Jump to content

மறப்போம் மன்னிப்போம் கோரிக்கையும் யதார்த்தமும் பி.மாணிக்கவாசகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறப்போம் மன்னிப்போம் கோரிக்கையும் யதார்த்தமும் பி.மாணிக்கவாசகம்

February 23, 2019
marapom.jpg?resize=800%2C500

மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதாக அது அமைய வேண்டும். மனம் திருந்தாமல் மன்னிப்பு கோருவதை மனக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் ஏற்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

வடபகுதிக்கு அரச முறையாகப் பயணம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம். இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். உண்மையான மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்ட அழைப்பாக இதனைக் கருத முடியவில்லை.

ஏனெனில் மறந்து, மன்னிக்க வேண்டிய விடயங்களில் அல்லது சம்பவங்களில் என்ன நடந்தது, யார் யாரெல்லாம் பங்கேற்றிருந்தார்கள் என்பது தெரியாது. அவற்றுக்கு யார் பொறுப்பு என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. உண்மை கண்டறியப்பட்டு, நிலைநிறுத்தப்படவுமில்லை.

என்ன நடந்தது என்ற உண்மையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிந்திருப்பதனால்தான், நடந்தவைகளை மறப்போம் மன்னிப்போம் என்று கூறினாரோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது. மனித உரிமைகளும், மனிதாபிமான சர்வதேச சட்டங்களும் மீறப்பட்ட மண்ணில் நின்று பாதிக்கப்பட்ட மக்களை |நோக்கி அழைப்பு விடுத்திருப்பதனால் இந்த சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் நடந்த உண்மைகளை அறிய வேண்டிய அவசியமில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அந்த மர்மங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசிமில்லை. அவற்றைப் அப்படியே புறந்தள்ளிவிட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம், என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு. பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அவர் விடுத்துள்ள இந்த அழைப்பை சாதாரணமான அரசியல் பிரசாரமாகக் கொள்ள முடியாது. ஏனென்றால், நாட்டின் பிரதமர் என்ற ரீதியிலும், நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐநாவினதும், சர்வதேச நாடுகளினதும் வற்புறுத்தல் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அவருடைய அரசாங்கம் ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றது.

அந்தப் பிரேரணையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்குரிய பொறிமுறைகளை நிறுவிச் செயற்படப் போவதாக அரசாங்கம் ஐநா மன்றத்திடமும், சர்வதேச நாடுகளிடத்திலும் உறுதி வழங்கி, அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக உண்மையைக் கண்டறியும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காக ஓ எம் பி என்று அழைக்கப்படுகின்ற காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு ஏற்கனவே நிறுவி, செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. முதலில் இரண்டு வருடங்கள் கால அவகாசத்தைப் பெற்றிருந்த அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை, கோரி பெற்றிருந்தது.

அந்த கால அவகாசமும் முடிந்துவிட்டது. ஆனால், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கு இன்னும் எத்தனையோ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த நிலைமையில் மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு சாதகமான நிலைமை உருவாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இத்தகைய ஒரு பின்னணியில்தான், மறப்போம் மன்னிப்போம் வாருங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வைரலாகியுள்ள அழைப்பு

மறப்போம் மன்னிப்போம் வாருங்கள், என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு குறித்து கருத்து தெரிவிக்காதவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு நாளடாவிய ரீதியில் அது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. எதிர்த்தும், ஆதரித்தும், கண்டித்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறப்போம் மன்னிப்போம் என்றதன் மூலம் நாட்டில் நடக்கக் கூடாதவைகள் நடந்தேறியிருக்கின்றன என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அதற்கான ஒரு வாக்குமூலமாகவே அந்த இரண்டு சொற்களையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார் என்றுபேரினவாதத் தரப்பினர் மத்தியில் முக்கியமாகக் கருதப்படுகின்றது. இதனால், அவருக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுந்திருப்பதையும் காண முடிகின்றது.

ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைத்து, இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டியிருப்பதாக குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியவருமாகிய கோத்தாபய ராஜபக்ச, அவர் மீது சீறிப் பாய்ந்துள்ளார்;. இராணுவத்தினர் குற்றச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை. அவர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்திருந்தார்கள் என குறிப்பிட்டுள்ள கோத்தாபய,

இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற அபாண்டமாகப் பொய்யுரைத்துள்ள ரணில் விக்கிரமசிங்கவை சிங்கள் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் தேர்தலில் உரிய முறையில் அவரை அவர்கள் தண்டிப்பார்கள் என்று சாபமிடும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் முப்படைகளையும் சேர்ந்த சில அதிகாரிகளும், சிப்பாய்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டு பேருக்கு மரண தண்டனையும் வேறு ஐந்து பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்று உழைத்த முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ளார்.

முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இன்னும் ஒரு படி மேலே சென்று அரச படைகளை எதிர்த்துத் தாக்குதல்கள் நடத்திய விடுதலைப்புலிகள் மன்னிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும், நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதில் சிங்கள மக்கள் தங்களுடைய கடப்பாடுகளை சரியான முறையில் நிறைவேற்றியுள்ளனர் என்றும், தமிழர் தரப்பினரே பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார். நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாட்டில் பந்து தமிழ் மக்கள் பக்கமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கு, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும், பிரபாகரனின் பிடியில் பணயக்கைதிகளாக இருந்த தமிழ் மக்களை விடுவிப்பதற்கு அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற இரண்டு சிந்தனைகள் இருந்ததாகவும், தங்களால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது யோசனை ஏற்கப்பட்டு, பிரபகாரன் தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, யுத்தத்தில் இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டிருப்பதனால் முன்னேறிச் செல்வதற்கு மறந்து மன்னித்துச் செயற்பட தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பங்கிற்கு இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடத் தவறவில்லை. இராணுவத்தினர் குற்றம் புரிந்திரந்தாலும்கூட, அவர்களைத் தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டேன் என்று அவர் அழுத்தி உரைத்துள்ளார். நாட்டைப் பாதகாத்த தியாகிகளாகிய படையினரை, தான் அதிகாரத்தில் இருக்கும் வரையில் பாதுகாப்பேன் என்று அவர் உறுதிபட கூறியிருக்கின்றார்.

இத்தகைய கருத்துக்கள் இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம்யெறவில்லை. அத்தகைய குற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவைகள் தமிழர் தரப்பினாலேயே புரியப்பட்டன என்று நிலைநிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இறுதி யுத்தத்தின்போதும்சரி, அதற்கு முந்திய காலத்திலும்சரி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை அடித்து நொறுக்குவதில் தீவிரமாக இருந்த அரசாங்கங்களினாலும், அரச படைகளினாலும், இனப்படுகொலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன, போர்க்குற்றச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதற்கான சம்பவங்கள் பல அரங்கேற்றப்டப்பட்டிருக்கின்றன. இதனை வெறும் வாய்ப்பேச்சுக்களினாலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் நல்லுறவை வளர்த்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான போக்குகளினாலும் ஒளித்து மறைப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. சந்தர்ப்பங்கள் கோட்டைவிடப்பட்டுள்ளன

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்து, அதனை வளர்த்துக் கொள்வதில், நல்லாட்சி அரசாங்கம் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் கோட்டைவிட்டுள்ளது. இதனால் தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை இழந்துள்ளார்கள். அரசாங்கத்தினால் தங்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்கமாட்டாது என்ற காரணத்தினால், அவர்கள் சர்வதேசத்தை நம்பியிருக்கின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.

நல்லாட்சியை உருவாக்குவதற்கு உறுதுணையாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ஒத்துழைத்துச் செயற்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பி;ன தலைவர்களும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருப்பதை வெளிப்படையாகக் கூறத் தொடங்கிவிட்டார்கள். யுத்த மோதல்களில் ஈடுபட்ட இரு தரப்பினருமே குற்றம் புரிந்திருக்கின்றார்கள் எனவே மறப்போம் மன்னிப்போம் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றிற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சீற்றத்தோடு பதிலளித்துள்ளார்.

மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ரணில்  விக்கிரமசிங்கவின் கூற்று குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமருடைய கருத்தை நிராகரித்துள்ள அவர் இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் புரிந்தனர் என்று ஒற்றைச் சொல்லின் மூலம் தப்பிவிட முடியாது என்றும், மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். ஐநா தீர்மானங்களின்படி உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினராலும் இறுதி யுத்தத்தின்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. எனவே, மறப்போம் மன்னிப்போம் என்று கூறியுள்ளதன் மூலம், இராணுவத்தினரால் யுத்தக் குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை பிரதமர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த நான்கு வருடங்களாக பிரதமராக இருந்து வருகின்ற ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக்காண்பதிலும் காட்டி வந்துள்ள அக்கறையும் கரிசனையும், அவர் எத்தகைய அரசியல் போக்கைக் கொண்டிருக்கின்றார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பதற்கும் உகந்த அரசியல் சூழலை தேர்தல்களின் ஊடாகத் தமிழ்மக்களே உருவாக்கியிருந்தார்கள். அரசியல் ரீதியாக அந்த நன்றிக்கடனைச் செலுத்த வேண்டிய பொறுப்பு அவரைச் சார்ந்திருந்தது. இன்னும் சார்ந்திருக்கின்றது. ஆனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டாலும்கூட, ஜனநாயக வழிமுறையைக் கடைப்பிடிக்கின்ற ஓர் அரசியல் தலைவர் என்ற ரீதியிலும்கூட அவர் தனது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட்டதாக, அவருடைய நடவடிக்கைகள் அமையவில்லை. தமிழ்; மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளைச் சிதறடிப்பதற்கே அவருடைய நடவடிக்கைகள் துணை புரிந்திருக்கின்றன.

