Jump to content

தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு - ஐக்கிய இராச்சியம்(NIO)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

c6eb123c-87ee-41be-9141-5b3c1ff28099.jpg

இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தக்கூடிய,நீண்டு நிலைக்கக்கூடிய புனரமைப்பு மற்றும் 
மேம்படுத்தல் நடவடிக்கைகளை,எமது கலாச்சாரம் ,பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுற்கு ஏற்ப,எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக ஆராய்ந்து ,அதற்கேற்ப செயலாற்றும் “தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு-ஐக்கிய இராச்சியம் “ தனது அங்குரார்பன நிகழ்வினை வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துகிறது.

நேரம்- பிற்பகல் 3 மணி,
நடைபெறும் இடம்- vale farm sports centre,Watford road,London HA0 3HG.

எந்த விதமான பாகுபாடுகளுமின்றி அனைத்து இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும்,
மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு உதவுவதும் என்ற அடிப்படையில்,அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றீர்கள்.

தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில்,ஒரு நீண்ட கொடிய யுத்தம் ஏற்படுத்தியுள்ள இழப்புக்கள் பின்னடைவுகளில் இருந்து விடுபட்டு,
இலங்கையின் ஏனைய பிரதேசங்களிற்கு சமமாக வருவதற்கு மேலதிக முயற்சிகள்,உழைப்புக்கள் தேவைப்படுகின்றன.


கிடைக்கக்கூடிய ஒவ்வொரு துரும்பையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம் . எம்மிடையே உள்ள கலைஞர்கள்,

பத்திரிகையாளர்கள்,தொழில்விற்பன்னர்கள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவரும் இம்முயற்சியில் கைகோர்த்து ,இம்முயற்சி வெற்றி பெறுவதை உறுதி செய்யுமாறு, ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.

நன்றி.
தொடர்புகளுக்கு –

Dr Suresh Surendran (Phone – 07982 651473; E-mail intellectualbridge@gmail.com)
Dr Indunil Wijenayake (Phone – 07702007517; E-mail – niosrilankauk@gmail.com)

618da284-dba1-4872-8caf-4ee1252a362c.jpg

e86512c0-7211-438d-936e-85ee371e95f5.jpg

https://www.madawalaenews.com/2019/02/nio.html

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.