Jump to content

ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்….

February 23, 2019

 

2017 தை  14 ,15 இல் கனடாவில்  இடம்பெற்ற, கருணா வின்சென்ட்டின்  கண்காட்சியை முன்னிட்டு வெளிந்த  கட்டுரையை இங்கு நினைவு கூர்கிறோம்…

Karuna-canada.jpg?resize=434%2C434

கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து

Jan 13, 2017 @ 13:52 Edit

Karuna-Book-Cover-Kanaiyaali-1.jpg?resiz

கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக்  கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத்  தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம்.

பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. மனித சமூகத்தின் ஆரம்பகால வளர்ச்சியோடு அவை ஒவ்வொரு கட்டடத்தில் ஒவ்வொரு ரூபத்தில் இணைந்திருக்கின்றன.

கூத்து, இசை, நாடகம்  என்பன எப்போது ஆரம்பித்தன என்று சொல்லமுடியாது. ஓவியம் என்பது குழந்தைக்கு சந்திரனைக் காட்டி உணவு தீத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது. தூரத்தில் தெரியும் மாட்டைக்காட்டி ஆட்டைக் காட்டி உணவூட்டுவதிலிருந்து தொடங்குகிறது. சந்திரனைக்காட்டி “உம்மாண்டி ” என்பதோ அல்லது அவ்வைப்பாட்டி என்பதோ எதுவானாலும் குழந்தைக்கு அங்கு  நவீன  ஓவியம் தொடக்கிவிடப்படுகிறது.

நவீன ஓவியம்

17 ஆம்  நூற்றாண்டில் வந்த காமராப்பெட்டி  மரபு  வழியாக வந்த ஓவியர்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டத்தொடங்கியது.

Karuna.jpg?resize=200%2C200

மரபுவழி வந்த ஓவியர்கள் தமது ஓவியங்களில் வரையறுக்கப்பட்ட    பரிணாமம், இணக்கப்பாடு , சமநிலை,அமைவு , நிறச் சேர்க்கை போன்ற பல அம்சங்களை மரபு ரீதியான ஓவியர்கள்  வரையறுத்தனர்.  வித்தியாசமான அபூர்வமான கலைத்தன்மைவாய்ந்தவர்களாக இருந்தனர்.

அரசர்களையும் , இராணிகளையும் , நிலச் சுவாந்தர்களையும் பண்ணையார்களையும் அவர்களின் பாரியார்களையும் நீண்ட நேரம் இருத்தி வைத்து படம் வரைந்து அதற்கான பண்டத்தைப் பெற்று வந்த மரபு வழி  ஓவியர்களுக்கு நொடிப்பொழுதில் விமபத்தைப் பிரதிசெய்யும் “கமரா’ பெருஞ்   சோதனையாயிற்று.

ஓவியம் பற்றிய முரணான கருத்தமைவுகள் தோன்றத்தொடங்கின. மரபு ஓவியத்திலிருந்து நவீன ஓவியம் ஆரம்பமாயிற்று. மனபதிவுவாதம் என்ற கொள்கை உருவாயிற்று.  நவீன ஓவியம் மரபு ஓவியத்திற்கு முன்னதாகவே  மாந்த்ரீகம் போன்ற விடயங்களில் பயன்பாட்டில் இருந்தது. எனினும் நவீன ஓவியங்கள் என்பவை விவேகம் சார்ந்தவையாக அமைந்தமை எனவும் முன்பு இருந்தவை மாந்திரீகங்களுக்கு பயன்பட்டவை எனவும்   கருதப்பட்டது.

யாழ்ப்பாணமும்  மேற்கு ஓவியமும்

Karuna3.jpg?resize=479%2C604

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில்  ஓவியத்திற்கு என்று ஒரு மரபு இருக்கவில்லை. மேற்கத்தைய பாணி ஓவியங்கள் பாடசாலைகள் மூலம் ஊட்டப்பட்டது. ஆங்கிலேயர் தமது விட்ட்டோரிய தத்ரூபப்  பாணி ஓவியங்களை அறிமுகம் செய்தனர்.

யாழ் ஓவிய வரலாற்றில் எம்மாற் குறித்துச் சொல்லக் கூடிய ஒருவர் ஓவியப் பாடக்   கல்வியதிகாரி எஸ் ஆர் கனகசபை அவர்கள். SRK அவர்கள் இரட்டுத்துணியில் “ஆயில் பெயிண்ட்” (எண்ணெய் வண்ண)   ஓவியங்களை  முதன்முதல் ஆரம்பித்த ஒருவர். இது மேற்கத்தையப் பணியாகும் .

