Jump to content

அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமாயின் சிங்களம் கற்க வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

52759595_2126751190744535_1143293502189207552_n.jpg?_nc_cat=100&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=3efaaa96d29d669845d9b110ecb7b4f6&oe=5CDC9DEE

எதிர்காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

கொழும்பில் இன்று நடைபெற்ற மொழிக்கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

 

”மொழிகளைக் கற்போம், மனதை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

கொழும்பு முகத்துவாரத்திலுள்ள நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வடக்கு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.madawalaenews.com/2019/02/blog-post_117.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கற்றுக்கொண்டு சிங்களவரும், தமிழர் பகுதியில் வேலை பெறுவது தெரியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஐயா தமிழ் சனம் சிங்களம் கற்கட்டும், சிங்கள சனம் தமிழ் கற்கட்டும்!
சிங்கள தாதியர்கள் மிகுந்த மனிதாபிமானத்தோட பணியாற்றுவதை பலரும் கூற கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிலை சிங்களம் மட்டும்தான் அரசகரும மொழி எண்டதை ஒரு தமிழர் மறைமுகமாக உறுதிப்படுத்துறார்.....
தமிழனுக்கு எதிரி சிங்களம் இல்லை. பக்கத்து வீட்டு குப்பனும் சுப்பனும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறிலங்காவிலை சிங்களம் மட்டும்தான் அரசகரும மொழி எண்டதை ஒரு தமிழர் மறைமுகமாக உறுதிப்படுத்துறார்.....
தமிழனுக்கு எதிரி சிங்களம் இல்லை. பக்கத்து வீட்டு குப்பனும் சுப்பனும் தான்.

சொரிலன்காவில் அரசியல்வாதியாய் இருக்க ஒரே ஒரு தகுதி இருந்தால் காணும் அது நிலைமை உண்மை புரியாமல் உளறி கொட்டி பிரச்சனையை பெரிதாக்குவது மற்றபடி கஞ்சா கடத்தல் பவுடர் அடித்தல் எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்யும் நன்மை என்று நினைக்கிறார்கள் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

இலங்கையில் 1987-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின் அங்கமாக தமிழும் அரசகரும மொழியானது. அதன்படி சிங்களம், தமிழ் இரண்டும் அரசகரும மொழிகள்.

ஆங்கிலம் இணைப்பு மொழி என அறிவிக்கப்பட்டது.

அது அரச நிறுவனங்களில் முறையாக பின்பற்றுப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்காகவே அரசகரும மொழிகள் ஆணைக்குழுவும் 1991-ம் ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

-BBC Tamil-

Link to comment
Share on other sites

9 hours ago, colomban said:

எதிர்காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது பலவருடங்களின் முன்னர் கொண்டுவந்த சட்டம். 2020 இன் பின்னர் ஏதாவதொரு நிரந்தர அரச நியமனம் பெறும் அனைவருக்கும் க.பொ.த. சாதாரண பரீட்சை மட்டத்திலான இரண்டாம் மொழி (தமிழ் / சிங்களம்) புலமை மிக அவசியம்.

சிங்களவர்கள் பலர் ஏற்கனவே கண்துடைப்பு தமிழ் மொழி சான்றிதழ்களை பெறும் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு அரச கல்வி நிறுவனங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ்வளவு காலமும் பொறுக்கி வேலை செய்துவந்த குறித்த துறைசார் அமைச்சர் மனோ கணேசனுக்கு இப்போது தான் இது தெரியவந்துள்ளது. தமிழர்கள் சிங்கள மொழி சான்றிதழ்களை பெறும் ஏற்பாடுகள் இன்னமும் தேவையான அளவு செய்யப்படவில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.