Jump to content

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-ranil-maithri-720x450.jpg

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பான கருத்துக்களை கூறுமாறு அவர் தெரிவித்திருந்ததோடு, அதற்கு சிலர் ஆதரவளித்திருந்தனர்.

அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளார்.

அவ்வாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://athavannews.com/நிறைவேற்று-அதிகார-ஜனாதிப/

Link to comment
Share on other sites

இந்த மூவருக்குமே தற்போது மக்களின் ஆதரவில் ஐயப்பாடு உள்ளது. ஆகவேதான் இந்த ஆதரவுநிலையை வெளிப்படுத்தி வாக்குகளைச் சேகரிக்க முனைகிறார்கள். இவர்களில் யார் சனாதிபதியாக வந்தாலும் நிறைவேற்று அதிகார சனாதிபதி ஆட்சிமுறையைக் கைவிடமாட்டார்கள், அதனை ஒழிக்கவும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கேட்டால் அதனை ராசதந்திரம் என்பார்கள், எங்கள் தமிழ் தலைவர்கள் சிலரும் பாராட்டுவார்கள். முன்பு தமிழர்களை ஒடுக்க யெயவர்த்தனா எடுத்த முயற்சியை, ஒரு தமிழ்த் தலைவர் சிறந்த ராசதந்திரம் என்று பாராட்டியதாக வந்த செய்தியைப் படித்த ஞாபகம் உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.