மாற்கு மாஸ்டர்,  எஸ் ஆர் கனகசபை அவர்கள் தான் மேற்கத்தியப்பாணியை எம்மிடத்தில் அறிமுகம்செய்தவர் எனவும் அதனை அன்று  பலர் பின்பற்றுவதாகவும் தனியே ஒரு ஓவிய “இன்ஸ்பெக்டராக” இருக்காமல் பல விடயங்களைத் தேடி அறிந்த ஒருவர் அவர் என்றும் எஸ் ஆர் கே பற்றிச் சொல்வார். எஸ் ஆர் கனகசபையின் பணி இலங்கை ஓவிய வரலாற்றில் முக்கியம்பெற்ற 43 குழுவினருடன் தொடர்புடையது.

எஸ் ஆர் கே   ஆரம்பித்த வின்சர் ஓவியக் கழகத்தின் பணியும்  எமது ஓவிய வரலாற்றில் முக்கியமானது. 1938 மார்ச்சில் கோப்பாயில் தொடக்கப்பட்ட வின்ஸர் ஆட்கிளப்பில், எஸ்.ஆர்.கே.யின் வழிகாட்டலில் ஓவியப்பயிற்சிகளில் ஈடுபட்ட இராசையா, எம்.எஸ்.கந்தையா. கே. கனகசபாபதி, ஐ, நடராசா, க. இராசரத்தினம் என்போர் பின்னாளில் புகழ்பெற்ற ஓவியர்களாகப் பரிணமித்தனர். ஓவியரும்  நாடகத் தயாரிப்பாளருமான சானா வும் வின்ஸர் ஆட்கிளப்புடன் .தொடர்புடையவரா யிருந்தவராவார்.

Alai-001.jpg?resize=760%2C1024

 நாம் இன்று காணும் நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவரின் படம் அமரர் எஸ் ஆர் கே யினால் வரையப்பட்ட படமாகும்.

மாற்குவும் அவர் விழுதுகளும்

எஸ் ஆர் கே யின் மறைவின் பின்னர் ஓவியர் மாற்குவுடன் இணைந்து  சிலரால் ஆரம்பிக்கப்பட்டது விடுமுறைக்கால ஓவியக் கழகமாகும். நியூசீலாந்தில் வதியும் ஓவியர் அற்புதசிங்கம் இங்கு ஒரு வர்த்தக ஓவியராகவும் அரங்க அமைப்பு ஓவியராகவும் பணியாற்றுபவர்.

Karuna-Invitation.jpg?resize=960%2C720

இந்த விடுமுறைக்கு கழகத்தில் பயின்ற இவருடன் ரமணி ,செல்வநாதன் , தங்கராஜா , புகழேந்தி, ஞானமலர், பேபி ஆகியோரும் வேறு சிலரும் பயின்றுள்ளனர். விசாகப்பெருமாள், சுவாம்பிள்ளை ஆகியோர் ஆசிரியர்களாக இங்கு பணிபுரிந்துள்ளார்கள் .

நவீன ஓவியத்தை எங்களுக்கு அறிமுகம் செய்ததில் மாற்கு மாஸ்டருக்கும் விடுமுறைக்கால ஓவியக்  கழகத்திற்கும் பெரும் பங்கு  உண்டு .

மாற்கு மாஸ்டர் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கரவெட்டி சயன்ஸ்  சென்ரரிலும் ஓவிய வகுப்பினை நடத்திவந்தார்.  நானும்  அங்கு அவரது மாணவராகச்  சேர்ந்து சுமார் ஒரு  வருடத்துக்கும்  மேலாக படிக்க முடிந்ததை இங்கு குறித்தல் பொருத்தமாகும்.

உயர்தரக் கல்வி ,வேலைவாய்ப்புகள் என்பவற்றின்  வாழ்வியல் சூழலின் வகிபாகங்களினால் இந்த வகுப்பும்  முடிவுக்கு வந்தது. அவரது மாணவர்களின் ஓவியங்களை கண்காட்சிகளாக நடத்துவது அவரது ஊக்குவிப்பில்  ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் எனது தொலைக்காட்சி நெறியாள்கைக்கு  அமைப்பிலிருந்து shots selection ,காடசித் தெரிவு ,வண்ணச் சேர்க்கை என்பவற்றில் மாற்குவின் பயிற்சி என் ஆளுமையில் பக்கத்துணையாக இருந்தது.

