர்கள்.  இவர்கள் பிற்காலங்களில் சாதனைகள் படைக்கும்போது அவை ஒரு சிங்களவர் அல்லது போத்துக்கேயர் அல்லது  கிந்திக்காரர் என்றே பெரும்பான்மையினரால் அழைக்கப்படுவார்கள்

இதான் உண்மை இப்ப தமிழ் பெயர் ஓடிப்போய் வட நாட்டுப் பெயர்களாக வருகிறது மற்றது 

தமிழ் மட்டும் கற்பதால் வேலையெல்லாம் கிடைக்காது மற்ற மொழிகளை கற்றாலும் பேசினாலும் தமிழை விட்டுக்கொடுக்காதவர்களை காணமுடியாதுள்ளது பெயரே காப்பாற்ற முடியல தமிழை எங்கே காப்பாற்ற போகிறோம் அதாவது இருக்கும் தமிழர்கள் இருப்பார்கள் தமிழும் இருக்கும் ஆனால் பேச்சில் இராது சொல்லிக்கொள்ள இருக்கும் 

1 hour ago, குமாரசாமி said:

திருலோகச்செல்வன் குமாரசாமி. இந்தப்பெயர் நீளம் கூடிப்போச்சாம்.

இந்த பெயரை சுருக்கி உங்களுக்கு இன்று முதல் தி .லோ. செ. கு என்று அழைக்கிறம் நாங்கள் உங்களுக்கு எப்படி சாமியோவ்:):)

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

கலோ கந்தப்பர்! மேலைத்தேயத்தை ஆதாவது வெள்ளைக்காரனை பாத்து நாங்கள் திருந்த வேணுமெண்டு உங்கை/இஞ்சை கனபேர் சொல்லிக்கொண்டு திரியினம்...சாப்பாடு கலை கலாச்சாரத்திலை வெள்ளைக்காரர் திறமாம்.மற்றது எங்கடை பெயர் எல்லாம் கொம்பியூட்டருக்கு நீண்டு போச்சுதாம். வெள்ளைக்காரங்களின்ரை வாயிலையே நுளையாத பெயராம். என்ரை பெயர் திருலோகச்செல்வன் குமாரசாமி. இந்தப்பெயர் நீளம் கூடிப்போச்சாம்.

எங்களுடைய ஆட்கள் மேல்நாட்டு கலாச்சாரத்துக்கு மாற இங்கே உள்ள french ஆட்கள் இணையத்தில் எங்கள் சமையல் மருத்துவம் என்பனவற்றைப்பார்த்து புரியாணி மசாலா, இஞ்சி, மஞ்சள், தேங்காய் எல்லாம் வாங்குகிறார்கள்.

20 hours ago, கந்தப்பு said:

அண்மையில் ஒரு சிறுவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு சென்றேன். சிறுவர்களின் பெயர்கள் கென்றி, ஜோகான், ராகுல், ஜோதிகா, கொன்சில்யா, கரிஸ்,டிலான்.  பெயர்களைப் பார்த்தால் சிங்கள, போத்துக்கேய, ஆங்கில, கிந்திப் பெயர்கள். ஆனால் இவர்கள் ஈழத்தமிழர்கள்.  இவர்கள் பிற்காலங்களில் சாதனைகள் படைக்கும்போது அவை ஒரு சிங்களவர் அல்லது போத்துக்கேயர் அல்லது  கிந்திக்காரர் என்றே பெரும்பான்மையினரால் அழைக்கப்படுவார்கள். தமிழில் அழகான பெயர் எத்தனையோ இருக்கின்றன. சேயோன், கயல், மயூரன், அகிலன், சுடர், சுரபி, செவ்வேள், இலக்கியா .  சைவ சமயத்தினைப் பின்பற்றும் தமிழர்கள் எண்சோதிட மாயையினால்  தமிழ் அல்லாத சிங்கள ,கிந்தி, தெழுங்குப் பெயர்களைச் சூடுகிறார்கள். எண் சோதிடம் ஆங்கில எழுத்துக்களை வைத்துக் கணிக்கிறார்கள்.  வெள்ளைக்காரர்கள் இலங்கையினை ஆண்டபோது ஆங்கில எழுத்துக்கள் இலங்கைக்கு வந்தன. கிட்டத்தட்ட 300 வருடங்கள். சீனர்கள் வந்திருந்தால் சிலவேளை எண்சோதிடம் சீன எழுத்துக்களை வைத்துக் கணிக்கப்பட்டிருக்கலாம்.  எண்சோதிட மாயையில் சிக்கி அடையாளத்தினை இழக்கிறார்கள் சைவ சமயத்தினர். அதேபோல கத்தோலிக்க சமயத்தினைப் பின்பற்றுபவர்கள் ஆங்கில ,போத்துக்கேயர் பெயர்களை சூடுகிறார்கள்.  தமிழிலும் கத்தோலிக்க மதப்பெயர்கள் இருக்கின்றன். உ+ம் சூசை.  தாய்மொழியைப் பேணிப்பாதுகாப்பதுடன், பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப்பெயர்களை சூட்டுவோம் என்று உறுதிகொள்வோம்.

