Jump to content

பாகிஸ்தான் குழுவுக்கு அனுமதி மறுப்பு: சர்வதேச ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு சிக்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் குழுவினர் பங்கேற்க இந்தியா அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வரும் காலங்களில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமா அருகில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாகவே, பாகிஸ்தான் குழுவினருக்கு இந்தியா விசா வழங்கவில்லை என்று கருதப்படுகிறது.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் இந்தியாவில் நடத்தவுள்ள உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இருந்த துப்பாக்கி சுடுதல் பிரிவுக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று எனும் அந்தஸ்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) ரத்து செய்துள்ளது.

வரும் காலங்களில் ஒலிம்பிக் சாசனத்தின் கொள்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் என்று தெளிவான, எழுத்துபூர்வமான உத்தரவாதம் இந்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்து பெறப்படும்வரை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் தொடர்பான பிற நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தி வைக்க ஐ.ஓ.சி-யின் செயற்குழு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா ஒலிம்பிக்படத்தின் காப்புரிமை Cameron Spencer

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் புதுடெல்லியில் பிப்ரவரி 20 முதல் 28 வரை துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

இந்த உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு வரும் 2020இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று எனும் அந்தஸ்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது.

இதில் 25 மீட்டர் பிரிவில் பங்கேற்க இருந்த இரண்டு பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு விளையாட்டுத் துறை அதிகாரி ஆகியோருக்கு, இந்தியாவுக்குள் நுழைவதற்கான விசா வழங்கவில்லை என்பதை பிப்ரவரி 18 அன்று இந்திய அதிகாரிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தப் பிரிவுக்கு மட்டும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று அந்தஸ்தை ஐ.ஓ.சி ரத்து செய்துள்ளது. 25 மீட்டர் தவிர பிற பிரிவுகளில் வெல்பவர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.

ஏற்கனவே இந்தியா வந்தடைந்துள்ள 61 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்களின் நலன்களை கருத்தில்கொண்டு, பிற பிரிவுகளுக்கு அந்த அந்தஸ்து ரத்து செய்யப்படவில்லை என்று ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

இந்தியா ஒலிம்பிக்படத்தின் காப்புரிமை Hindustan Times

பாகிஸ்தான் குழுவினருக்கு விசா வழங்க இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் ஆகியவை கடைசி நேரத்தில் இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

இப்போது ஏற்பட்டுள்ள சூழல், ஒலிம்பிக் சாசனத்தின் அடிப்படைக்கு கொள்கைகளுக்கு, குறிப்பாக பாரபட்சம் காட்டாமல் இருக்க வேண்டும் எனும் கொள்கைக்கு முரணாக இருப்பதாக ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் எந்த நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், போட்டியை நடத்தும் நாட்டிலிருந்து அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-47332044

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.