Jump to content

இரு தரப்புகளாலும் போர்க்குற்றங்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரு தரப்புகளாலும் போர்க்குற்றங்களா?

Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 05:49

image_a47c2430b8.jpg

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மீது கடந்த சில மாதங்களாகக் காட்டும் அதிகபட்ச கரிசனை தொடர்கிறது. பிரதமர் விக்கிரமசிங்கவின் அண்மைய வடக்கு விஜயம், இந்த நிலைமை தொடர்வதையே காண்பித்திருக்கிறது. ஆனால், கடந்த சில விஜயங்களைப் போலல்லாது இவ்விஜயம், சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

இறுதிக்கட்டப் போரில், நாட்டின் இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என, பிரதமர் விக்கிரமசிங்க மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விடயம் தான், இச்சலசலப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. “கடந்தகாலக் கடினமான வரலாற்றை மறந்தும் மன்னித்தும், இலங்கைச் சமூகங்கள் முன்கொண்டு செல்வதற்கான நேரமிது. தவறுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொள்வது அவசியம். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் மன்னித்து, நல்லிணக்கத்தை அடைய வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.  

அவரது இக்கருத்து, மேம்போக்கான கருத்தாக அமைந்த போதிலும், அமைச்சரவையில் “உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு”வை அமைப்பதற்காக அமைச்சரவையில் முன்மொழிவை வைத்த பின்னணியிலும், தவறுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையால் பயன் கிடைக்காது என்ற அவரது கருத்து மூலமாகவும், போர்க்குற்றங்கள் பற்றியும் அவரது கருத்து அமைந்திருக்கிறது என்பது தெளிவு.  

அவரது இக்கருத்துத் தொடர்பாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், பிரதமரின் கருத்தை, இரு தரப்புகளும் குற்றங்களைப் புரிந்தன என்று எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதெனத் தெரிவித்திருந்தார்.  

அதேபோல், பிரதமரால் இக்கருத்து வெளியிடப்பட்டுச் சில நாள்களில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஓரளவுக்கு நேரடியாகவே, இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைப் புரிந்தன என ஏற்றுக்கொண்டிருந்தார்.  

“இறுதிக் கட்டப் போரில் பொதுமக்களின் உயிர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை” என்று, மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரை, முக்கியமான மாற்றமாக, பிரதமரினதும் அரசாங்கத்தில் இன்னமும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பலத்துடன் காணப்படும் முன்னாள் ஜனாதிபதியினதும் கருத்துகள் அமைந்திருக்க வேண்டும்.  

ஆனால், அவர்களின் கருத்துகள், குறிப்பாகப் பிரதமரின் கருத்து, தொடர்பில், ஒரு வகையான நம்பிக்கையீனதும் விமர்சனமும், தமிழ் மக்களில் ஒரு தரப்பினரால் எழுப்பப்பட்டிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, “இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைச் செய்தன என்று சொல்லிவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளை மாட்டிவிட்டுத் தப்பிக்கும் முயற்சி” அல்லது “இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைச் செய்தன என்பதால், இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாயின் விடுதலைப் புலிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதால், போர்க்குற்ற விசாரணையைத் தமிழ் மக்கள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் இப்படிச் சொன்னார்” போன்ற வகையான கருத்துகளைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.  

சுயாதீனமான நீதித்துறையின் விசாரணைகளின்றி உறுதியாக எதையும் கூறுவது பொருத்தமாக அமையாது. ஆனால், இறுதிக்கட்டப் போரில், இரு தரப்புகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டன என்பது தான், இதுவரையிலும் காணப்படும் ஆதாரங்கள் சொல்கின்ற விடயங்களாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள், இரு தரப்புகள் மீதும் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றன. அதை மறைக்க முனைவது அப்பட்டமான கபடத்தனம்.  விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள், தமிழ் அரசியல் பரப்பில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. விடுதலைப் புலிகள் இருக்கும் போது மரணமோ, அச்சுறுத்தலோ பதிலாகக் கிடைத்தது. அவர்களின் முடிவின் பின்னரும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகவே விடுதலைப் புலிகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், இது நியாயமற்ற நிலைமை.  

ஏனெனில், விடுதலைப் புலிகளின் தவறுகளை மாத்திரம் பெரும்பான்மையினத் தரப்புச் சொல்வது போல, இராணுவத் தரப்பின் தவறுகளை மாத்திரம் தான் தமிழ் மக்களும் கதைப்பார்கள் என்றால், இரு தரப்புகளுமே ஒன்றாகிவிடாதா? எந்தத் தவறைச் செய்தாலும் இராணுவத்தைத் தண்டிக்கப் போவதில்லை என்று தெற்கு இருப்பதைப் போல, என்ன ஆதாரம் இருந்தாலும் விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை அனுமதிக்கப் போவதில்லை என்று வடக்கு இருக்குமாயின், இரு தரப்புகளுக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்?  