 மாற்கு மாஸ்டரின் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக அருந்ததி , வாசுகி , நிர்மலா, வைதேகி போன்றோர் தொடர்ந்தும் தமது ஆற்றலை வெளிப்படுத்தி நின்றவர்கள். பல்கலைக் கழகம் வரை  அதனைத் தொடர்ந்தவர்களும் இவர்களில் அடங்குவர்.

80களில் உச்சம் பெற்ற ஈழத்தமிழோவிய வரலாறு பின்னர் கோட்டு முறைச் சித்திர வகையில் இளையவர்களைக் கவர்ந்தது. 80 களின் பின்னர் கைலாசநாதன் ,நிலாந்தன் சனாதனன் போன்றவர்கள் குறிக்கத் தகுந்தவர்களாகின்றனர். இவர்களது ஓவியங்கள் மேற்குறித்த நவீன பாணிகளினின்றும் வித்தியாசமானவையாகின.

கணினியின் வருகை

Karuna-Pic-1.jpg?resize=450%2C573

கணினியின் வருகை அதில் ஆர்வம் கொண்ட இளையவர்களின் ஓவிய ஆளுமை நவீன ஓவியத்தில் புதுமையையும் அறிவார்ந்த மட்டத்தையும் தோற்றுவித்தது.  இணையங்களின் வருகையினால் ஓவியங்கள் மீதான பார்வையாளர்களின் ரசனை மட்டத்தை மேவக்கூடிய வகையில் எம்மவர்கள் சிலர் இந்த ஓவிய முறையிலும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.

ஊடகங்கள்

நவீன ஓவியங்களை  வெகுசன ஊடகங்கள் ஊக்குவிக்காமை  எம்மத்தியில் அவை வீச்சான வளர்ச்சியை அடைய முடியவில்லை.சில சஞ்சிகைகள் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தன. யேசுராசாவின் அலை , உமாவரதராஜனின் வியூகம் , மூன்றாவது கண்  போன்றன குறிப்பிடத்தக்கவை . சரிநிகர் ,திசை ஆகிய   பத்திரிகைகளைத் தவிர தேசிய வார இதழ்களில் தினக்குரல்  90 களில் நவீன ஓவியங்களை உள்வாங்கியது. மக்களின் ரசனைக்கு முன்னர்  ஊடகங்களின் பொறுப்பாளர்களுக்கும் ஆசிரிய பீடத்திலுள்ளவர்களின் நவீன ஓவியம் தொடர்பான ரசனையும் புரிதலும் ஈழத்து தமிழோவிய வளர்ச்சியில் முக்கிய மானதொன்றாயிற்று.

Karuna-pic2.jpg?resize=393%2C500

 மேற்கின் பாணி இந்தியாவிலும் மட்டுமல்ல சீனாவிலும்  ஓவியர்களிடத்தில் கலந்து கொண்டது. அதுபோலவே நவீன ஓவியங்களும் தென் இந்திய சஞ்சிகைகளில் பிரவேசிக்க எமது வாசகர்களின் புரிதலுடன்   எங்களது வார இதழ்களிலும் அது படிப்படியாக அரங்கேறியது.

வர்த்தக ஓவியம்

இதே வேளை வர்த்தக ஓவியங்கள் என்று ஒரு புதிய கலைவடிவத்தின் தோற்றம் ஓவியத்தின் அடுத்த பரிமாணமாகியது .

சிங்கள ஓவியர்கள் பற்றியவிவரணமான ”   டெலி துட” (டெலி -தூரிகை) என்ற தொடர்  தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சிக்கு நான் தயாரிப்பு உதவியாளனாக (ஓவியத்தில் ஆர்வமுள்ளவனாக இருந்தமையால் அதன் நெறியாளர் காமினி அபேய்கோன் -(இவரும்  இலங்கையின் சிறந்த ஓவியர்களில் ஒருவர்)- எனது விருப்பத்தின் பேரில் என்னையும் தமது தயாரிப்புப் பணியில் இணைத்துக்கொண்டார். அதன்போது பல ஓவியர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

சிலர் தாம் ரமணி மாஸ்டருடன் கற்றதாகவும் ரமணி ஒரு சிறந்த ஓவியர் ஆனால் அவர் வர்த்தக ஓவியத்துக்குள் தம்மை இணைத்துக்கொண்டுவிட்டார் என்று சொல்வார்கள். சிங்களத்தில் உள்ள சிலரின் பெயர்களை சொல்லி அவர்களை போல என்பார்கள்.

