Jump to content

கவிதையோ கவிதை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையோ  கவிதை   

 

கதையோ கவிதையோ எதுவோ ஒன்று 

இணையம் 21 க்கு இயற்றிடலாம்  என்று 

தண்டோரா போட்டு விட்டனர் இன்று 

பண்புடன் ஏற்று அதை செப்புதல் நன்று 

 

மண்ணில் விதையிடில் மரம் முளைக்கலாம் 

மரத்தின் கிளையில் கவிதை  பறிக்கலாமோ  

மயங்கிய மதியை மனசுக்குள் தேற்றி 

அறிவெனும் ஒளியை அகலினில் ஏற்றி 

ஒரு கை பார்க்க புடைத்தது நெற்றி 

கொப்பியடித்தால் கிடைத்திடும் வெற்றி 

 

காலம் கடந்த பட்டுக்கோட்டை  பாடல்களை 

பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ 

காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை 

கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ  

அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை 

வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ  

வைரமுத்துவின்  சத்தான செய்யுள்களை 

கொத்தாக உருவி கெத்தாய் விடலாமோ 

நா.முத்துக்குமாரின் நயமான கவிதைகளை 

நசுக்கிடாமல் சுட்டு அரங்கேற்றிடலாமோ 

 

எண்ணியெண்ணி ஏங்கித் தவிக்கிறேன் 

என் தூக்கம் கேட்டு எதுவும் எழுதிலேன் 

ஆங்கிலக் கவிதைகளை அலேக்காய் துக்கலாம்தான் 

அதிலொரு பிரச்சினை எனக்கு அம்மொழியும் அரைகுறை.....!

 

யாழ் இணையம் அகவை 21.

ஆக்கம் சுவி.......!

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

35 minutes ago, suvy said:

 காலம் கடந்த பட்டுக்கோட்டை  பாடல்களை 

பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ 

காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை 

கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ  

அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை 

வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ  

வைரமுத்துவின்  சத்தான செய்யுள்களை 

கொத்தாக உருவி கெத்தாய் விடலாமோ 

நா.முத்துக்குமாரின் நயமான கவிதைகளை 

நசுக்கிடாமல் சுட்டு அரங்கேற்றிடலாமோ

சுவி அண்ணாவின் பயண அனுபவங்ளில் சுவாரஸ்யமான ஏதேனும் ஒன்றை சிறு கவிதையாக வடிக்கலாமே! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தழுவல் கவிதையில் நழுவுதல் நன்றே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா என்னால் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. கவிதை எழுதுவது தொடர்பாக எழுதிய வரிகள் சூப்பர். கவிதையிலும் உங்களால் மற்றவர்களின் இதழ்கடையில் முறுவலை வரவைக்கலாம் என்பதற்கு இந்தப்பதிவு நல்ல சான்று. மென்மேலும் எங்களுக்குள் மந்தகாசம் பூக்கும் கவிவரிகளைப்படைக்க வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுத் வெளிக்கிட்டு ..  மூளையைக்  கசக்கி யோசித்து இருக்கிறீர்   களே ....நல்ல குசும்பு தான்  இது தான் நம்ம சுவி யர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/24/2019 at 5:53 AM, suvy said:

ஆக்கம் சுவி.......!

சுவி நீங்கள் ஒரு ஒலிம்பிக் தங்கப்பதக்க ஆள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கை பாக்கிறதெண்டுதான் இருக்குறியள். 😛

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/24/2019 at 12:33 PM, மல்லிகை வாசம் said:

சுவி அண்ணாவின் பயண அனுபவங்ளில் சுவாரஸ்யமான ஏதேனும் ஒன்றை சிறு கவிதையாக வடிக்கலாமே! 😃

எழுதலாம்தான்...... இதுதான் எழுத வேண்டும் என நினைக்கும் போது எதுவும் வர மாட்டேங்குது மல்லிகை வாசம்.......!  😁

On 3/2/2019 at 3:46 PM, கிருபன் said:

தழுவல் கவிதையில் நழுவுதல் நன்றே!

😁  😁  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்.....!   👍

On 3/2/2019 at 4:43 PM, வல்வை சகாறா said:

சுவி அண்ணா என்னால் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. கவிதை எழுதுவது தொடர்பாக எழுதிய வரிகள் சூப்பர். கவிதையிலும் உங்களால் மற்றவர்களின் இதழ்கடையில் முறுவலை வரவைக்கலாம் என்பதற்கு இந்தப்பதிவு நல்ல சான்று. மென்மேலும் எங்களுக்குள் மந்தகாசம் பூக்கும் கவிவரிகளைப்படைக்க வாழ்த்துகள்

அலுத்து களைத்து இருக்கும்போது இப்படி ஏதாவது குளறுபடி நடக்கும் சகோதரி........ 😁

Link to comment
Share on other sites

53 minutes ago, suvy said:

எழுதலாம்தான்...... இதுதான் எழுத வேண்டும் என நினைக்கும் போது எதுவும் வர மாட்டேங்குது மல்லிகை வாசம்.......!  😁

உண்மை தான் சுவி அண்ணா. எழுத வேண்டும் என்று அமர்ந்தால் ஒன்றும் வராது. வேறு ஏதாவது அலுவல்களில் இருந்தால் சில ஐடியாக்கள் எட்டிப்பார்க்கும்; பிறகு வந்து ஆறுதலாக அமர்ந்து எழுதுவம் என்றால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான்! 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.