Jump to content

தமிழ் மக்களுக்குத் தேவை அபிவிருத்தியா, அதிகாரமா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்குத் தேவை அபிவிருத்தியா, அதிகாரமா ?

image_d21a21daa3.jpg

 

தமிழ் மக்கள் ஒன்றும் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கவில்லை. வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள்” இது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார்.   

அவரது அந்தக் கருத்தை அப்படியே பிரதி செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.   

“வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான், கூடுதல் அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, அங்குள்ள மக்கள் அல்ல; அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் பொருளாதார அபிவிருத்தியும் நிம்மதியும் தான்” என்று, அவர் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார்.  

மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களைப் புரிந்து கொண்டது இவ்வளவு தான் என்பது, ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல. ஆனால், அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதை வழிமொழியும் வகையில் கூறியிருப்பது தான், ஆச்சரியமானது.  

அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்‌ஷவுடன் மல்லுக் கட்டுபவர்களில் ராஜித சேனாரத்னவும் ஒருவர்; இடதுசாரி வழியில் வந்தவர். தமிழ் மக்களில் பலருடனும் தமிழ் அரசியல்வாதிகளுடனும் அதிக நெருக்கம் கொண்டவர்.  

ஆனாலும், அவரால் மஹிந்த ராஜபக்‌ஷவைப் போலவே, தமிழ் மக்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்களைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.  

தமிழ் மக்கள், கூடுதலான அதிகாரங்களைக் கேட்கவில்லை என்றும், ஏதோ, அரசியல்வாதிகள் தான் அதற்காக முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தெற்கின் இரண்டு பிரதான அரசியல் சக்திகளிடம் இருந்தும் வெளியாகி இருக்கின்ற இந்தக் கருத்தைச் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது.  

மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்கள் தொடர்பாக, இன்னமும் தப்பான கணக்கைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார். நான்கு கால் முயலைப் பிடித்துக் கொடுத்தாலும், மூன்று கால் தான் என்று வாதிடக் கூடியவர்.  

தமிழ் மக்களுக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு, அரசியல் அதிகாரங்கள், உரிமைகள் விடயத்தில், அவர் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லாதவர்.  அவரைப் பொறுத்தவரையில், தமிழ் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு, தமிழ் மக்களுடன் நெருங்கிச் செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார். அண்மையில் கூட அவர், அதை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.  

ஆனால், தமிழ் மக்களுடன் எவ்வாறு நெருங்கிச் செல்வது என்பது தொடர்பாக, சரியான ஆலோசனை கொடுக்கும் எவரும், அவருக்கு அருகில் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. தமிழ் மக்கள், தமக்கான உரிமை, அதிகாரங்கள் விடயத்தில் எந்தச் சமரசத்துக்கும் இடமளிக்காதவர்கள் என்பதைக் கூட, சரியாகக் கணக்குப் போடத் தெரியாதவராக அவர் இருக்கிறார்.  

போர் முடிந்த பின்னர், பசில் ராஜபக்‌ஷவின் மூலம், வடக்கில் அபிவிருத்தி அரசியலை முன்னெடுத்து, வடக்கு மாகாண சபையின் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவுக் கோட்டை கட்டி, அது முற்றாகவே தரைமட்டமாகிய போதும், தமிழ் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கத் தெரியாதவர் அவர். 2015ஆம் ஆண்டு,  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குகளின் ஊடாக, மஹிந்த ராஜபக்‌ஷவை முழுமையாக நிராகரித்த பின்னரும் கூட, தமிழ் மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுத்தனர் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அவர். அவர் அப்படி இருப்பது பெரிய ஆச்சரியத்துக்குரிய விடயமன்று. ஆனால் அமைச்சர் ராஜித சேனாரத்ன அப்படியல்ல!   

ராஜித சேனாரத்ன, தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகுபவர். தமிழ் அரசியல் தலைவர்களுடன், கட்சி வேறுபாடின்றித் தொடர்புகளை வைத்திருப்பவர். ஆனால், அவரது கண்ணையும் மறைத்திருக்கிறது, அபிவிருத்தி அரசியல் என்பதுதான் ஆச்சரியம்.  

கடந்த டிசெம்பர் மாதம், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், மீண்டும் பதவிக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அபிவிருத்தி அரசியலை நோக்கிச் சாய ஆரம்பித்துள்ளது. அரசமைப்பு மாற்றம், அரசியல் தீர்வு போன்ற வாக்குறுதிகளை, எஞ்சியிருக்கும் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றப்படுவது சாத்தியமில்லை என்ற நிலையில், கிடைத்திருக்கும் குறுகிய கால இடைவெளிக்குள், தமிழ் மக்களுக்கு சாத்தியமானளவு பொருளாதார உதவிகளையும் திட்டங்களையும் பெற்றுக் கொடுப்பதில் கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகிறது,  

கடந்த வாரம், சில நாள்கள் வடக்கில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பல புதிய திட்டங்களை, ஓடி ஓடி ஆரம்பித்து வைத்தார். ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்குப் போதுமான நிதி, அரசாங்கத்திடம் உள்ளதா என்பது சந்தேகம்.  

