Jump to content

பல்கலைக்கழகங்களும் பயனுள்ள ஆய்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகங்களும் பயனுள்ள ஆய்வுகளும்

 

 
Comments - 0Views - 28

image_5f10db23d4.jpg

 

கடந்தவாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடொன்று நடைபெற்று முடிந்தது. யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முதலாக 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆய்வாளர்களையும் 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களையும் கொண்ட ஆய்வு மாநாடு ஒன்று நடைபெற்றிருக்கிறது.

இந்த நிகழ்வின் சமூகப் பெறுமானம் பெரிது. அதேவேளை இம்மாநாடு எழுப்பியுள்ள கேள்விகளும் வாய்ப்புக்களும் கவனிக்கத் தக்கவை. இதுவும் இன்னொரு நிகழ்வாக ஊடகங்களினதும் பொதுவெளியினதும் பெருங்கவனத்துக்கு உள்ளாகாமல் கடந்து போயிருக்கின்றது. இந்த நிகழ்வு தமிழ்ச்சமூகம் கவனங்குவிக்க வேண்டிய முக்கிய பேசுபொருளைப் பொதுவெளியில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. 

தூயசக்தி, மருத்துவநல பயன்பாட்டுக்கான உயர் மூலப்பொருட்கள் பற்றியதான இம்மாநாட்டை மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடனான யாழ். பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பு சாத்தியமாக்கியுள்ளது. 

இந்நிகழ்வு இரண்டு முக்கிய விடயங்களைச் சொல்லிச் செல்கிறது. முதலாவது புலம்பெயர் தமிழர் ஒருவரின் அயராத இடைவிடாத முயற்சியே இருநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அவ்வகையில் அந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் மெச்சப்பட வேண்டும். புலம்பெயர் சமூகம் ஆற்றியுள்ள பயனுள்ள இடையீடாக இதைக் கொள்ளவியலும். இவ்வாறான முயற்சிகள் தரமான பல்கலைக்கழகக் கல்வியும் வளமான அறிவார்ந்த சமூகத்தின் உருவாக்கத்துக்கும் முதன்மையானவை. 

இரண்டாவது இவ்வாறான முயற்சிகளுக்கு உயிர்கொடுத்து பணியாற்றக்கூடிய வினைத்திறனுள்ளவர்கள் எம்மத்தியில் உள்ளார்கள் என்ற நம்பிக்கையை, இந்த மாநாடு வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய மாநாட்டை ஒழுங்குபடுத்தி திறம்பட நடாத்தி முடித்திருக்கிறார்கள் என்பதை எம்சமூகத்தின் கொள்திறனைக் காட்டி நிற்கின்றது. கல்விப்புல ரீதியான முன்னேறிய சமூகமாக நாம் மாறுவதற்குத் தயாராக உள்ளோமா என்ற பிரதான கேள்வியை இம்மாநாடு விட்டுச் சென்றிருக்கின்றது. மிகவும் மேம்பட்ட ஆய்வுப்பரப்பை உள்ளடக்கமாகக் கொண்ட மாநாடு ஆய்வுத்துறையில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதைக் காட்டிய அதேவேளை இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டிணைவானது, புதிய வாய்ப்புக்களை விதைத்துச் சென்றுள்ளதையும் நோக்க வேண்டியுள்ளது.      

இலங்கையின் உயர் கல்விக்கான தேவை உயர் பதவிகட்கான தேடலுடன் தொடர்புடைய அளவுக்குத் தொழில் சார்ந்த ஆற்றல்களையோ சமூக அறிவையோ பெறும் விருப்பத்துடன் தொடர்புடையதல்ல. அதேவேளை  வேகமாக மாறிவருகின்ற சூழலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக எமது பல்கலைக்கழகக் கல்வித்திட்டங்கள் இல்லை. அவை பயனுள்ள ஆய்வை நோக்கி நகர்த்துவனவாக இருப்பதும் குறைவு. பல்கலைக்கழகங்களின் வளப்பற்றாக்குறை இதற்கான முக்கிய காரணம். 

