Jump to content

கூட்டுக் குற்றவாளிகள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுக் குற்றவாளிகள்!!

பதிவேற்றிய காலம்: Feb 22, 2019

அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் நாட்­டில் உள்ள மோச­மான குற்­ற­வா­ளி­க­ ளுக்­கும் இடையே நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றமை இலங்கை எத்­த­கைய கீழ்­நி­லைக்­குச் சென்­றுள்­ளது என்­ப­தைத் தெளி­வா­கக் காட்­டு­கின்­றது. இந்­தி­யா­வில் மாத்­தி­ரமே இத்­த­கைய நிலமை இருக்­கின்­றது என்று எண்­ணிக் கொண்­டி­ருந்த நிலை­யில் அது இங்­கும் காணப்­ப­டு­கின்­ற­மையை எண்ணி வெட்­கித் தலை­கு­னி­ய­வேண்­டும்.

ஊட­கங்­கள் அனைத்­தும் டுபா­யில் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட பிர­பல போதைப்­பொ­ருள் வர்த்­த­க­ரும் பாதாள உல­கக் குழு­வொன்­றின் தலை­வ­ரு­மான மதுஷ் தொடர்­பான செய்­தி­க­ளைப் பர­ப­ரப்­பு­டன் வெளி­யிட்டு வரு­கின்­றன. இவரை நாட்­டில் வைத்­துக் கைது செய்­வ­தற்கு அர­சால் முடி­ய­வில்லை. அந்த அள­வுக்கு பண­ ப­ல­மும் அர­சி­யல் செல்­வாக்­கும் மிக்க ஒரு­வ­ராக மகிந்த அணி­யைச் சேர்ந்த ஏரா­ள­மான அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் அவ­ருக்­கு­மி­டை­யி­லான நெருங்­கிய உறவு தொடர்­பான செய்­தி­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, ராஜித சேனா­ரத்ன ஆகி­யோரை இதைப் பகி­ரங்­க­மாக வெளி­யிட்­டுள்­ள­னர்.

மகிந்த அணி­யில் உள்ள காடைத்­த­னங்­க­ளுக்­குப் பெயர்­போன பலர் இதில் அடங்­கு­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இவர்­க­ளில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அடங்­கு­வ­தாக அவர்­க­ளி­ரு­வ­ரும் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. நாட்­டில் அர­சி­யல் குழப்­ப­மொன்று ஏற்­பட்­ட­போது நாடா­ளு­மன்­றத்­தில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யும் அங்­குள்ள சொத்­துக்­க­ளுக்­குச் சேதம் விளை­வித்­தும் அடா­வ­டித்­த­னங்­க­ளில் இறங்­கி­ய­வர்­கள் இத்­த­கைய நபர்­க­ளே­யென அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர். அது­மட்­டு­மல்­லாது சபா­நா­ய­க­ரை­யும் தலைமை அமைச்­ச­ரை­யும் கொலை செய்­வ­தற்­குக்­கூட இவர்­கள் முயன்­றார்­க­ளெ­ன­ வும் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் அமைச்­சர்­க­ளி­ரு­வ­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

பாது­காப்பு மற்­றும் சட்­டம் ஒழுங்கு அமைச்­சுக்­க­ளைத் தம்­மி­டம் வைத்­தி­ருக்­கும் அரச தலை­வ­ரால் இவர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்­பது நாட்­டின் மோச­மான தலை­வி­தி­யைக் காட்­டு­கின்­றது.

நாட்­டின் அதி­கா­ரத்தை அர­சி­யல்­வா­தி­களே கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­ற­னர். தமக்கு நல்­லது செய்­வார்­க­ளென்ற நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே மக்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அதி­கார மையங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்­ற­னர். மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பாது­காக்க வேண்­டி­ய­வர்­கள் மக்­கள் விரோத செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை எந்த நிலை­யி­லும் மன்­னிக்க முடி­யாது.

தாம் பணம் சம்­பா­திப்­ப­தற்­காக புனி­த­மான அர­சி­ய­லைப் பயன்­ப­டுத்­து­வது மகா கேவ­ல­மான காரி­ய­மா­கும்.குற்­றங்­க­ளைப் புரி­கின்ற மேல்­தட்டு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தண்­ட­னை­க­ளி­லி­ருந்து விதி­ வி­லக்­க­ளிக்­கும் ஒரு நாடாவே இலங்கை காணப்­ப­டு­கின்­றது. தற்­போ­து­கூட போதைப்­பொ­ருள் வர்த்­த­க­ரு­டன் தொடர்­பு­டைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக இது­வ­ரை­யில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. அவர்­கள் மகிந்த அணி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தார் நீதி­யின் கண்­க­ளும் மூடிக்­கொண்­ட­தா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

