Jump to content

மனிதாபிமானம் (சிறு கதை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மனிதாபிமானம் (சிறு கதை)
 
அண்மையில் ஒரு உணவகத்தில் சாப்பிடச்சென்றிருந்தேன்.
அது ஒரு அல்யீரிய நாட்டவருக்கு சொந்தமான உணவகம்.
அன்று PSG இன் உதை பந்தாட்டம் இருந்ததால் உணவை ஓடர் செய்து விட்டு
அவரது அகண்ட திரையில் விளையாட்டையும் பார்க்க தயாரானேன்.
 
சிறிய நேரத்தில் அந்த உணவக முதலாளி ஒருவரை அழைத்து வந்து
எனக்குப்பக்கத்து மேசையில் இருந்தி விட்டு என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்க
அவரும் ஒரு சிறிய சாப்பாட்டை சொல்லி இன்று இது மட்டும் போதும் எனக்கு என்றார்.
குடிக்க என்ன வேண்டும் என்ற கேள்விக்கு ஒன்றும் வேண்டாம் என்றபடி முதலாளியை இரு கையெடுத்துக்கும்பிட்டார்.
 
அப்பொழுது தான் அவரை கவனித்தேன்.
அவர் வீதியில் நின்று வயலின் வாசித்தபடி பிச்சை எடுக்கும் ஒரு பிரெஞ்சுக்காறர்..
வழமையாக நடப்பது போல் எனது தோளிலிருந்த துணியால் மூக்கை மூடிக்கொண்டேன்.
அவரது வயலினும் தோள்ப்பையும் அவருடனேயே இருந்தன.
 
எனக்கும் அவருக்கும் சாப்பாடுகள் வந்தன.
அவர் கேட்டதைவிட அதிகமான சாப்பாடும்
குடிக்க Juice d'Orange ஒன்றையும் வைத்து விட்டு போக
மீண்டும் அவர் கையெடுத்துக்கும்பிட்டார்.
 
அதிலிருந்து இது அடிக்கடி நடப்பது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
தனது கடைக்குள் கொண்டு வந்து இலவசமாக சாப்பாடு போடும் முதலாளியின் மனதாபிமானமும்
அவனது நாட்டில் அவரை கண்டவுடன் மூக்கை பொத்தும் எனது மனநிலையும் வெட்கித்தலைகுனிய வைத்தன.
 
சாப்பிட்டு முடிய எனக்கு மட்டுமே பில் வந்தது.
பில்லுக்கு அதிகமான பணத்தை வைத்து விட்டு விடை பெற
மேலதிக பணம் வேண்டாம் இது எனது சிறு உதவி என்றார் முதலாளி.
பரவாயில்லை இன்று மட்டும் எனது என்றபடி வந்து விட்டேன்.
 
மனிதாபிமானம் இன்றும் வாழ்கிறது
செய்யும் ஒருவர் மூலம் அது மற்றவர்களையும் பற்றிக்கொள்கிறது.
எனவே உதவுவோம். உதவுவோம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம் அனேகரது உள்ளத்தில் இருக்கின்றது. ஆனால் பலருக்கு அதை வெளிகாட்டிடத் தெரிவதில்லை. நீங்கள் காட்டி இருக்கின்றிர்கள் விசுகு வாழ்த்துக்கள்.....!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:
மனிதாபிமானம் (சிறு கதை)
----------
அதிலிருந்து இது அடிக்கடி நடப்பது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
தனது கடைக்குள் கொண்டு வந்து இலவசமாக சாப்பாடு போடும் முதலாளியின் மனதாபிமானமும்
அவனது நாட்டில் அவரை கண்டவுடன் மூக்கை பொத்தும் எனது மனநிலையும் வெட்கித்தலைகுனிய வைத்தன.
 
சாப்பிட்டு முடிய எனக்கு மட்டுமே பில் வந்தது.
பில்லுக்கு அதிகமான பணத்தை வைத்து விட்டு விடை பெற
மேலதிக பணம் வேண்டாம் இது எனது சிறு உதவி என்றார் முதலாளி.
பரவாயில்லை இன்று மட்டும் எனது என்றபடி வந்து விட்டேன்.

