Jump to content

இந்தியாவின் மிரட்டலுக்கு அடிப்பணிய போவதில்லை: பாகிஸ்தான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1590ae5c523d2f9f7d594c8e61820103_XL-1-720x450.jpg

இந்தியாவின் மிரட்டலுக்கு அடிப்பணிய போவதில்லை: பாகிஸ்தான்

இந்தியாவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணிய போவதில்லை என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி (Shah Mehmood Qureshi)  தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “பாகிஸ்தான் அமைதியான நாடு, நாம் அமைதியை விரும்புகின்றோம். ஆனால் இந்தியா எம்மை அச்சுறுத்தி மண்டியிட வைக்க நினைத்தால் அந்த மிரட்டலுக்கு நாம் ஒரு போம் அஞ்சபோவதில்லை. இதனை தெளிவாக இந்தியாவுக்கு கூறி கொள்ள விரும்புகின்றேன். போர் தொடுப்போம் என மிரட்டினால் அதற்கு நாம் அஞ்சப்போவதில்லை.

எனவே, இந்தியா எம்மை பற்றிய குறுகிய எண்ணத்தை மனதில் இருந்து எடுக்க வேண்டும். பாக்கிஸ்தானின் ஆயுதப் படைகள், பாக்கிஸ்தானின் அரசியல் தலைமை, பாக்கிஸ்தானின் அரசியல் கட்சிகள், இவை அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கு பக்க பலமாக இருக்கின்றன” என இவ்வாறு கூறினார்.

இதேவேளை, புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக நேற்று மாலை கராச்சியில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இந்தியாவின்-மிரட்டலுக்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.