Jump to content

கூட்டுக் குற்றவாளிகள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுக் குற்றவாளிகள்!!

பதிவேற்றிய காலம்: Feb 22, 2019

அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் நாட்­டில் உள்ள மோச­மான குற்­ற­வா­ளி­க­ ளுக்­கும் இடையே நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றமை இலங்கை எத்­த­கைய கீழ்­நி­லைக்­குச் சென்­றுள்­ளது என்­ப­தைத் தெளி­வா­கக் காட்­டு­கின்­றது. இந்­தி­யா­வில் மாத்­தி­ரமே இத்­த­கைய நிலமை இருக்­கின்­றது என்று எண்­ணிக் கொண்­டி­ருந்த நிலை­யில் அது இங்­கும் காணப்­ப­டு­கின்­ற­மையை எண்ணி வெட்­கித் தலை­கு­னி­ய­வேண்­டும்.

ஊட­கங்­கள் அனைத்­தும் டுபா­யில் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட பிர­பல போதைப்­பொ­ருள் வர்த்­த­க­ரும் பாதாள உல­கக் குழு­வொன்­றின் தலை­வ­ரு­மான மதுஷ் தொடர்­பான செய்­தி­க­ளைப் பர­ப­ரப்­பு­டன் வெளி­யிட்டு வரு­கின்­றன. இவரை நாட்­டில் வைத்­துக் கைது செய்­வ­தற்கு அர­சால் முடி­ய­வில்லை. அந்த அள­வுக்கு பண­ ப­ல­மும் அர­சி­யல் செல்­வாக்­கும் மிக்க ஒரு­வ­ராக மகிந்த அணி­யைச் சேர்ந்த ஏரா­ள­மான அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் அவ­ருக்­கு­மி­டை­யி­லான நெருங்­கிய உறவு தொடர்­பான செய்­தி­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, ராஜித சேனா­ரத்ன ஆகி­யோரை இதைப் பகி­ரங்­க­மாக வெளி­யிட்­டுள்­ள­னர்.

மகிந்த அணி­யில் உள்ள காடைத்­த­னங்­க­ளுக்­குப் பெயர்­போன பலர் இதில் அடங்­கு­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இவர்­க­ளில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அடங்­கு­வ­தாக அவர்­க­ளி­ரு­வ­ரும் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. நாட்­டில் அர­சி­யல் குழப்­ப­மொன்று ஏற்­பட்­ட­போது நாடா­ளு­மன்­றத்­தில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யும் அங்­குள்ள சொத்­துக்­க­ளுக்­குச் சேதம் விளை­வித்­தும் அடா­வ­டித்­த­னங்­க­ளில் இறங்­கி­ய­வர்­கள் இத்­த­கைய நபர்­க­ளே­யென அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர். அது­மட்­டு­மல்­லாது சபா­நா­ய­க­ரை­யும் தலைமை அமைச்­ச­ரை­யும் கொலை செய்­வ­தற்­குக்­கூட இவர்­கள் முயன்­றார்­க­ளெ­ன­ வும் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் அமைச்­சர்­க­ளி­ரு­வ­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

பாது­காப்பு மற்­றும் சட்­டம் ஒழுங்கு அமைச்­சுக்­க­ளைத் தம்­மி­டம் வைத்­தி­ருக்­கும் அரச தலை­வ­ரால் இவர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்­பது நாட்­டின் மோச­மான தலை­வி­தி­யைக் காட்­டு­கின்­றது.

நாட்­டின் அதி­கா­ரத்தை அர­சி­யல்­வா­தி­களே கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­ற­னர். தமக்கு நல்­லது செய்­வார்­க­ளென்ற நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே மக்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அதி­கார மையங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்­ற­னர். மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பாது­காக்க வேண்­டி­ய­வர்­கள் மக்­கள் விரோத செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை எந்த நிலை­யி­லும் மன்­னிக்க முடி­யாது.

தாம் பணம் சம்­பா­திப்­ப­தற்­காக புனி­த­மான அர­சி­ய­லைப் பயன்­ப­டுத்­து­வது மகா கேவ­ல­மான காரி­ய­மா­கும்.குற்­றங்­க­ளைப் புரி­கின்ற மேல்­தட்டு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தண்­ட­னை­க­ளி­லி­ருந்து விதி­ வி­லக்­க­ளிக்­கும் ஒரு நாடாவே இலங்கை காணப்­ப­டு­கின்­றது. தற்­போ­து­கூட போதைப்­பொ­ருள் வர்த்­த­க­ரு­டன் தொடர்­பு­டைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக இது­வ­ரை­யில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. அவர்­கள் மகிந்த அணி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தார் நீதி­யின் கண்­க­ளும் மூடிக்­கொண்­ட­தா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