உண்மைதான் எண் சாத்திர மாயையில் சிக்கி அர்த்தம் தெரியாத, புரியாத பெயர்களை வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

இந்த பெயரை சுருக்கி உங்களுக்கு இன்று முதல் தி .லோ. செ. கு என்று அழைக்கிறம் நாங்கள் உங்களுக்கு எப்படி சாமியோவ்:):)

இது ஒரு கட்சிப் பெயர் மாதிரி இருக்கு தனி....... அவர் எவ்வளவு மரியாதைக்கு உரியவர். அதனால் அவர் பெயருக்கு முன்னால்  ஒரு" திரு " போட்டு திரு. திரு சாமி ....எப்படி இருக்கு.....!  😁

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

கலோ கந்தப்பர்! மேலைத்தேயத்தை ஆதாவது வெள்ளைக்காரனை பாத்து நாங்கள் திருந்த வேணுமெண்டு உங்கை/இஞ்சை கனபேர் சொல்லிக்கொண்டு திரியினம்...சாப்பாடு கலை கலாச்சாரத்திலை வெள்ளைக்காரர் திறமாம்.மற்றது எங்கடை பெயர் எல்லாம் கொம்பியூட்டருக்கு நீண்டு போச்சுதாம். வெள்ளைக்காரங்களின்ரை வாயிலையே நுளையாத பெயராம். என்ரை பெயர் திருலோகச்செல்வன் குமாரசாமி. இந்தப்பெயர் நீளம் கூடிப்போச்சாம்.

சுரபி, சுடர், கயல்,நேயன், நிலவன், உமை - இவை தூய தமிழ்ப் பெயர்கள்.  தமிழ்ப் பெயர்கள் நீண்ட பெயர் என்று சொல்லி வேற்று மொழிப் பெயரைச் சூட்டுவது  நொண்டிச்சாட்டு.    திருலோகச்செல்வன் குமாரசாமி என்பதினை வேலை செய்யும் இடங்களில் செல்வன் அல்லது செல்வா அல்லது திரு என்று கூப்பிடலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜெகதா துரை said:

எங்களுடைய ஆட்கள் மேல்நாட்டு கலாச்சாரத்துக்கு மாற இங்கே உள்ள french ஆட்கள் இணையத்தில் எங்கள் சமையல் மருத்துவம் என்பனவற்றைப்பார்த்து புரியாணி மசாலா, இஞ்சி, மஞ்சள், தேங்காய் எல்லாம் வாங்குகிறார்கள்.

இஞ்சி மஞ்சள் தேங்காயிலை நல்ல மருத்துவ குணங்கள் இருக்கெண்டு அப்பவே எங்கடை பரியாரிமார் சொல்ல....முளைச்சு மூண்டு இலை விடாதவையள் ஆதாரம்  இருக்கோ அது இருக்கோ இது இருக்கோ எண்டு துள்ளி குதிச்சவையள் கண்டியளோ.
இப்ப வெள்ளைக்காரன் மஞ்சள் இஞ்சி தேங்காய் எண்டு அலைய வெளிக்கிட....அவையள் கப்சிப்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:

இது ஒரு கட்சிப் பெயர் மாதிரி இருக்கு தனி....... அவர் எவ்வளவு மரியாதைக்கு உரியவர். அதனால் அவர் பெயருக்கு முன்னால்  ஒரு" திரு " போட்டு திரு. திரு சாமி ....எப்படி இருக்கு.....!  😁

ஓ.கே...ஓ.கே....எனக்கு டபுள் ஓகே..........:grin:

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Booty GIFs

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/25/2019 at 12:40 PM, கந்தப்பு said:

சுரபி, சுடர், கயல்,நேயன், நிலவன், உமை - இவை தூய தமிழ்ப் பெயர்கள்.  தமிழ்ப் பெயர்கள் நீண்ட பெயர் என்று சொல்லி வேற்று மொழிப் பெயரைச் சூட்டுவது  நொண்டிச்சாட்டு.    திருலோகச்செல்வன் குமாரசாமி என்பதினை வேலை செய்யும் இடங்களில் செல்வன் அல்லது செல்வா அல்லது திரு என்று கூப்பிடலாம்.  