போதைப்­பொ­ருள்­க­ளின் பாவனை மக்­கள் சமு­தா­யத்தை முற்­றா­கவே செய­லி­ழக்­கச் செய்­து­வி­டக்­கூ­டி­யது. ஒரு சிலர் கோடீஸ்­வ­ரர்­க­ளாக மாறு­வ­தற்­காக மக்­க­ளைச் சீர­ழிப்­ப­தைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. ஆனால் இந்த நாட்­டில் அது சாதா­ரண விட­ய­மா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

 

அது­மட்­டு­மல்­லாது குற்­ற­வா­ளி­க­ளென முத்­திரை குத்­தப்­பட்­டு­விட்­டால் அனை­வ­ரை­யும் சம­மான நிலை­யில் வைத்­துத்­தான் பார்க்­க­வேண்­டும். அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் போதைப்­பொ­ருள் வர்த்­த­கர்­க­ளுக்­கும் பலம்­மிக்க பாதாள உல­கக் குழு­வி­ன­ருக்­கும் பண­மும் செல்­வாக்­கும் படைத்த மோச­மான குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் சிறைச்­சா­லை­ க­ளில் சொகுசு வாழ்க்­கைக்­கு­ரிய சகல வச­தி­க­ளும் செய்து தரப்­ப­டு­கின்­றன. அவர்­கள் சிறைத் தண்­ட­னைக்­குப் பதி­லாக சொர்க்­க­வாழ்­வையே அனு­ப­விக்­கின்­ற­னர்.

சிறை­யில் இருந்­த­வர்­களே குற்­றச்­செ­யல்­களை வழி­ந­டத்தி வரு­கின்­ற­னர். போதைப்­பொ­ருள் வர்த்­த­க­மும் இவ்­வாறே அமோ­க­மாக இடம்­பெ­று­வ­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. இதற்­குச் சிறை­ய­தி­ கா­ரி­க­ளும் உடந்­தை­யா­கச் செயற்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. நிலைமை இவ்­வாறு இருக்­கும்­போது நாட்­டில் குற்­றச் செயல்­களை எவ்­வாறு கட்­டுப்­ப­டுத்த முடி­யும்?

சில தென்­ன­மெ­ரிக்க நாடு­களே போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தில் கொடி­கட்­டிப் பறந்­தன. சில வகை­யான கொடிய போதைப்­பொ­ருள்­கள் குறிப்­பிட்ட ஆசிய நாடு­கள் சில­வற்­றில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. அந்த நாடு­க­ளின் வரு­மா­னத்தை ஈட்­டக்­கூ­டிய தொழி­லா­க­வும் இது­வரை விளங்­கு­ கின்­றது. இந்­தப் பொருள்­கள் பல நாடு­க­ளின் ஊடாக தென்­ன­மெ­ரிக்க நாடு­க­ளைச் சென்­ற­டை­கின்­றன.

இலங்­கை­யி­லும் அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­டு­வதை எந்­த­வ­கை­யி­லும் அனு­ம­திக்க முடி­யாது. இது நாட்­டின் நற்­பெ­ய­ருக்கு மட்­டு­மல்­லாது மக்­க­ளுக்­கும் பங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டும். அதி­லும் அர­சி­யல்­வா­தி­கள் இதில் ஈடு­ப­டு­வது பெரும் பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டும்.

ஆகவே இத்­த­கை­ய­வர்­கள் மீது எது­வித தாம­த­மு­மின்றி உட­ன­டி­யா­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டல்­வேண்­டும். இவர்­கள் தொடர்ந்­தும் அர­சி­ய­லில் ஈடு­ப­டும்­போது அர­சி­ய­லில் புனி­தத் தன்­மையே மாசு­ப­டுத்­தப்­பட்­டு­வி­டும்.

அரச தலை­வர் எது­வித அச்­ச­மு­மின்­றித் தமது கட­மை­களை முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும். இதில் பக்­கச் சார்பு என்­ப­தற்கே இட­மி­ருக்­கக்­கூ­டாது. மகிந்­த­வுக்கு ஒரு முக­மும் ரணி­லுக்கு வேறொ­ரு­மு­க­மும் காட்­டு­வதை அவர்­கள் உட­ன­டி­யா­கவே நிறுத்­திக்­கொள்ள வேண்­டும்.

குற்­றங்­க­ளைப் புரி­கின்ற அர­சி­யல்­வா­தி­கள் தரா­த­ரம் பார்க்­காது தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும். அப்­போ­து­தான் அரசு மீதும் நம்­பிக்கை ஏற்­ப­டும்.

 

https://newuthayan.com/story/12/கூட்டுக்-குற்றவாளிகள்.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.