மரபு , நவீன ஓவியங்களின்  அப்பால் – வர்த்தக ஓவியம் என்று ஒன்று இவற்றுக்குச் சமாந்தரமாக கோடு போடத்தொடங்கியது .

கருணாவும் ஓவியமும்

Mark-Master.jpg?resize=500%2C706

மனித வரலாற்றுடன் இணைந்த ஓவியமும் சிற்பமும் மதங்களுடன் இணைந்தவை . சித்தன்னவாசல்,குகை ஓவியங்களும்  ஆசீவக  இந்தியாவின் துறவிகளுடையது என்றும் சைன சமயத்தினருடையது என்றும் இருவேறுபட்ட கருத்துகள் கொண்டவை .அஜந்தா  ஓவியங்களைப்  போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 – 1200 ஆண்டு பழமையானவை.

கத்தோலிக்க மதத்திலும்   ஓவியங்களும் சிற்பங்களும் நன்கு பிணைந்தவை. விபரங்கள் இங்கு அவசியமில்லை. இங்கு ஆலயச் சுருபங்களும் , ஆலயத்திலுள்ள படங்களும் , கிறிஸ்துவின் திருப்பாட்டினைக் காட்டும் 14 தலங்களும், ஆலயப் பத்திருப்புகளும் , சாளரக் கண்ணாடிகளின் வண்ணங்களும் ஓவியமாய் அவை சொல்லும் தகவலும்   கத்தோலிக்க ஆலயங்களில்முக்கியமானவை.

என் அன்புக்குரிய கருணா எனது நெருங்கிய உறவினர்.  அயலவர். அதனால் (தான்) எனது ஊரவர்.   எமது கரவெட்டி  அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலிகளில் திருப்பலிப் பீட உதவிப்பையனாகவும் (Alter Boy)திருச்  சிலுவைபாதை என்ற நிகழ்வு கிறிஸ்துவின் திருப்பாட்டு நாட்களில் ஆலயத்தில் நடைபெறும்போது 14 தல ங்களிலும் ஒவ்வொரு தலத்தை நோக்கி அசைகையில் சிலுவையை ஏந்திச் செல்லும் பையன்களில் ஒருவராகவும்

இருந்த நாட்கள்  நான் அவரை நினைக்கும்போது வண்ண அலைகளாய் வருவதுண்டு. ஒழுங்காக ஆலயப்பணிகளில் சிறுவயதில் ஈடுபடுவதில் ஆர்வம் மிக்க அவர் மிகவும்  பக்தியான கத்தோலிக்கக் குடும்பத்தில்  பிறந்தவர் அவர்.அவருடைய தந்தையார் வின்சென்ட்  பருத்தித்துறை கலட்டி  ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியவர். கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக (வாக்காளர்களின் அமோக ஆதரவுடன்) நீண்டகாலம் பணியாற்றியவர். கரவெட்டியில் பல கத்தோலிக்க   நாடகங்களை மேடையேற்றியவர். அண்மையில் பருத்தித்துறையில் வட்டாரக் கல்வியாதிகாரியாகப் பணியாற்றிய திரு துரைசாமி அவர்களை  சந்தித்தேன். அவுஸ்திரேலியாவிலிருந்து தமது சகோதரியின் மரணச்சடங்கில்

கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். எனது  தந்தையரின் நண்பர் அவர் என்ற வகையில் அவரிடம் என்னை அறிமுகம் செய்தபொழுது  “அப்பா போய்விட்டாரா என்ற  கேள்விக்கு அடுத்த கேள்வியாக “வின்சென்ட்  மாஸ்டர் போய்விட்டாரா ?” என்று கேட்டார். (இவரும்  “போவதற்கு’ விசா எடுத்த நிலையிலேயே காணப்பட்டார்) கல்விப்பணியிலும் கலைத்துறையிலும் நிருவாகத் திறமையிலும் முதன்மை பெற்ற ஒருவர் அமரர் வின்சென்ட்

கருணாவின் ஓவியங்களின் நிருமாணங்களிலும்

Sarinihar-Cover.jpg?resize=225%2C320

அப்பாத்திரங்களின் நெறிப்படுத்தலிலும் வின்சென்ட் மாஸ்டரின் நாடக இயக்குகையைக் காண்கிறேன். தாய் ரெஜினா ரீச்சர் பாடசாலையில் கதை சொல்வதற்கு மட்டுமன்றி எதனை விளக்குதற்கும் கரும் பலகையில் பட பட வெனப்  படம் வரைந்து விளக்கும் ஆளுமை மிக்கவர்.

