Jump to content

இராணுவத்தினருடன் போரிட்ட புலிகளை மன்னித்துவிட்டோம், தமிழர்கள்தான் இனி இறங்கிவரவேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படையினருக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிக்கப்பட்டனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது. இவ்வாறு முன்னாள் வான்படைத் தளபதி எயார் சீப் மார்சல் ரொசான் குணதிலக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

போர் முடிவடைந்தப் பின்னர், புலி உறுப்பினர்கள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு புலி உறுப்பினர்கள் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ள, இத்தகைய செயற்பாடுகளை தமிழர் தரப்பு வரவேற்கவேண்டும்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.

போர்காலத்தில் எனது தம்பி, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அதற்காக நான் தமிழ் மக்களுடன் முரண்படவில்லை. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர் – என்றார்.

https://newuthayan.com/story/10/இராணுவத்தினருடன்-போரிட்ட-புலிகளை-மன்னித்துவிட்டோம்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமய்யா 6 மாதம், 1 வருடம் புனர்வாழ்வு கொடுத்து விட்டனிங்கள். அது போல குற்றமிழைத்த படையினரை கைது செய்து புனர்வாழ்வளித்து விடுங்கோ!

20 hours ago, பிழம்பு said:

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.

இதுக்குமேல குனிஞ்சால் முள்ளந்தண்டு உடைஞ்சுபோம், அதோட கூட்டமைப்புக்கும் வாக்கு விழாது!

Link to comment
Share on other sites

இறுதியில், மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்தான் தமிழருக்கு கைகொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

இறுதியில், மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்தான் தமிழருக்கு கைகொடுக்கும்.

சுலோகம்  கூடவா  தமிழருக்கு 

சுயமாக  இருக்கக்கூடாது?????

Link to comment
Share on other sites

5 hours ago, thulasie said:

இறுதியில், மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்தான் தமிழருக்கு கைகொடுக்கும்.

நீங்கள் கூறுவது சரி தான். மன்னிப்பத‍ற்கு உரிய அதிகாரம் தமிழருக்கு கிடைத்த மறுகணமே சிங்கள இராணுவத்தால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களை மன்னித்துவிடுவார்கள். ஆனால் மறக்கமாட்டார்கள். ஏனென்றால் வரலாற்றை மறக்காது நினைவு வைத்திருக்கும் நாடுகள் தான் உலகில் வளர்ச்சியடைந்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி சொல்ல வரும் விடயத்திலும் பார்க்க அதன் தலைப்பு அமைக்கப்பட்ட விதத்தில் தான் எனது சிந்தனை செல்கிறது.

காரணம் இராணுவத்துடன் போரிட்ட புலிகளை மன்னித்துவிட்டோம்  (தமிழர் செய்த பிழைகளை சிங்களவர்கள் மன்னித்துவிட்டார்கள்) என்ற உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை வெளிப்படையாக சொல்லி அதற்குப் பிரதிபலனாக இராணுவம்  (சிங்களவர்) செய்த பிழைகளை தமிழர் மன்னிக்கவேண்டியது தான் இனி பாக்கி என்ற வேண்டுகோளை மறைமுகமான ஒரு தொனியில் சொல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழர்கள் தான் இனி விட்டுக்கொடுப்புகளைச் செய்யவேண்டும், தமிழர் தமது பிடிவாதத்தைக் கைவிடவேண்டும் என்ற பாணியில்அதற்காக சொற்கள் கவனமாக் கையாளப்பட்டு தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.

இராணுவம்  செய்த பிழைகளை தமிழர் மன்னிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை செய்தியில் வெளிப்படையாக எழுதினால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டது போலாகிவிடும் என்பதால் இங்குகூட இராணுவத்தை பாதுகாக்க சிங்கள இனவாதிகளால் மிக்க கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

1 hour ago, vanangaamudi said:

 

இராணுவம்  செய்த பிழைகளை தமிழர் மன்னிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை செய்தியில் வெளிப்படையாக எழுதினால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டது போலாகிவிடும் என்பதால் இங்குகூட இராணுவத்தை பாதுகாக்க சிங்கள இனவாதிகளால் மிக்க கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி வாங்கினவனையே மன்னிப்பு கேக்க வைக்கிற உங்க விசுவாசம் புல்லரிக்க வைக்குதுங்க!