விசுகு,  இந்த இரண்டு பந்திகளிலும்.... 
நீங்கள் செய்த தவறையும், அதற்கு செய்த பிராயச் சித்தமும்...
மனிதாபிமானம்... இன்றும், உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது, என்பதை காட்டியது. 👍

Link to comment
Share on other sites

6 hours ago, விசுகு said:
அதிலிருந்து இது அடிக்கடி நடப்பது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
தனது கடைக்குள் கொண்டு வந்து இலவசமாக சாப்பாடு போடும் முதலாளியின் மனதாபிமானமும்
அவனது நாட்டில் அவரை கண்டவுடன் மூக்கை பொத்தும் எனது மனநிலையும் வெட்கித்தலைகுனிய வைத்தன.
 
சாப்பிட்டு முடிய எனக்கு மட்டுமே பில் வந்தது.
பில்லுக்கு அதிகமான பணத்தை வைத்து விட்டு விடை பெற
மேலதிக பணம் வேண்டாம் இது எனது சிறு உதவி என்றார் முதலாளி.
பரவாயில்லை இன்று மட்டும் எனது என்றபடி வந்து விட்டேன்.
 
மனிதாபிமானம் இன்றும் வாழ்கிறது
செய்யும் ஒருவர் மூலம் அது மற்றவர்களையும் பற்றிக்கொள்கிறது.
எனவே உதவுவோம். உதவுவோம்.

நாம் செய்யும் சிறு உதவி கூட சூழவுள்ள மனிதர் மற்றும் பிற உயிரினங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. நீங்கள் கூறியபடி அந்த மனப்பான்மை மற்றோருக்கும் பரவக்கூடியது. ஆங்கிலத்தில் இதனை 'Pay it forward' என்பார்கள். 

இதற்கு உங்கள் கதை (அல்ல நிஜம்!) நல்ல ஒரு எடுத்துக்காட்டு, விசுகு அண்ணா. மேலும் தொடருங்கள்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

மனிதாபிமானம் இன்றும் வாழ்கிறது

 வணக்கம் விசுகர்! மனிதாபிமானம்  நல்ல அனுபவகதை.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், நீங்கள் செய்தது ஒரு நல்ல விடயம்! எனினும் நீங்கள் மப்ளரால் முகத்தை மூடியமை அவனது மனதில் நிச்சயம் நெருடலை ஏற்படுத்தியிருக்கும் எனினும் ... கடைக் காரர் உங்கள் மேசையில் அவரை இருத்தியதும்... கடைக்காரரின் தவறே! உங்கள் மனிதாபிமானம் ...அவனது மன நெருடலை... நிச்சயம் குறைத்திருக்கும்! தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:
அப்பொழுது தான் அவரை கவனித்தேன்.
அவர் வீதியில் நின்று வயலின் வாசித்தபடி பிச்சை எடுக்கும் ஒரு பிரெஞ்சுக்காறர்..
வழமையாக நடப்பது போல் எனது தோளிலிருந்த துணியால் மூக்கை மூடிக்கொண்டேன்.
அவரது வயலினும் தோள்ப்பையும் அவருடனேயே இருந்தன.

விசுகு முதலாளி வேணுமென்றால் அவருக்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி அவரை வரவேற்றிருக்கலாம்.முதலாளி செய்தது மிகப் பெரிய தவறு.உங்களில் தவறேதும் இல்லை.யாராவது சாப்பிடும் போது கூடாத மணம் வந்தால் எப்படிச் சாப்பிடுவார்கள்.

நீங்கள் இன்னொன்றையும் செய்திருக்க வேண்டும். முதலாளியை தனியே கூப்பிட்டு இப்படி ஊத்தை வேலை இனிமேல் செய்யாதை என்று எச்சரித்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

மனிதாபிமானம் அனேகரது உள்ளத்தில் இருக்கின்றது. ஆனால் பலருக்கு அதை வெளிகாட்டிடத் தெரிவதில்லை. நீங்கள் காட்டி இருக்கின்றிர்கள் விசுகு வாழ்த்துக்கள்.....!   😁 

நன்றியண்ணா

19 hours ago, தமிழ் சிறி said:

விசுகு,  இந்த இரண்டு பந்திகளிலும்.... 
நீங்கள் செய்த தவறையும், அதற்கு செய்த பிராயச் சித்தமும்...
மனிதாபிமானம்... இன்றும், உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது, என்பதை காட்டியது. 👍

நன்றி சிறி

எல்லாவற்றிற்கும் ஏதாவது  ஒரு உந்துதல்

அல்லது ஒரு தொடங்குதல்  தேவைப்படுகிறது

இந்தக்கதை  கூட  யாழின் 21வது வருட  வாழ்த்துக்கு  எதையாவது  எழுதணும்  என்ற உந்துதல் தான் காரணம்

16 hours ago, மல்லிகை வாசம் said:

நாம் செய்யும் சிறு உதவி கூட சூழவுள்ள மனிதர் மற்றும் பிற உயிரினங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. நீங்கள் கூறியபடி அந்த மனப்பான்மை மற்றோருக்கும் பரவக்கூடியது. ஆங்கிலத்தில் இதனை 'Pay it forward' என்பார்கள். 

இதற்கு உங்கள் கதை (அல்ல நிஜம்!) நல்ல ஒரு எடுத்துக்காட்டு, விசுகு அண்ணா. மேலும் தொடருங்கள்! 😊

எழுத  நேரம்  கிடைக்காத போதும்

இந்த  கருவும்

யாழின்  21 வருடமும் எழுதத்துண்டின

நன்றி  வாழ்த்துக்கும்  ஊக்குவிப்புக்கும்..

இனி  உங்கள் போன்றவர்கள் தான் தொடரணும் யாழையும்.

13 hours ago, குமாரசாமி said:

 வணக்கம் விசுகர்! மனிதாபிமானம்  நல்ல அனுபவகதை.👍

நன்றியண்ணா

உடல் நலத்தை  கவனியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

விசுகர், நீங்கள் செய்தது ஒரு நல்ல விடயம்! எனினும் நீங்கள் மப்ளரால் முகத்தை மூடியமை அவனது மனதில் நிச்சயம் நெருடலை ஏற்படுத்தியிருக்கும் எனினும் ... கடைக் காரர் உங்கள் மேசையில் அவரை இருத்தியதும்... கடைக்காரரின் தவறே! உங்கள் மனிதாபிமானம் ...அவனது மன நெருடலை... நிச்சயம் குறைத்திருக்கும்! தொடர்ந்தும் எழுதுங்கள்!

நன்றியண்ணா

தொடரலாம் அண்ணா

10 hours ago, ஈழப்பிரியன் said:

விசுகு முதலாளி வேணுமென்றால் அவருக்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி அவரை வரவேற்றிருக்கலாம்.முதலாளி செய்தது மிகப் பெரிய தவறு.உங்களில் தவறேதும் இல்லை.யாராவது சாப்பிடும் போது கூடாத மணம் வந்தால் எப்படிச் சாப்பிடுவார்கள்.

நீங்கள் இன்னொன்றையும் செய்திருக்க வேண்டும். முதலாளியை தனியே கூப்பிட்டு இப்படி ஊத்தை வேலை இனிமேல் செய்யாதை என்று எச்சரித்திருக்க வேண்டும்.

நன்றியண்ணா

நான்  அவசரத்தில்  எழுதியதால் குறிப்பிடத்தவறிவிட்டேன்

நான் அவரைக்கண்டதும் வழமை  போல் (இப்படியானவர்கள்  எவரைக்கண்டாலும்  செய்வது போல்)

மூக்கை  மூடினேனே  ஒழிய  அவரிடமிருந்து  எந்த  மணமும் அன்று வரவில்லையண்ணா

இது  அவர்கள்   இருவருக்குமிடையிலான  நெடு  நாள் புரிதலாக  இருக்கலாம்

நன்றியண்ணா

உங்கள்  இருவரது  கருத்துக்களும் வேறு  ஒரு கருவை  தந்துள்ளது

நேரம்  கிடைக்கும் போது பார்க்கலாம்

Link to comment
Share on other sites

9 hours ago, விசுகு said:

நன்றியண்ணா

நன்றி சிறி

எல்லாவற்றிற்கும் ஏதாவது  ஒரு உந்துதல்

அல்லது ஒரு தொடங்குதல்  தேவைப்படுகிறது

இந்தக்கதை  கூட  யாழின் 21வது வருட  வாழ்த்துக்கு  எதையாவது  எழுதணும்  என்ற உந்துதல் தான் காரணம்

எழுத  நேரம்  கிடைக்காத போதும்

இந்த  கருவும்

யாழின்  21 வருடமும் எழுதத்துண்டின

நன்றி  வாழ்த்துக்கும்  ஊக்குவிப்புக்கும்..

