Jump to content

தென்னாபிரிக்கா - இலங்கை இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி


Recommended Posts

உபாதை காரணமாக  லசித் அம்புள்தெனிய போட்டியில் இருந்து விலகினார்

உபாதை காரணமாக லசித் அம்புள்தெனிய போட்டியில் இருந்து விலகினார்

 

இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணி வீரர் லசித் அம்புள்தெனிய, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. 

2 வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது. 

நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. 

இலங்கை அணி சாரபில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களும் ராஜித 3 விக்கெட்டுக்களையும் பெற்றனர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இதுவரையில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

1 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.

kok.jpg

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் முதலாவதாக இடம்பெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிய‍ை இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்காவின் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் இலங்கை அணி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று களம் இறங்கியுள்ளது.

அதன்படி போர்ட்எலிசபெதில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 15 ஓட்டத்துக்குள் மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. எல்கர் 6 ஓட்டத்துடனும், அம்லா மற்றும் பவுமா எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் தென்னாபிரிக்க அணி தொடக்கத்திலேயே தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும் அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி மற்றும் மர்க்ரம் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தினால் அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தது.

Dz7EmyKXQAARgbG.jpg

எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 73 ஆவவிருந்தபோது டூப்பிளஸ்ஸி 25 ஓட்டத்துடன் திமுத் கருணாரத்னவின் முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து ஐந்தாவது விக்கெட் 130 ஓட்டத்திலும் (மக்ரம் 60), ஆறவாது விக்கெட் 145 ஓட்டத்திலும் (முல்டர் 09), ஏழாவது விக்கெட் 157 ஓட்டத்திலும் (மஹாராஜ் டக்கவுட்) வீழ்த்தப்பட்டது.

இதேவேளை ஆடுகளத்தில் மறுமுணையில் நின்று டீகொக் நிதானமாக நின்று நிலைத்தாட 9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரபடா அவருக்கு தோள்கொடுத்தாட  அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஐ கடந்தது.

எனினும் டீகொக் 86 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ரபடாவும் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ஒலிவரும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் தென்னாபிரிக்க அணி 61.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களை பெற்றது.

Dz6_TmvWsAABKVc.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ, கசூன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 2 விக்கெட்டுக்களையும், திமுத் கருணாரத்ன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

 

 

http://www.virakesari.lk/article/50434

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க மண்ணில் புதிய சகாப்தம் படைக்குமா இலங்கை?

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெற்றியிலக்காக 197 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

sl1.jpg

போர்ட்எலிசபெதில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் பின்னடைவை சந்தித்து.

இதையடுத்து 68 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி வீரர்களும் இலங்கை அணியின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையினால், தென்னாபிரிக்க அணி 44.3  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

மக்ரம் 18 ஓட்டத்துடனும், எல்கர் 2 ஓட்டத்துடனும், அம்லா 32 ஓட்டத்துடனும், பவுமா 6 ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 45 ஓட்டத்துடனும், டீகொக் ஒரு ஓட்டத்துடனும், முல்டர் 5 ஓட்டத்துடனும், மஹாராஜ் 6 ஓட்டத்துடனும், ரபடா மற்றும் ஸ்டெய்ன் டக்கவுட் முறையிலும், ஒலிவர் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணித் தலைவர் டூப்பளஸ்ஸி 50 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

D0ArRM6X0AE2wUP.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

D0ArRB3WkAAREE_.jpg

இதனால் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 197 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த எந்தவொரு அணியும் டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டிராத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு புதிய சகாப்தம் படைக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்த அருமையான சந்தர்ப்பத்தை இலங்கை அணி பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்குமா அல்லது நழுவ விடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

http://www.virakesari.lk/article/50494

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்று வெற்றி- தொடரை கைப்பற்றியது

இலங்கை வரலாற்று வெற்றி- தொடரை கைப்பற்றியது

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்  வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது

வெற்றி பெறுவதற்கு 197 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குசல்மென்டிஸ் மற்றும் புதிய இளம் வீரர் ஒசாட பெர்ணான்டோவின் அபாரமான துடுப்பாட்டம் காரணமாக இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து தனது  இலக்கை அடைந்தது.

குசல்மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார்  அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய ஒசாட பெர்ணான்டோ  தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார்.

odada11.jpg

இலங்கை அணி இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்காவில்டெஸ்ட் தொடரை வென்ற ஒரெயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

 

 

http://www.virakesari.lk/article/50535

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.