Jump to content

அதிமுகவுக்கு தினகரன்.. திமுகவுக்கு கமல்ஹாசன்.. என்னென்ன நடக்குமோ.. கிலியில் தலைவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலà¯à®µà®°à¯à®à®³à¯ à®à®¿à®²à®¿

அதிமுகவுக்கு தினகரன்.. திமுகவுக்கு கமல்ஹாசன்.. என்னென்ன நடக்குமோ.. கிலியில் தலைவர்கள்

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தமிழகம் முழுக்க பரவலாக உள்ள ஆதரவு, பிற கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வரும் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நான்குமுனைப்போட்டி உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அடங்கியது ஒரு கூட்டணி என்றால், திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கியது மற்றொரு கூட்டணி. தேமுதிகவை இவ்விரு கூட்டணிகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கப்போகிறது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், தேர்தலில் சிறப்பாக செயல்படும் டிராக் ரெக்கார்ட் வைத்துள்ள, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. இதனால் அந்த கட்சி தனித்துப் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது.

இதேபோல இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது மக்கள் நீதி மையம் கட்சி. அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார் கமல்ஹாசன். அதிமுக, திமுக, பாமக என கமல்ஹாசனின் விமர்சன சாட்டையடிக்கு, எந்த கட்சியும் தப்பவில்லை. எனவே அவரது கட்சியும் தனித்துதான் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் நான்கு முனைப் போட்டி என்பது உறுதியான விஷயமாகிவிட்டது.

தினகரனை பொறுத்தளவில், அதிமுகவில் கணிசமான வாக்குகளை அவர் ஈர்ப்பார் என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்தால் தான் தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமை, இதனால்தான், தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10% அளவிற்கு அதிமுக வாக்குகளை தினகரன் ஈர்ப்பார். இது எதிர் முகாமில் உள்ள திமுக கூட்டணிக்கு சாதகமாக செல்லும் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால் அங்குதான் ஒரு திருப்பமாக, கமல்ஹாசன் கட்சி களமாட உள்ளது. கமல்ஹாசனின், கடவுள் மறுப்புக் கொள்கை, திராவிடக் கொள்கை போன்ற பலவும் திமுகவுடன் பொருந்திப் போவதாக உள்ளது. ஆனால் திமுகவில் உள்ள வாரிசு அரசியல் உள்ளிட்ட சில விஷயங்களைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். எனவே தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தியை விரும்புவோர் கமல்ஹாசன் கட்சிக்கு வாக்களிக்கக்கூடும். திமுகவிடம் உள்ள பல அடிப்படை கொள்கைகள் கமல்ஹாசன் கட்சியில் உள்ளது. ஆனால் அதே கொள்கைகளுடன் ஒரு மாறுபட்ட தலைவர், மாறுபட்ட கட்சி தேவை என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய வாக்காளர்களின் ஓட்டுகள் கமல்ஹாசன் கட்சிக்கு செல்லும். இது திமுகவின் வாக்குகளை தமிழகம் முழுக்க கணிசமாக பிரித்துவிடும்.

தினகரனை பார்த்து அதிமுக தரப்பும், கமல்ஹாசன் கட்சியின் வளர்ச்சியை பார்த்து திமுக தரப்பும் அச்சமடைந்துள்ளனர். எனவேதான் கமல்ஹாசனுக்கு எதிராக முரசொலியில் சமீபகாலமாக தொடர் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும் திமுகவினர் கமல்ஹாசனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது. தனித்தனியாக போட்டியிட்டாலும் கூட, அதிமுக மற்றும் திமுக தலைவர்களுக்கு, தினகரன் மற்றும் கமல்ஹாசன் பெரும் கிலியை உண்டு செய்து உள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kamal-hassan-ttv-dhinakaran-will-play-crucial-role-the-lok-sabha-election-342042.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.