இனி  உங்கள் போன்றவர்கள் தான் தொடரணும் யாழையும்.

நன்றியண்ணா

உடல் நலத்தை  கவனியுங்கள்

யாழின் 21ஆவது அகவை தான் என்போன்றவர்களையும் மீண்டும் இங்கே எழுதத் தூண்டியது. நேரம் இருக்கும் போது மேலும் எழுதுங்கள் அண்ணா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2019 at 9:17 AM, ஈழப்பிரியன் said:

விசுகு முதலாளி வேணுமென்றால் அவருக்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி அவரை வரவேற்றிருக்கலாம்.முதலாளி செய்தது மிகப் பெரிய தவறு.உங்களில் தவறேதும் இல்லை.யாராவது சாப்பிடும் போது கூடாத மணம் வந்தால் எப்படிச் சாப்பிடுவார்கள்.

நீங்கள் இன்னொன்றையும் செய்திருக்க வேண்டும். முதலாளியை தனியே கூப்பிட்டு இப்படி ஊத்தை வேலை இனிமேல் செய்யாதை என்று எச்சரித்திருக்க வேண்டும்.

நாமெல்லாம் எங்க மாறப்போறம் 😀

மனிதாபிமானமும் சில நேரம் மரித்து போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான மனிதாபிமான கதை தொடர்ந்து எழுதுங்கள்  விசுகு...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இல்லாதவர்களுக்கு உதவுவதல்லவோ மனிதாபிமானம். ஏற்கனவே கடைக்கார்ர்தான் அவருக்கு உணவுகொடுக்க உள்ளே கூட்டிவந்துவிட்டாரே??? மூக்கைப் பொத்திவிட்டோம் என்னும் குற்ற உணர்வில் அல்லது முதலாளியிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்றே நீங்கள் மேலதிகமாக பணத்தை கொடுத்தது போல்ல்லோ இருக்கு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இல்லாதவர்களுக்கு உதவுவதல்லவோ மனிதாபிமானம். ஏற்கனவே கடைக்கார்ர்தான் அவருக்கு உணவுகொடுக்க உள்ளே கூட்டிவந்துவிட்டாரே??? மூக்கைப் பொத்திவிட்டோம் என்னும் குற்ற உணர்வில் அல்லது முதலாளியிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்றே நீங்கள் மேலதிகமாக பணத்தை கொடுத்தது போல்ல்லோ இருக்கு அண்ணா

ஒரு கருத்து  அல்லது எடுபொருள்

பலராலும் பலவாறும் கிரகிக்கப்படக்கூடும்  சுமே..

நானும் கன  நாளாக  என்னுள் ஒரு  கொள்கை வைத்திருக்கின்றேன்

அது  பற்றி  இங்கும் எழுதியிருக்கின்றோம்

உதவி  தேவைப்படுபவர்களுக்கு

அல்லது வேறெவரும் உதவாதவர்களுக்கு  மட்டுமே  உதவுவது  என்பது.

ஆனால்  இங்கே ஒருத்தர்  தொடர்ந்து  உதவும் போது 

நம்மால் முடிந்தால்  ஒரு நாள்  அவரது சுமையை  குறைக்கலாமே...??

அம்புட்டுத்தான்...

மற்றும்படி  கதையின்  கரு உதவ  தூண்டுதல்.

நன்றி சுமே

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கடை முதலாளியின் மனிதாபிமானமும், ஒரு வீடற்றவனின் அழுக்கால் விசுகு ஐயா மூக்கைப் பொத்தியதும் அவரவர் ஊறிய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் இருந்து வந்தன.

அழுக்கானவரின் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு சாப்பிட்ட விசுகு ஐயாவுக்கு முதலாளி பில் தராமல் விட்டிருக்கலாம்😬

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.