கருணா எனது தங்கையுடன் படித்தவர். மிகவும் அமைதியானவர்.(அப்போ) . சிறு வயதில் பாடசாலையில் அந்த நாட்களிலேயே ஓவியவேளைகளில் மட்டுமல்ல “கைப்பணி ” எனப்படும் hand work இலும் தாமாகவே புதுமையாகச் செய்துவருவார் என நாம் அறிந்துள்ளோம். அக்காலத்தில்  வகுப்பு 1 இலிருந்து 5 வரை கைவேலை, ஓவியம், சங்கீதம் என்பன முக்கிய பாடங்கள் . எனது சகோதரி என்னை உதவியாகக் கொண்டு கைவேலைப் பொருட்கள் செய்து கொண்டு போவாள். “கருணா என்ன கொண்டுவருமோ தெரியாது ” என்ற எதிர்பார்ப்பு அவளிடம் இருக்கும்.

எனது தாயார் கருணாவின் சங்கீத ஆசிரியர் . கருணாவுக்கு சங்கீதத்திற்கு 10 (நூறுக்கு) புள்ளிகள் இட்டுவிட்டுவந்து “ரெஜினா (கருணாவின் அம்மா) என்ன நினைக்குமோ தெரியாது  கவலைப்படுவதை நான் கண்டுள்ளேன். ஆனால்  எங்களது குடும்ப உறவில் என் தாயாரின் சிறந்த ஆலோசனைக்குரிய நண்பியாக கருணாவின் தாயார் இருந்துள்ளார்..

கருணாவின் தாய்மாமன் மரியநாயகம் கரவெட்டியில் மட்டுமல்ல ஈழத்தின் புகழ்மிக்க ஓவியர்களில் ஒருவர். நீர் வண்ணங்களில் அவர் வரைந்த “காகமும் வடையும்”, நரியும் திராட்சைப் பழமும் “,சிங்கமும் முயலும்” எனது வீட்டில் இருந்த ஓவியங்கள்.

கேட்ட தாலாட்டு இசைக்குப்பிறகு நான் பார்த்த ஓவியங்கள் அவை என்பேன். இன்றைக்கும் அவை என் மனதில் நினைவில் உள்ளன.எனது ஓவிய ஆர்வத்தை அவை ஊட்டியிருக்கலாம் .

ஊரிலும் தனிப்பட்ட முறையில் ஓவியப்பயிற்சியை மரியநாயகம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். வன்னியிலும் கனடாவிலும் அவரது தூரிகை   கண்காட்சி வரை நீண்டுள்ளது.

மாற்கு மாஸ்டரின் ஓவியங்கள் கறுப்பையும் சிவப்பையும் அதிகமாக் கொண்டவை. அவர் வாழ்ந்த மண்,சூழல், உணர்வுகளின் மோதல்கள் யாவும் அவரின் வண்ணங்களில் பிரதிபலித்தன. ஓவியத்தில் கருமை என்பது வீரம், கிளர்ச்சி, உறுதி, வீரியம் என்பவற்றின்  வெளிப்பாடு ஆகும் . பனைமரத்தின்  கறுப்பு  உறுதியின் அடையாளம் எனப்படும்.

