Jump to content

ஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்!

46.jpg

திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், திரைக் கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆஸ்கர் விருதுகளைத்தான். 91ஆவது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 25) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. 2009 -2011 காலகட்டத்தில் அவர் LGBT சமூகத்தவர்களை தரக்குறைவாகப் பேசியது கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் பரவியது. இது தொடர்பாக சர்ச்சை உருவான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதோடு ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தான் இந்த முறை தொகுத்து வழங்கவில்லை என அறிவித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொகுப்பாளரின்றி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிறந்த நடிகருக்கான விருதை பொஹிமியன் ராப்சோடி படத்தில் நடித்த ரமி மாலிக் வென்றார். சிறந்த இயக்குநருக்கான விருதை ரோமா படத்தின் இயக்குநர் அல்போன்சோ குவாரன் வென்றார்.

பீட்டர் ஃபெர்ரலி இயக்கிய க்ரீன் புக் திரைப்படம் 3 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ப்ரியான் சிங்கர் இயக்கிய பொஹிமியான் ராப்சோதி திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்த பிளாக் பேந்தர் திரைப்படம் ஏழு பிரிவுகளில் போட்டியிட்டு சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

46a.jpg

இந்த நிகழ்ச்சியில் சிறந்த குறு ஆவணப்படத்துக்கான விருது பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசும் படமாக இந்த ஆவணக் குறும்படம் தயாராகியுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் படத்திற்காக இயக்குநர் ரைகா செஹ்டாப்சி, மெலிசா பேர்டன் ஆகியோர் விருதினைப் பெற்றனர்.

2019 ஆஸ்கர் விருதுகள் பட்டியல்

சிறந்த திரைப்படம் - க்ரீன் புக்

சிறந்த இயக்குனர் – அல்போன்சோ குரான் (ரோமா)

சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மன் (தி ஃபேவரிட்)

சிறந்த நடிகர் - ரமி மலிக் (பொஹிமியன் ராப்சோடி)

சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங், (If Beale Street Could Talk)

சிறந்த துணை நடிகர் – மஹர்ஷாலா அலி (க்ரீன் புக்)

சிறந்த வெளிநாட்டுப் படம் – ரோமா (மெக்சிகோ)

சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன் (இன் டு தி ஸ்பைடர் - வெர்ஸ்)

சிறந்த திரைக்கதை - க்ரீன் புக்

சிறந்த தழுவல் திரைக்கதை – பிளாக்லான்ஸ்மேன்

சிறந்த பின்னணி இசை – ப்ளாக் பேந்தர்

சிறந்த பாடல் – ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த ஆவணப்படம் – ஃப்ரீ சோலோ

சிறந்த குறு ஆவணப்படம் – பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – ஸ்கின்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாவோ

சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குரான் (ரோமா)

சிறந்த தயாரிப்பு – ப்ளாக் பேந்தர்

சிறந்த ஆடை வடிவமைப்பு– ப்ளாக் பேந்தர்

சிறந்த ஒப்பனை– வைஸ்

சிறந்த ஒலித் தொகுப்பு– பொஹிமியான் ராப்சோதி

சிறந்த ஒலிக் கலவை– பொஹிமியான் ராப்சோதி

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்

சிறந்த படத்தொகுப்பு – பொஹிமியான் ராப்சோதி

 

https://minnambalam.com/k/2019/02/25/46

Link to comment
Share on other sites

 

 

 

ஸ்பைக் லீ மூன்றாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டு இம்முறை ஆஸ்கரையும் வென்றிருக்கிறார்.அவரின் ““BlacKkKlansman”க்கு, மூலத்திலிருந்து தழுவியமைக்கப்பட்ட திரைக்கதைக்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

லீ இவ்விருதை பெறுவதற்காக துள்ளலுடன் மேடைக்கு வந்தது வெறும் வெற்றிக்களிப்பு என்ற அனுமானத்தை உடைத்தெறிந்தது அவரின் பேச்சு. உணர்வெழுந்த நிலையில் பேசினாலும் அவரின் உரையின் சாரம் அவரின் அரசியிலிருந்து எள்ளளவும் மாறாமாலிருந்து.ஒரு படைப்பாளியின் அரசியல் சார்பே அவனது படைப்பின் கருவை நிர்ணயம் செய்வதோடில்லாமல் அதற்கான பரந்துபட்ட தேவையையும் நிர்மாணித்துக்கொள்கிறது.

இனி ஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரை,
………………..

உங்களின் மணிக்கடிகாரத்தை சற்றுநேரத்திற்கு நிறுத்திவைத்துக்கொள்ளுங்கள்.

இன்றைய நாளுக்கான பதம் “முரண்”.

நாள் 24.

மாதம் இவ்வாண்டிற்கான குறைந்தபட்ச நாட்களைக் கொண்ட பிப்ரவரி என்பதோடில்லாமல் “கறுப்பின வரலாற்று மாதமும்” ஆகும்.

ஆண்டு 2019.

ஆண்டு 1619.

வரலாறு.

அவளின் கதை.

1619.

2019.

400 ஆண்டுகள்.

நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு எமது மூதாதையர் எங்களின் அன்னை ஆப்பிரிக்க தேசத்திலிருந்து கடத்தப்பட்டு விர்ஜீனிய மாகாணத்திலிருக்கும் ஜேம்ஸ்டவுனுக்கு அடிமைகளாக கொணரப்பட்டனர். அவர்கள் சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து காரிருள் வரைக்கும் கடுமையான உடலுழைப்பிற்கு ஆளாக்கப்பட்டனர். நூறு வயது யுவதியான எனது தாய்வழி பாட்டி [சற்று குறைவான ஒலியில் ] அவளின் தாய் அடிமையாக இருந்த நிலையிலும் கூட ஸ்பெல்மென் கல்லூரியில் படித்து பட்டதாரியாகவும் ஆனாள். அவளின் ஐம்பது ஆண்டுகால அரசாங்க உதவித்தொகை சேமிப்பிலிருந்து, ” ஸ்பைக்கீ ப்ப்பூ” என்று செல்லமாக அழைக்கும் அவளின் முதல் பேரனாகிய என்னை மூர்ஹவுஸ் கல்லூரி மற்றும் NYUவில் திரைப்பட பட்டயமும் முடிக்கச் செய்தார்.

இவ்விரவில் இவ்வுலகின் முன்னால், இனப்படுகொலையால் கொன்றழிக்கப்பட்ட பூர்வகுடிகளுடன் இணைந்து இன்று இந்த நாடு இவ்வளவு புகழுடன் திகழ அடித்தளமைத்து கொடுத்து எனது மூதாதையர்களை புகழ்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.அன்பையும் ஞானத்தையும் மீட்டெடுத்த நாம் மனிதநேயத்தையும் மீட்டெடுப்போம்.அதுவொரு ஆகச்சிறந்த தருணமாகத் திகழும். எதிர்வரும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் அனைவரும் வரலாற்றின் சரியான பக்கத்தில் ஒன்றுதிரள்வோம் அது வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையேயான தார்மீக தேர்வாக இருக்கட்டும். வாருங்கள், சரியான முடிவிற்கான நமது தேர்வினை பறைசாற்ற ஏனென்றால் எனது இந்நிலைப்பாட்டினை அங்கு கொண்டு செல்வதே எனது தற்போதைய ஆகமுக்கிய பணி ஆகும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.