Link to comment
Share on other sites

கடந்த 35 வருடங்களாக சிங்கள தரப்பிலுள்ள சகல தலைவர்களையும் சகல சிங்கள இராணுவ அதிகாரிகளையும் அவர்களை ஆதரித்த ஒரு 10 இலட்சம் சிங்களவர்களையும் கொன்ற பின்னர், 10,000 சிங்கள அப்பாவிகளை சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று சிறைகளில் அடைத்த பின்னர், சிங்களவர்களின் 10 இலட்சம் வீடுகளை குண்டு வீசி தகர்த்த பின்னர், சிங்களவர்களின் 10 இலட்சம் ஏக்கர் காணிகளை தமிழர் ஆக்கிரமித்த பின்னர் மறப்போம் மன்னிப்போம் என கதையளப்பதில் கொஞ்சமாவது நீதி நியாயம் இருக்கும்!

Link to comment
Share on other sites

9 hours ago, thulasie said:

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறோம் ....வளரட்டும் உங்கள் விசுவாசம் ....

தமிழின விரோதி சுமந்திரன் இந்த கருத்தினை சொல்லிவிட்டார் ....இதனை ஒரு சிங்கள அரசியல்வாதி சொல்லுவதில் ஒரு புதினமும் இல்லை .....மக்கள் செய்ய வேண்டியது அடுத்த தேர்தலில் இவர்களை துரத்துவது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிரபாதாசன் said:

இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறோம் ....வளரட்டும் உங்கள் விசுவாசம் ....

தமிழின விரோதி சுமந்திரன் இந்த கருத்தினை சொல்லிவிட்டார் ....இதனை ஒரு சிங்கள அரசியல்வாதி சொல்லுவதில் ஒரு புதினமும் இல்லை .....மக்கள் செய்ய வேண்டியது அடுத்த தேர்தலில் இவர்களை துரத்துவது ...

இதை தவறான  விமர்சனமாக  பார்க்காதீர்கள்

மாற்றுக்கருத்து  வைப்பதற்கான முழு  முயற்சி  மட்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, thulasie said:

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

புலிகள் செய்த அட்டூழியங்களை யாரும் மறுக்கவில்லையே? அவர்களையும் விசாரியுங்கள் என்றுதானே கேட்கிறோம்? 

நீங்கள் மீண்டும் மீண்டும் புலிகளின் அட்டூழியங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது இராணுவத்தின் போர்க்குற்றங்களை மறைப்பதற்காகத்தான் என்பது மிகவும் தெளிவாகிறது.

புலிகளின் அட்டூழியங்களை விசாரிக்க உங்களுக்குத் தடையாக இருப்பது யார்? தமிழர்களா? இல்லையே, அவர்களுக்குப் தடுக்கும் அளவிற்கோ அல்லது புலிகளை ஆதரித்துப் பேசுவதற்கோ அதிகாரமோ சுதந்திரமோ நீங்கள் கொடுக்கவில்லையே? அப்படியிருக்க, யாரிடமிருந்து சம்மதத்தைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் சரணடைந்தபின்னர் கொன்ற புலிகளைவிட, புணர்வாழ்வு என்கிற பெயரில் கசக்கி சமூகத்தின் எல்லைகளில் துப்பியெறிந்துபோன “முன்னாள்ப் புலிகள்” இன்னமும் உங்கள் கண்முன்னேதான் அலைக்கழிந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களை மீண்டும் பிடித்து விசாரியுங்கள், அட்டூழியங்களுக்குத் தண்டனை கொடுங்கள். யாரும் உங்களை ஏனென்று கேட்கப்போவதோ வேண்டாமென்று தடுக்கப்போவதோ இல்லையே?!