போதைப்­பொ­ருள்­க­ளின் பாவனை மக்­கள் சமு­தா­யத்தை முற்­றா­கவே செய­லி­ழக்­கச் செய்­து­வி­டக்­கூ­டி­யது. ஒரு சிலர் கோடீஸ்­வ­ரர்­க­ளாக மாறு­வ­தற்­காக மக்­க­ளைச் சீர­ழிப்­ப­தைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. ஆனால் இந்த நாட்­டில் அது சாதா­ரண விட­ய­மா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

 

அது­மட்­டு­மல்­லாது குற்­ற­வா­ளி­க­ளென முத்­திரை குத்­தப்­பட்­டு­விட்­டால் அனை­வ­ரை­யும் சம­மான நிலை­யில் வைத்­துத்­தான் பார்க்­க­வேண்­டும். அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் போதைப்­பொ­ருள் வர்த்­த­கர்­க­ளுக்­கும் பலம்­மிக்க பாதாள உல­கக் குழு­வி­ன­ருக்­கும் பண­மும் செல்­வாக்­கும் படைத்த மோச­மான குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் சிறைச்­சா­லை­ க­ளில் சொகுசு வாழ்க்­கைக்­கு­ரிய சகல வச­தி­க­ளும் செய்து தரப்­ப­டு­கின்­றன. அவர்­கள் சிறைத் தண்­ட­னைக்­குப் பதி­லாக சொர்க்­க­வாழ்­வையே அனு­ப­விக்­கின்­ற­னர்.

சிறை­யில் இருந்­த­வர்­களே குற்­றச்­செ­யல்­களை வழி­ந­டத்தி வரு­கின்­ற­னர். போதைப்­பொ­ருள் வர்த்­த­க­மும் இவ்­வாறே அமோ­க­மாக இடம்­பெ­று­வ­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. இதற்­குச் சிறை­ய­தி­ கா­ரி­க­ளும் உடந்­தை­யா­கச் செயற்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. நிலைமை இவ்­வாறு இருக்­கும்­போது நாட்­டில் குற்­றச் செயல்­களை எவ்­வாறு கட்­டுப்­ப­டுத்த முடி­யும்?

சில தென்­ன­மெ­ரிக்க நாடு­களே போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தில் கொடி­கட்­டிப் பறந்­தன. சில வகை­யான கொடிய போதைப்­பொ­ருள்­கள் குறிப்­பிட்ட ஆசிய நாடு­கள் சில­வற்­றில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. அந்த நாடு­க­ளின் வரு­மா­னத்தை ஈட்­டக்­கூ­டிய தொழி­லா­க­வும் இது­வரை விளங்­கு­ கின்­றது. இந்­தப் பொருள்­கள் பல நாடு­க­ளின் ஊடாக தென்­ன­மெ­ரிக்க நாடு­க­ளைச் சென்­ற­டை­கின்­றன.

இலங்­கை­யி­லும் அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­டு­வதை எந்­த­வ­கை­யி­லும் அனு­ம­திக்க முடி­யாது. இது நாட்­டின் நற்­பெ­ய­ருக்கு மட்­டு­மல்­லாது மக்­க­ளுக்­கும் பங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டும். அதி­லும் அர­சி­யல்­வா­தி­கள் இதில் ஈடு­ப­டு­வது பெரும் பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டும்.

ஆகவே இத்­த­கை­ய­வர்­கள் மீது எது­வித தாம­த­மு­மின்றி உட­ன­டி­யா­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டல்­வேண்­டும். இவர்­கள் தொடர்ந்­தும் அர­சி­ய­லில் ஈடு­ப­டும்­போது அர­சி­ய­லில் புனி­தத் தன்­மையே மாசு­ப­டுத்­தப்­பட்­டு­வி­டும்.

அரச தலை­வர் எது­வித அச்­ச­மு­மின்­றித் தமது கட­மை­களை முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும். இதில் பக்­கச் சார்பு என்­ப­தற்கே இட­மி­ருக்­கக்­கூ­டாது. மகிந்­த­வுக்கு ஒரு முக­மும் ரணி­லுக்கு வேறொ­ரு­மு­க­மும் காட்­டு­வதை அவர்­கள் உட­ன­டி­யா­கவே நிறுத்­திக்­கொள்ள வேண்­டும்.

குற்­றங்­க­ளைப் புரி­கின்ற அர­சி­யல்­வா­தி­கள் தரா­த­ரம் பார்க்­காது தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும். அப்­போ­து­தான் அரசு மீதும் நம்­பிக்கை ஏற்­ப­டும்.

 

https://newuthayan.com/story/12/கூட்டுக்-குற்றவாளிகள்.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.