Vaalnthu-Paarkkalaam.-001.jpg?resize=654

கருணாவின் ஓவியங்களில் நான் பார்த்த அளவில் பசுமையை மலிந்து காண்கிறேன். கருணாவின் வீடு அமைந்த சூழல் கரவெட்டியில் நெல்லியடி என்ற நகரத்தின் தாழ்வாரம் எனலாம். பெரிய தோட்டத்தின் கரையோரமாக இது அமைந்துள்ளது. நெல்லியடியிலிருந்து மாலீசந்நதி வரைக்கும் ( அன்று) இத்தோட்டம் உள்ளதால் பெரிய தோட்டம் எனப்பட்டது. கருணாவின் வீட்டுக்குப் போவதானால் பச்சைப்பசேலென்ற மிளகாய், புகையிலை ,உருளைக்கிழங்கு செடிகளையும் மாடுகள் சுழற்றும் சூத்திரக் கிணறு , கிணற்றைக் காவல் காக்கும் காவலனான  துலா, பூவரசு மரம்கொண்ட ஆடுகால் என்பனவற்றைத் தினமும் தாண்டுதல் வேண்டும். தோட்டத்தின் வரம்பும் பாதையும் செம்மஞ்சள் கலந்த மண்  நிறம். கருணாவும்  அவரின் குடும்பமும்  இவற்றைத்தாண்டித்தான் அந்தோனியார் கோவிலுக்கு வரவேண்டும். கருணாவும் அவரது அம்மாவும் திரு இருதயக் கல்லூரிக்கு வரவேண்டும். அது கருணாவின் துளிர்ப்பருவக்  காலம்.

மறுபுறத்தில் நெல்லியடி லக்ஸ்மி திரையரங்கினூடாக வரும் ஒழுங்கை இவர்களின் பிரதான பாதை. இந்த ஒழுங்கையில் தினமும் படக்கதை வசனம் கேட்கும் இளசுகள் “சைக்கிளில் “ஒரு காலையும் மறு காலை  நிலத்திலும் வைத்து நிற்பதை  அந்த ஒழுங்கையைத்  தாண்டியவர்கள் இன்றும் மறக்க முடியாது. சைக்கிள் பழகுபவர்களை மறக்க முடியாது. நானும் பழகியிருக்கிறேன். லக்ஸ்மி தியேட்டர் ஒழுங்கையும் பெரிய தோட்டமும் அக்காலக் கரவெட்டிக் காதலர்களின்  குறு நேரச் சந்திப்பிற்கான பாதுகாப்புப் பிரதேசம். பல கடிதங்கள் அரங்கேறிய ஒழுங்கை அது. சில கடிதங்கள் அரங்கேற்றத்துடன் மட்டும் முற்றுப்பெற்றிருக்கலாம். நெல்லியடியிலிருந்து லக்ஸ்மித் தியேட்டர் ஒழுங்கையினூடாக வந்து பெரிய தோட்டத்தில் ஏறி அதனூடாக கொடிகாமம் பிரதான வீதியைத் தாண்டுவது விரைவான பயணத்திற்காக.

இவற்றைத் தாண்டுபவர்கள் அக்காலத்தில் கண்ட காட்சிகள்  கருணாவின் ஓவியங்களில் பதிவாகியுள்ளன. இவை அவரது மனபதிவாக இருக்கலாம். வான் கோ , போல் சிகன் போன்ற ஓவியர்கள் தாம் பார்த்தவற்றை அப்படியே வரையாமல் சிலமாற்றங்களை ஏற்படுத்தி பிற்காலத்தில்  சுதந்திரமாக வரைந்துள்ளனர்.

என்னவோ எதுவோ பார்த்ததை பின்னர் வரைந்தாலும் அலலது பார்த்துத்தான் வரைந்தாலும் அவற்றுக்கான  இலக்கண வரம்புகளை விட்டு விலகாமல் இருக்கும்போதே அவை ஓவியத்திற்கான பண்பைப் பெறுகின்றன.

மாற்கு மாஸ்டரிடம் நான் ஓவியம் பயிலச்சென்றபொழுது அவர் முதலில் என்னை இயல்பாக வரையச் சொல்லி எனது ஓவியத் திறமையை படம்பிடித்தார். அதன் பின்னர் முறையாக ஒரு மனிதனை அவன் அங்கங்களை வரைவதற்கான பயிற்சிகளைத் தந்தார். அது தொடர்ந்து நவீன ஓவியங்களை நாம் தேடும் ,சுவைக்கும் இயல்பினையும் எமது சுயமான கோடுகளையும் வர்ணத்  தேடல்களையும்  நம்முள் உருவாக்கின .

 கருணாவின் ஓவியங்களில் அவருக்கான கோடுகளையும் வண்ணங்களையும் தேடும் சுயத்தினைக்   காணமுடிகிறது. திரைப்படம் ஒன்றிக்கு எவ்வளவுக்கு பின்னணி இசை “ரீ ரெக்கோர்டிங்கில் ” தேவையில்லையோ அதுபோலவே   ஓவியங்களிலும் தேவையற்ற கோடுகளின் தேவையென்பது அவசியமற்றது என்பதை கருணாவின் படங்களில் காணமுடிகிறது. கருணாவும் தமது  ஓவியத்தில் தெளிவான அளவான மெல்லிய குறுகிய கோடுகளை கவனமெடுத்து வரைந்துள்ளார்.