ஆனால், அத்துடன் உங்கள் ராணுவம் செய்த போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கெதிரான குற்றங்ககளையும் விசாரியுங்கள். 

ஒன்றோடு ஒன்றைச் சமப்படுத்தி யாரைக் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

On 2/23/2019 at 8:37 AM, thulasie said:

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

சிங்களம் தான் தப்புவதட்கு கையில் எடுத்த ஆயுதம் தான் புலிகள் செய்த குற்றங்கள் ....அதனைத்தான் ***** சுமந்திரன் செய்கிறார் , ***** ***** ....நக்கி பிழைப்பது அவர் தொழிலாக இருக்கலாம் .. சுமந்திரனின் அப்பா எப்படி யாழ் நூலகம் எரிப்புக்கு சிங்களதுக்கு முழு உதவியாளராக இருந்தாரோ அதேமாதிரி அவர் மகன் ,,,,அது எதிர் பார்த்தது தான் ....

ஆனால் தமிழ் மக்களுக்கு தெரியும் தலைவரும் போராளிகளும் தங்களை அர்ப்பணித்து இந்த போராட்டத்திற்கு உயிர் கொடுத்தார்கள் ....உலக நாடுகள் , இந்தியா , இலங்கை , இப்படி எத்தனை சக்திகளை புலிகள் கையாள வேண்டி இருந்தது ....மறு பக்கம் போராட்ட்ம் ... இப்படியான சூழ் நிலைகளில் சில தப்புகள் நடக்கலாம் ....

சிங்களவன் புலிகள் செய்தார்கள் என்பது ....அவர்களின் நோக்கம் வேறு ஆனால் நாங்களே சொல்வது ....இதன் நோக்கம் என்ன ....இதனால் யாருக்கு நட்டம் ...இப்போது இது தேவையா ....

என்ன, நடு நிலை வாதிகள் ஆக உங்களை காட்ட வேண்டுமா ? அதட்குரிய நேரம் இதுவல்ல ....இப்ப நாம் செய்ய வேண்டியது ஒற்றுமையாக சிங்களத்தினை வேரறுக்க வேண்டும் ....உங்கள் நடுநிலை கொளகை என்று எங்கள் மீது சேறு பூச வேண்டாம் ....பாதிக்கப்பட்டவன் தமிழன் ...சிங்களவன் இல்லை ...********** 

*************

சுமந்திரன் பிரபல கஞ்சா விட்பவர்களுக்கும் , சயந்தன் மாதிரி பொம்பிளை பொறுக்கிகளால் அரசியல் செய்பவர் ...இவருக்கு சார்பாக அதே கருத்தில் இருப்பவர்கள் முதலில் உங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் ...

எங்களுக்காக உயிர் விட்ட எங்கள் காவல் தெய்வங்களை குற்றம் சொல்ல எப்படி மனம் வருகின்றது ....இது தான் நீங்கள் செய்யும் பிரதி உபகாரமா ? .

காலத்தின் தேவை கருதி செயலாட்ட வேண்டும் ....கூட்டமைப்பினை துரத்த வேண்டும் ....பொறுப்பில்லாத ******** ....

வடக்கு கிழக்கு இணைத்த சுயாட்சி என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்கள் வாக்குகளை எடுத்து விட்டு எப்படி ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்க முடியும் ? யார் இந்த அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது ....மக்களை கேட்டார்களா ? ஏன் அவர்களை கேள்வி கேட்க மறுக்கிரிர்கள் .....புலிகள் செய்த தப்புகள், இப்ப என்ன தேவை உள்ளது ? யாருக்கு சிங்களத்துக்கு துணை போவது .... இதனால் தானே நாம் அழிந்தது .

இன்னும் பட்ட அனுபவம் போதாது ?  
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.