நாட்டின் சட்டபூர்வமான இராணுவம் என்ற அடிப்படையில், இலங்கை இராணுவத்தை, விடுதலைப் புலிகளுக்கான அதே மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டுமா என்பது நியாயமான கேள்வி. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உருவான அமைப்பு என்றாலும் கூட, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தவறு செய்தார்கள் என்பதற்காக, இராணுவம் தவறு செய்வதையும் நியாயப்படுத்த முயன்றால், அது கேலிக்குரிய ஒப்பீடாக அமையும். அதேபோல், இறுதிக்கட்டப் போரில், இரு தரப்புகளும் ஒரேயளவிலான குற்றங்களைப் புரிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில், இல்லையென்று தான் அமையும். விடுதலைப் புலிகளோடு ஒப்பிடும் போது, படையினர் மீதான குற்றச்சாட்டுகள் மிக அதிகமானவை. அதற்காக, விடுதலைப் புலிகள் மீது விசாரணைகளே இருக்கக்கூடாது என்பது நியாயமில்லை.  

இத்தனைக்கும், நாமெல்லோரும் அதிகமாகக் கலந்துரையாடும் 30/1 தீர்மானத்தில் ஒரு பிரிவு, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைப் பற்றியும் அவற்றுக்கான பொறுப்புக்கூறலைப் பற்றியும் மாத்திரம் உரையாடுகிறது. அதற்கு முன்னைய பிரிவு, “அனைத்துத் தரப்புகளினதும்” பாரிய குற்றங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.  

எனவே, உண்மையான பொறுப்புக்கூறலொன்று ஏற்படுத்தப்படுமாயின், இரு தரப்புகளின் தவறுகளும் ஆராயப்படுமென்பது இயற்கை; அது தான் நீதியும் கூட. இதில் புதிதாக வியப்படைய எதுவுமில்லை.  
ஆனால், “இரு தரப்புகளும் தவறு செய்தன. எனவே, இரு தரப்பின் தவறுகளையும் மன்னிப்போம்” என்ற “இணக்கப்பாட்டு” கதைகளை, தமிழ் மக்கள் மாத்திரமன்றி, இலங்கையர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும். இப்படியான கதைகளை, பிரதமர் மாத்திரமன்றி, அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோரும் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. “பழையதைக் கிளறி என்ன நடக்கப் போகிறது?” என்பது தான் அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மையைக் கண்டறியாமல், மன்னிப்புக்கு இடமிருக்கக்கூடாது. அப்படியான மன்னிப்பு, நிலையான சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ கொண்டுவராது. ஏனென்றால், என்ன நடந்தது அல்லது என்ன செய்தார்கள் என்றறியாமல், எதற்காக ஒருவரை மன்னிக்க முடியும்? யார் செய்தார்கள் என்று தெரியாமல், குறித்த சம்பவத்துக்காக யாரை மன்னிக்க முடியும்.  

இதனால் தான், உலகம் முழுவதிலும் இவ்வாறான ஆயுத முரண்பாடுகள் முடிவடைந்த பின்னர், உண்மையைக் கண்டறிவதை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, பரிபூரணமானது என்றில்லை. அதன் மீதும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆனால், அங்கு ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாக, உண்மையைக் கண்டறிதல் என்பது காணப்பட்டது. எனவே தான், இலங்கை விடயத்திலும், உண்மையைக் கண்டறிதலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.  

அது, இராணுவத்தால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; விடுதலைப் புலிகளால் தமிழ் மக்கள் மீதும் படையினர் மீதும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; விடுதலைப் புலிகளால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; முஸ்லிம் ஆயுதக் குழுக்களால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்று, அனைத்து வகையான குற்றங்களைப் பற்றியும் ஆராய்வதாக இருக்க வேண்டும். 

அக்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட பின்னர், மன்னிப்பதைப் பற்றி ஆராய முடியும். அதை விடுத்து, அதற்கு முன்னர் மன்னிக்குமாறு விடுக்கப்படுகின்ற எந்தக் கோரிக்கையும், பூசி மெழுகுவதற்கான முயற்சியே. அவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதென்பது, முழு இலங்கைக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக அமையும்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இரு-தரப்புகளாலும்-போர்க்குற்றங்களா/91-229910

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.