கருணாவும் டிஜிட்டலும் 

தொழில்சார் ஆளணி  முறைகளில்  தவிர்க்கப்படமுடியாத தேவைகளினால் டிஜிட்டல் வடிவ அமைப்பாளர்களின்  நுழைவு இதழியற்  துறையில் 90 களின் பின்னர் இலங்கையில் ஆரம்பித்தது.

viyooham-001.jpg?resize=774%2C1024

கணினி வடிவ அமைப்பு சற்றுத்  தெரிந்தவர்கள் எல்லோரும் டிஜிட்டல் வடிவமைப்பாளர் ஆக பத்திரிகைகளில் நுழைந்தனர்.   தடி எடுத்தவன் எல்லாரும் தண்டக்காரனாவது என்பது   டிஜிட்டல் வடிவமைப்புத் துறையிலும் வந்தது .

இதனால்  டிஜிட்டல் துறையின் வருகை ஓவியத்துறையை வீழ்த்திவிடுமோ என்ற அச்சம் 90 களில் ஓவியத்துறையில் ஏற்பட்டத்   தொடங்கியது. இயல்பாகவே திறமை வாய்ந்த ஓவியர்களும் இந்த டிஜிட்டல் முறையினால் சோம்பேறிகளாகி  தமது ஆளுமையை இழப்பார்களோ என்ற விமர்சனக்கருத்துகளும் வந்தன.

கருணாவின் வளர்ச்சி இதற்கு நல்ல உதாரணம் என்பதை அவர் 1998 இல் வரைந்த ஒரு அட்டைப்படம் மூலம் புரிந்து கொள்ளலாம்.

மூத்த வானொலி தொலைக்காட்சி மற்றும் நாடக இயக்குனர் திரு பி  விக்னேஸ்வரன்  எழுதி 1998 இல் கனடாவில் வெளியிட்டிருந்த வானொலி நாடாகமான “வாழ்ந்து பார்க்கலாம் ” என்கிற புத்தகத்தின் அட்டைப்படத்தை  டிஜிட்டல் மூலம்  வரைந்த கருணாவிடம் தொடர்ந்தும் டிஜிட்டல் தனது ஆட்டத்தைக் காட்டமுடியவில்லை  என்பதை அண்மைக்காலமாக அவர் வரைந்த ஓவியங்கள் காட்டுகின்றன.

கருணா போன்ற இயற்கையான ஆளுமை  கொண்ட ஓவியர்களிடம் டிஜிட்டல் செல்லும்போது அவர்களது ஓவியம் டிஜிட்டலை வெல்லும் என்ற நம்பிக்கையை கருணா எமக்குத் தந்துள்ளார் .

கருணாவின்  இந்த அடி ஈழத்து ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் பரிமாணம் மட்டுமல்ல ! பரிணாமமுமே!

 

 

http://globaltamilnews.net/2019/13647/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூரிகையொன்று விடை பெறுகின்றது!

ஆழ்ந்த அஞ்சலிகள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓவியர் கருணா

7.png

ருணா, ஈழத்தின் பிரபல்யம் வாய்ந்த ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவன். அவர் எப்போதும் ஓவியங்களோடும், புகைப்படங்களோடும், வரைகலைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தவர்.  கருணாவை எப்போது முதன்முதலில் சந்தித்தேன் என இப்போது ஞாபகமில்லை.  ஆனால் அவரது அழைப்பின்பேரில் அவரது பழைய அலுவலகம் இருந்த டொன் மில்ஸிற்குச் சில தடவைகள் சென்றிருக்கின்றேன். அப்போதுதான் அவர் இத்தாலிக்குப் போய்விட்டு வந்து அங்கு எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக விபரித்துக்கொண்டிருந்தார்.  பிறகு எனது முதலாவது கவிதைத் தொகுப்பிற்குக் கருணாவின் ஓவியத்தைப் பாவிக்க விரும்பி அவரிடம் சென்றிருக்கின்றேன். அவர் சில ஓவியங்களை மனமுவந்து  தந்து எதையும் பாவித்துக்கொள்ளலாம் என அனுமதி தந்திருந்தார். எனினும் அதை அச்சாக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் நிகழாமல் போயிருந்தது.
 