 

On 2/26/2019 at 12:56 AM, குமாரசாமி said:

ஓ.கே...ஓ.கே....எனக்கு டபுள் ஓகே..........:grin:

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Booty GIFs

 

On 2/25/2019 at 9:51 AM, suvy said:

இது ஒரு கட்சிப் பெயர் மாதிரி இருக்கு தனி....... அவர் எவ்வளவு மரியாதைக்கு உரியவர். அதனால் அவர் பெயருக்கு முன்னால்  ஒரு" திரு " போட்டு திரு. திரு சாமி ....எப்படி இருக்கு.....!  😁

உந்தத் திரு எண்சாத்திரப்படி சரியில்லையாம். துரு என்று மாத்தி ‘துருச்சாமி’ என்று கூப்பிடலாம்!

பழகிய பேராக வேற இருக்கின்றது😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

உந்தத் திரு எண்சாத்திரப்படி சரியில்லையாம். துரு என்று மாத்தி ‘துருச்சாமி’ என்று கூப்பிடலாம்!

பழகிய பேராக வேற இருக்கின்றது😁

 

கு.சா அண்ணரை துருப்பிடிச்ச இரும்பென மறைமுகமாக துருச் சாமி என்றழைப்பதை வன்மையாக கண்(ண)டிக்கிறேன்!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கு.சா அண்ணரை துருப்பிடிச்ச இரும்பென மறைமுகமாக துருச் சாமி என்றழைப்பதை வன்மையாக கண்(ண)டிக்கிறேன்!😋

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் உங்களுக்கு துருச்சாமியை தெரியாது!

இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

https://yarl.com/forum3/topic/191220-துருச்சாமி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் உங்களுக்கு துருச்சாமியை தெரியாது!

இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

https://yarl.com/forum3/topic/191220-துருச்சாமி/

துருச்சாமி வாசித்திருக்கிறேன் அண்ணா, நகைச்சுவைக்காக எழுதினேன்.
உங்களை சங்கடப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

துருச்சாமி வாசித்திருக்கிறேன் அண்ணா, நகைச்சுவைக்காக எழுதினேன்.
உங்களை சங்கடப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.

ஜஸ்ரின் நல்லா வெருட்டிப்போட்டார் போல! எப்பவும் வருந்துகின்றேன் என்று apologist ஆக இருக்கின்றீர்கள்! எனக்கும் சீரியஸுக்கும் தூரம் அதிகம்!! ஆனால் கோபத்திற்கு பக்கத்துவீடு😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஜஸ்ரின் நல்லா வெருட்டிப்போட்டார் போல! எப்பவும் வருந்துகின்றேன் என்று apologist ஆக இருக்கின்றீர்கள்! எனக்கும் சீரியஸுக்கும் தூரம் அதிகம்!! ஆனால் கோபத்திற்கு பக்கத்துவீடு😂

ஜஸ்ரின் அண்ணாவின் கருத்துக்கள் பிடிக்கும், தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று வாதிடும் போது என்ன செய்வது!
தாயகத்தில தான் நாங்களும் இருக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

 

உந்தத் திரு எண்சாத்திரப்படி சரியில்லையாம். துரு என்று மாத்தி ‘துருச்சாமி’ என்று கூப்பிடலாம்!

பழகிய பேராக வேற இருக்கின்றது😁

 

அது ஒன்றும் மாற்ற தேவையில்லை. வேண்டுமென்றால் திருவுடன் இரண்டு எழுத்து சேர்த்து திருட்டுசாமி என்று அழைக்கலாம்.

 

1 hour ago, ஏராளன் said:

கு.சா அண்ணரை துருப்பிடிச்ச இரும்பென மறைமுகமாக துருச் சாமி என்றழைப்பதை வன்மையாக கண்(ண)டிக்கிறேன்!😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2019 at 8:20 PM, ஈழப்பிரியன் said:

அது ஒன்றும் மாற்ற தேவையில்லை. வேண்டுமென்றால் திருவுடன் இரண்டு எழுத்து சேர்த்து திருட்டுசாமி என்று அழைக்கலாம்.

என்னது.....அங்கை சத்தம்.......😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.