தேர்தலே இலக்கு

தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது இழந்துள்ள நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் பிரதமரினால் மேற்கொள்ளப்படவில்லை.  மாறாக, வரப்போகின்ற தேர்தலை இலக்கு வைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துணையாகக் கொண்டு தமிழ் மக்களின் ஆதரவைக் கட்டி எழுப்புவதற்காகவே மறப்போம் மன்னிப்போம் என்ற அவருடைய கருத்து வெளிப்பட்டிருக்கின்றது.

வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயமாக வருகை தந்திருந்த அவர் கவர்ச்சிகரமான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தீர்மானங்களையும், உத்தேச நடவடிக்கைகளுக்கான கருத்தக்களையுமே அவர் வெளியிட்டிருந்தார். வடமாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகள் குறித்து, மறதியாகக் கூட அவரால் எதனையும் கூற முடியவில்லை.

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு;ளள தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்காக வீதியோரத்தில் அமர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்ற கேப்பாப்பிலவு மக்களுடைய பிரச்சினைகள் குறித்து அவருடைய கவனம் திரும்பவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் அந்தந்த மாவட்டங்களில் வீதியோரப் புழுதியில் குளித்த வண்ணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்ற போராட்டங்கள் பற்றி அறிந்திருப்பதாகக் கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை.

இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் அடாத்தாக உட்புகுந்து புத்தர் சிலைகளை நிறுவுகின்ற பௌத்த மதரீதியான ஆக்கிரமிப்பினால் வடபகுதியில் கொதிப்படைந்துள்ள நிலைமைகள் குறித்து அவர் கவலைகூட தெரிவிக்கவில்லை.

வனபரிபாலன திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கரையோர அபிவிருத்திக்குப் பொறுப்பான திணைக்களம் போன்ற அரச பொறிமுறைகள் காலம் காலமாக மக்கள் குடியிருந்து வந்த காணிகளுக்கு அத்துமீறி உரிமை கொண்டாடுவதும், அவற்றில் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை இம்சைக்குள்ளாக்குவதும் அவருக்குத் தெரியாத விடயங்களாகவே இருக்கின்றன.

மறப்போம் மன்னிப்போம். . . . . . . . . . 

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். காணி உரிமை, தொழில் உரிமை, வாழ்வாதார உரிமை, வாழ்வியல் இருப்புக்கான உரிமை தொடர்பிலான பலவேறு நிலைமைகளில் அடிப்படை உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள ஒரு சூழலில், பொருளாதார அபிவிருத்தி பற்றி பேசுவதும், பொருளாதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் குறிதது வசீகரமான அறிவித்தல்களை வெளியிடுவதும் எந்த வகையில் மக்களுடைய மனங்களை வென்றெடுக்க உதவும் என்பது தெரியவில்லை.

இத்தகைய நடவடிக்கைகள் மொத்தத்தில் யத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்னரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. போர்க் குற்றங்கள் புரியப்பட்டிருக்கின்றன என்பதை உண்மையிலேயே உணர்ந்து, அவற்றுக்குப் பிராயச்சித்தம் காணும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரங்க தானே வலிந்து அவற்றை ஏற்றுக்கொண்டு, மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரும் வகையில் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை வெளியிட்டிருப்பதாக ஒரு பேச்சுக்காக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் இத்தகைய சம்பவம் முன்னரும் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய வன்முறைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என சுட்டிக்காட்டி, அதற்காக பல வருடங்களுக்குப் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

அந்த வன்முறைகள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருக்கின்றார் என்றுகூட கொள்ளலாம்.

அத்தகைய எண்ணப்பாட்டிற்கு அமைவாக நல்லாட்சி அரசாங்கத்தில் உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதை இழுத்தடித்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் அவர்களுடைய பிரச்சினைகளை அதிகரித்து அவர்களை இம்சைகளுக்கு உள்ளாக்கியுள்ள இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வருங்காலத்தில் யார் மன்னிப்பு கோரப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

அது மட்டுமல்லாமல், காலம் காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்ற தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற அடக்குமுறைகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் அவ்வப்போது மறப்போம் மன்னிப்போம் என்று மன்னிப்பு கோரிச் செயற்படுவது எந்த வகையில் நியாயமானது என்பது தெரியவில்லை.

இது நாங்கள்தான் பெரும்பான்மையானவர்கள், அதிகாரம் உடையவர்கள், நாங்கள் அவ்வப்போது அப்படித்தான் நடந்து கொள்வோம். நீங்கள் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து எங்களுடன் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அடாவடித்தனமான அன்புரிமையோடு கூறுகின்ற கூற்றாகவே மறப்போம் மன்னிப்போம் என்பதைக் கருத வேண்டியுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/114274/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.