1.jpg

கருணாவை எங்கு சந்தித்தாலும் புறச்சூழல் எவ்வாறு இருந்தாலும் ஓவியங்கள்/புகைப்படங்கள்/புதிய தொழில்நுட்பங்கள் பற்றி உடனேயே உரையாடத் தொடங்கிவிடுவார். ஆம்ஸ்டடாம் போய் வான்கோவின் ஓவியங்களைப் பார்த்துவிட்டு வந்து நான் ஒரு கட்டுரையாக 'அம்ருதா'வில் எழுதியபோது  மனம் மிகுந்து  பாராட்டியிருக்கின்றார். நம்மிடையே எவரும் ஓவியங்களையோ,  அச்சுப் பதிப்புக்களில் வடிவமைப்புக்கள் பற்றியோ அவ்வளவு எழுவதில்லை, உங்களைப் போன்றோர் இவை பற்றி அடிக்கடி எழுதவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு ஓவியங்களை/மியூசியங்களைத் தேடிப் பார்ப்பதில் ஆர்வமிருந்தாலும், அவற்றை எழுதிப் பார்க்கவேண்டுமென்கின்ற உற்சாகத்தைத் தந்தவர்களில் ஒருவராக கருணாவைச் சொல்லவேண்டும்.
 

2.jpg

கருணாவின் சடுதியான மரணம் அதிர்ச்சியானது மட்டுமில்லை இந்த வயதிற்குள் நிகழ்ந்திருக்கக்கூடாதெனவே மனம் அவாவுகிறது. நம்மிடையே இவ்வாறான ஓவியங்கள்/புகைப்படங்கள் போன்றவற்றில் உயரங்கள் மேலேறிப்போனவர்களும், அவற்றின் மீது கறானான பிடிவாதங்கள் உடையவர்களும் மிக அரிதாகவே இருப்பார்கள். கருணாவைப் போலத் திறமையின் ஆழத்துக்குச் செல்வது எல்லோராலும் இயல்வதுமில்லை. அவரைப் போல ஒருவர் மறையும்போது அந்த இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான விடயமுமல்ல. இவ்வாறான திறமைகள் கனிந்து வர நீண்ட காலம் எடுக்கும், மேலும் இவை அடிக்கடி நிகழ்ந்துவிடுபவையும் அல்ல.

வரை ஒருவகையில் கலை மனதோடு கரைந்துகொண்ட குழந்தை எனச் சொல்லலாம். அநேகவேளைகளில் அவர் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு யோசித்ததுமில்லை. ஏ.ஜே கனரட்னவையைப் போல, பிரமிளைப் போல கருணா அண்ணாவும் தனக்கான உலகில் ஓவியங்களோடும், புகைப்படங்களோடும், வடிவமைப்புக்களோடும் தனித்து வாழ்ந்தவர். கனடாவில் அவரின் வடிவமைப்புப் பங்களிப்பின்றி வந்த சிற்றிதழ்கள்/பத்திரிகைகள் என்பவை மிகக் குறைவென்றே சொல்லவேண்டும்.
 

4.jpg

கருணா புகைப்படங்களை அற்புதமாக எடுப்பார். ஆனால் அவரிடமிருந்து புகைப்படங்களை பெற்றுக்கொள்வதுதான் கடினமென்று நண்பர்களிடையே பிரபல்யம் வாய்ந்த கதைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு நிறையப் புகைப்படங்களை அனுப்பியிருக்கின்றார். நான் முதன்முதலாக  நாடகமொன்றை எழுதி நெறியாள்கை செய்தபோது, பயிற்சி நடந்த ஒருநாளில் தானாகவே அங்கே வந்து புகைப்படங்களை எடுத்து, நாங்கள் கேட்காமலே போஸ்டர்களைக் கூட எங்களுக்காக வடிவமைத்துத் தந்தவர்.

தனது படைப்புக்கள் பேசட்டும், தான் மறைவில் நிற்போமென தன்னை அநேகம் வெளிப்படுத்தாத ஒருவர் கருணா என்பதாக எப்போதும் அவரை நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.


(நன்றி: 'அம்ருதா' ‍ சித்திரை, 2019)

 

http://djthamilan.blogspot.com/2019/05/blog-post.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.