ஒரு புறம் அரசபல்கலைக் கழகங்களுக்கான நிதியையும் வளங்களையும் குறைத்து அவற்றைப் பலவீனப்படுத்திக் கொண்டு மறுபுறம் தனியார் பல்கலைக்கழகங்களைப் புகுத்தும் திட்டம் பல்வேறு வழிகளில் அரங்கேறுகிறது. இது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றினது வற்புறுத்தலாலும் கல்வி வணிகத்தில் தீவிரமாகியுள்ள நாடுகளது நெருக்குவாரங்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. கல்வி பற்றிய எமது பார்வைகள் கல்வி என்பது தனிமனித மேம்பாட்டுக்கானது என்ற நோக்கிலானானவையே. தன்னைச் சூழவுள்ள சமூகத்தையும் இயற்கையையும் அறியும் தேவையைக் கல்வி நிறைவேற்றுவதோடு, ஒருவர் தான் வாழும் சமூகத்தின் நலன்கட்காகவும் உயர்வுக்காகவும் உச்சமான பங்களிக்கக்கூடிய ஆற்றல்களையும் மன நிலையையும் கல்வி ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். கல்வி பற்றிய எதிர்பார்ப்புக்கள் வெறுமனே தனிமனிதத் கண்ணோட்டத்தில் அமையும் போது, தனிப்பட்டவர்களின் உயர்வும் நலனும் மட்டுமே முக்கியமாகின்றன. எனவே, சமூக முன்னேற்ற வாய்ப்புகள் குறைந்த சூழ்நிலைகளில், கல்வி என்பது தனி மனிதர்களிடையான கடும் போட்டிக்கும் உரிய களமாகிறது. இளவயதிலேயே உருவாகும் இவ்வாறான போட்டி, சமூக நோக்கற்ற சுயநலமிகளை உருவாக்குகிறது.

நாம் கல்வியின் பயன்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகங்களின் பணி என்ன என்பது பிரதான வினாவாகிறது. இன்றைய பல்கலைக்கழக ஆய்வுகள் பெரும்பாலும் பதவி உயர்வுக்காகச் செய்யப்படுவனவாக இருக்கின்றன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் என வெளிவரும்  பல கட்டுரைகளால் துறைசார்ந்த விருத்தியோ சமூகப் பயனோ ஏற்படுவதில்லை. மிகச்சிறிய தொகையானோரோ தரமான ஆய்வுப் பாரம்பரியத்தை நிறுவவும் நிலைபெறச் செய்யவும் போராடுகிறார்கள். 

இந்த ஆய்வு மாநாடு பயனுள்ள ஆய்வுகளின் தேவையையும் வேகமாக மாறும் அறிவியல் மற்றும் தொழிநுட்பச் சூழலுக்கு முகங்கொடுக்கக் கூடிய பாடத்திட்டங்களையும் வசதிகளையும் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை குறிகாட்டி நிற்கின்றது. அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் உடைய செயற்பாடுகள், பயனுள்ள ஆய்வுகளும் எவ்வாறு வேகமாகவும் பயன்விளைவிக்கத்தக்க முறையிலும் நகரும் என்பதை இந்த மாநாடு காட்டியுள்ளது. இது இப்போது துறைசார்ந்து கற்கும் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் ஆய்வுகள் உலகளாவிய ரீதியில் எத்தகைய தரமுடையனவாக உள்ளன என்ற சித்திரத்தையும் வழங்கியுள்ளன. இது அவர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கும். பயனுள்ள ஆய்வுகளை நோக்கி பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினரும் நகர்வது தவிர்க்கவியலாதது. 

தமிழ்ச் சமூகம் கல்விப்புலரீதியில் தன்னைத் தகவமைப்பதற்கும் மாறுகின்ற சூழலுக்கு முகங்கொடுக்கவும் தயாராக இருக்கிறதா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. வழமை போல குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டலாம், அல்லது நடந்து முடிந்த மாநாடு காட்டியது போல உலகையே அழைத்து அரவணைத்து துணைகொண்டு ஆய்வுரீதியில் முன்னோக்கிப் பயனுள்ள ஆய்வுகளை நோக்கிப் பயணிக்கலாம். நாம் என்ன செய்யப் போகிறோம். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பல்கலைக்கழகங்களும்-பயனுள்ள-ஆய்வுகளும்/91-229919

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180). 
    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.