Jump to content

பிரிட்டனுக்கு திரும்புவாரா ஐஎஸ் அமைப்பில் இணைந்த பெண்? - குடும்பத்தினரின் சட்டப் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
ஷமிமா பேகம்படத்தின் காப்புரிமை PA Image caption ஷமிமா பேகம்

பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்று, ஐஎஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணை மீண்டும் பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்ற அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவீதுக்கு கடிதம் எழுதியுள்ள ஷாமிமா பேகம் என்ற அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், 'அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது' என்றும், அவரது குடியுரிமை குறித்து 'பிரிட்டனின் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஷமிமா பேகத்திடமிருந்து சமீபத்தில் கிடைத்த தகவல்கள் தங்களை "மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியுள்ளதாக" அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஷமிமா பேகத்திற்கு பிறந்துள்ள குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்து வருவதற்கு உதவ வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யார் இந்த ஷமிமா பேகம்?

லண்டன் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஷமிமா பேகம், கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவுக்கு சென்று ஐஎஸ் இயக்கத்தில் இணைந்தார். தற்சமயம் சிரியாவிலுள்ள அகதிகள் முகாமொன்றில் வசித்து வரும் அவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஷமிமா பேகம் Image caption ஷமிமா பேகம்

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பிபிசியுடனான நேர்காணலின்போது பேசிய ஷமிமா, தான் சிரியாவுக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை என்றும், ஐஎஸ் இயக்கத்தினர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் 22 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை நடத்தியது ஐஎஸ் இயக்கத்தினர் என்பதை அறிந்து தான் "அதிர்ச்சிக்குள்ளானதாக" ஷமிமா பேகம் பிபிசியிடம் தெரிவித்தார்

ஷமிமா பேகத்தின் குடும்பத்தினரின் சார்பில் அவரது சகோதரி ரேணு பேகம் எழுதிய அந்த கடிதத்தில், "நாட்டிலுள்ள மற்றவர்களை போலவே நாங்களும், ஷமிமாவின் சமீபத்திய வெறுக்கத்தக்க கருத்துகளை அறிந்து அதிர்ச்சியுற்றோம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.

அவை பிரிட்டனை குடிமக்களை பிரபலிக்கும் கருத்துகள் அல்ல. எனவே, எனது சகோதரி கூறிய கருத்துகளை எங்களது குடும்பத்தினர் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஷமிமா பேகம் ஐஎஸ் இயக்கத்தில் சேருவதை தவிர்க்கும் அனைத்துவிதமான முயற்சிகளையும் தங்களது குடும்பத்தினர் மேற்கொண்டதாக ரேணு பேகம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த நான்காண்டுகளாக ஐஎஸ் அமைப்பினரின் பிடியில் இருந்து வருவதால், அவரது அடிப்படை எண்ணவோட்டம் மாறுபாடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-47333144

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.