ஆனாலும், டிசெம்பரில் ஐ.தே.க அரசாங்கத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்துக் காப்பாற்றிய பின்னர், வடக்கின் மீதான அரசாங்கத்தின் கவனம், அதிகரித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது புதிய திட்டங்களுக்கான அடிக்கற்களை நாட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். உரிமைக்கான அரசியலுடன், அபிவிருத்தி அரசியலையும் முன்னெடுக்கும் உத்தியை, கூட்டமைப்பு கையாள ஆரம்பித்திருக்கிறது. இது, ஐ.தே.க அரசாங்கத்துக்கு, உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அபிவிருத்தி அரசியலை வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மடக்கிப் போட்டுக் கொள்ளலாம் என்று, அரசாங்கம் நினைத்திருக்கிறதோ தெரியவில்லை. அந்தத் தப்புக்கணக்கில் இருந்து தான், அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறியிருக்கலாம்.   

இதுவே, தமிழ் மக்கள் அபிவிருத்தியையும் எதிர்காலத்தையும் பற்றியே சிந்திக்கிறார்களே தவிர, அதிகாரங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர் கருதும் நிலையை ஏற்படுத்தியிருந்தால், அதற்குத் தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும்.  

தமிழ் மக்கள், தமக்கான அதிகாரம், உரிமைகளை விட, அபிவிருத்தியைப் பற்றியே அதிகம் சித்தித்திருந்தார்கள் என்றால், தேர்தல்களின் போது, உரிமைகளை மட்டும் முன்னிறுத்தி, அரசியல் செய்தவர்களைத் தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.  

தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை; அதைக் கேட்டது புலிகள் தான்; பிரபாகரன் தான் என்றவர்கள், தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான், அதைக் கேட்கிறது என்றவர்கள், இப்போது, தமிழ் மக்கள் அதிகாரங்களையே கேட்கவில்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.  

அதாவது, தனிநாடு, சமஷ்டி என்ற கோரிக்கைகள், மேலிருந்து கீழ் நோக்கியதாக, இப்போது சாதாரணமாக, அதிகாரங்களில் வந்து நிற்கிறது.   

அதிகாரங்கள், உரிமைகளைத் தமிழ் மக்கள் கேட்கவில்லை என்றால், 30 ஆண்டுகளாகப் போர் நீடித்தது எப்படி? இன்றைக்கும், தனிநாடு கோரிய புலிகளைத் தமிழ் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஏன்?  
தமிழ் மக்களின் அபிலாஷைகளை, சிங்கள அரசியல் தலைமைகள் இன்னமும் ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இல்லை. அது, இடதுசாரித் தலைவர்களாக இருந்தாலும் சரி, பேரினவாதத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் சிந்தனைகளில் வேறுபாடு இல்லை.  

இந்த இடத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவும் ராஜித சேனாரத்னவும் ஒரே மாதிரித் தான் தெரிகிறார்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ளாமல், வெறும் அரசியல்வாதிகளின் அபிலாஷைகளாகவே, அவற்றை மட்டுப்படுத்திக் கொள்ள அவர்கள் முனைகிறார்கள்.  

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, மறுப்பதற்கான ஓர் உபாயமாகவும் அவர்கள் இதைக் கையாளுகிறார்கள்.  

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, அவர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு ஒன்றை வழங்குவதற்குத் தயாரில்லாதவர்கள் தான், தமிழ் மக்கள் அவற்றை எதிர்பார்க்கவேயில்லை என்று கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  

சரி, தமிழ் மக்கள் அதிகாரத்தைக் கேட்கவில்லை; உரிமைகளைக் கேட்கவில்லை; சமஷ்டியையோ, தனிநாட்டையோ கேட்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.   

அவர்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தியை, வளமான வாழ்வையாவது கொடுக்கின்ற வேலையை, கடந்த 10 ஆண்டுகளில் எந்த அரசாங்கமாவது, மேற்கொண்டிருக்கிறதா?  

மஹிந்த அரசைக் குற்றம்சாட்டிய தற்போதைய அரசாங்கம் மாத்திரம், தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு, செழிப்புக்கு என, எத்தகைய பாரிய திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது?  

ஒன்று கூடக் கிடையாதே. பிறகெப்படி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அபிவிருத்தி தான் என்று, அவர்களால் கூற முடிகிறது?  

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை, தமிழ் தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றால், அவர்களின் அபிலாஷைகளை அறிந்து கொள்வதற்கு, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக, ஒரு கருத்தறியும் முயற்சியையாவது முன்னெடுக்கும் துணிச்சல் அரசாங்கத்துக்கு இருக்கிறதா?  

அபிவிருத்தியா, அதிகாரங்களா தேவை என்று, தமிழ் மக்களிடம் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் அரசாங்கத்துக்குக் கிடையாது.

துணிந்து அவ்வாறான ஒரு கருத்து வாக்கெடுப்பை நடத்தி விட்டு, அதற்குப் பின்னர், தமிழ் மக்களின் அபிலாஷைகள் பற்றிக் கூறினால், பொருத்தமாக இருக்கும்.     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-மக்களுக்குத்-தேவை-அபிவிருத்தியா-அதிகாரமா/91-229920

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தை கொடுங்க...அபிவிருத்தி அடைந்து காட்டுகிறோம்...முதல்ல அதைச் செய்யுங்க..

 

Link to comment
Share on other sites

3 hours ago, alvayan said:

அதிகாரத்தை கொடுங்க...அபிவிருத்தி அடைந்து காட்டுகிறோம்...முதல்ல அதைச் செய்யுங்க..

 

நம்மிடையே அதிகாரத்தை கையாலுவதில் உள்ள இயலாத்தன்மை பலவகையிலும் பல இடங்களிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. புலத்திலும், தளத்திலும் இது பொருந்தும். (விடுதலைப்புலிகள் நிர்வாகம் இதற்கு விதிவிலக்கு.)

தற்போதுள்ள நிலையில் எமக்கு அதிகாரத்தை விட அபிவிருத்தி மேலானது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.