Jump to content

பாகிஸ்த்தான் எல்லைக்குள் குண்டுவீசச் சென்று எதிர்த்தாக்குதலில் பயந்தோடிய இந்திய விமானங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆக்கிரமிப்புக் காஷ்மீர்ப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புப் படையினைச் சேர்ந்த 40 வீரர்கள் போராளுகளின் தாக்குதலுல் கொல்லப்பட்டதற்கு இந்தியா பாக்கிஸ்த்தானைக் குற்ற்ஞ்சாட்டி வந்ததுடன், தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சொல்லிவந்தது.

அதன் அடிப்படையில் இன்று போராளிகளின் முகாம்கள் என்று தாம் கருதும் பகுதிகள் மீது குண்டுவீச இந்திய விமானப்படை பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் நுளைந்தபோது, எதிர்பார்த்திருந்த பாக்கிஸ்த்தான் விமானப்படை எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.

இதனைச் சற்றும் எதிர்பாராத இந்திய விமானங்கள் வீசச் சென்ற குண்டுகளை வெறும் நிலத்தில் வீசிவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று இந்திய எல்லைக்குள் ஓடி வந்திருக்கின்றன.

 

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

இந்திய ஆக்கிரமிப்புக் காஷ்மீர்ப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புப் படையினைச் சேர்ந்த 40 வீரர்கள் போராளுகளின் தாக்குதலுல் கொல்லப்பட்டதற்கு இந்தியா பாக்கிஸ்த்தானைக் குற்ற்ஞ்சாட்டி வந்ததுடன், தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சொல்லிவந்தது.

அதன் அடிப்படையில் இன்று போராளிகளின் முகாம்கள் என்று தாம் கருதும் பகுதிகள் மீது குண்டுவீச இந்திய விமானப்படை பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் நுளைந்தபோது, எதிர்பார்த்திருந்த பாக்கிஸ்த்தான் விமானப்படை எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.

இதனைச் சற்றும் எதிர்பாராத இந்திய விமானங்கள் வீசச் சென்ற குண்டுகளை வெறும் நிலத்தில் வீசிவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று இந்திய எல்லைக்குள் ஓடி வந்திருக்கின்றன.

 

விதண்டாவாதமாக கேட்கவில்லை.

ஆனால், நீங்கள் சொல்வதற்கு எதாவது இரண்டாம், மூன்றாம் படிமுறை ஆதாரம் இணையத்தில் இருக்கிறதா?

எனது கேள்விக்கான காரணம், கிந்தியா தாக்குதலை நடத்துவதற்கான அறிகுறிகுறிகள் வெளிப்படையாகவே இருந்தது.

எனவே, சீன ரேடார்களையும், விமான எதிர்ப்பு ஆயுதங்களையும்  பரிசோதிபதற்கான களமாக சீனா மற்றும் பாகிஸ்தான் முயன்று இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kadancha said:

விதண்டாவாதமாக கேட்கவில்லை.

ஆனால், நீங்கள் சொல்வதற்கு எதாவது இரண்டாம், மூன்றாம் படிமுறை ஆதாரம் இணையத்தில் இருக்கிறதா?

எனது கேள்விக்கான காரணம், கிந்தியா தாக்குதலை நடத்துவதற்கான அறிகுறிகுறிகள் வெளிப்படையாகவே இருந்தது.

எனவே, சீன ரேடார்களையும், விமான எதிர்ப்பு ஆயுதங்களையும்  பரிசோதிபதற்கான களமாக சீனா மற்றும் பாகிஸ்தான் முயன்று இருக்கலாம். 

பி பி ஸி யில் இந்தத் தாக்குதல் தொடர்பாக வந்த செய்தியில் பாக்கிஸ்த்தான் தளபதியொருவரின் கூற்று இது. 

Link to comment
Share on other sites

38 minutes ago, ragunathan said:

பி பி ஸி யில் இந்தத் தாக்குதல் தொடர்பாக வந்த செய்தியில் பாக்கிஸ்த்தான் தளபதியொருவரின் கூற்று இது. 

Bogus Broadcasting Corporation News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமானப்படையில் பல்வேறு அதிநவீன விமானங்கள் இருக்கும்போது 35 ஆண்டுகள் பழமையான மிராஜ் போர் விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த செய்தியை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-47368594

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்திய விமானப்படையில் பல்வேறு அதிநவீன விமானங்கள் இருக்கும்போது 35 ஆண்டுகள் பழமையான மிராஜ் போர் விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த செய்தியை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

இதுவும் எனது சந்தேகத்திற்கு ஓர் காரணம்.

கடந்த வருடத்திலேயே கிந்தியா ரஷ்யாவிடம் இருந்து sukhoi-35 போர் விமானங்களை வாங்கியது, அமெரிக்காவின் மிகுந்த ஏமாற்றத்திலும், அதிருப்தியின் மத்தியிலும்.

ரஷ்யா sukhoi வகை போர் விமானங்களை  சீனாவிற்கும் விற்றுள்ளது.

இதுவே கிந்தியாவின்  தாக்குதலுக்கு  மிராஜ் பாவிக்கப்பட்ட காரணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், சீனவிடம் sukhoi  வகை போர் விமானங்களை துல்லியமாக  track செய்வதற்கான ரேடார்களும், மற்றும் சுவடுகளும் இருக்கும் என்று கிந்தியா சந்தேகப்பட்டிருக்கும்.
 

Link to comment
Share on other sites

ஹிந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கடும் கண்டனத்துக்குரியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, eyeglasses and text

நீங்க செத்துட்டீங்க...  🤪 😝

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 4 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு இப்படிச் சொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை. குறைந்தது ஒரு ஹிந்திய விமானத்தையாவது சுட்டு வீழ்த்தி விமானியையும் கொன்று விட்டு இப்படிச் சொல்லி இருந்தால்.. பாகிஸ்தானை இந்த புளுகு குறித்து கொஞ்சம் என்றாலும் நம்பலாம்.

ஹிந்தியாவும்.. கதை விடுகுது.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. இந்த இரண்டு பகையாளிகளும் தமிழீழ மண்ணில்.. தமிழீழ இராணுவத்தை அடித்து அழிக்க கைகோர்த்து நின்றது தான்.

அந்த வகையில்.. இரண்டும் மாறி மாறி புளுகியோ.. மோதியோ அழிந்து தொலைந்தால்.. இவர்களால் அழிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மக்களின் மண்ணின் நினைவாக கொஞ்சமாவது ஆறுதல் அடையக் கூடியதாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா தன்  வாயாலேயே தாக்குதலை மலினப்படுத்தி  விட்டது.

அழிவுகளை மதிப்பீடு செய்து உறுதிப்படுத்துவதற்கு கால அவகாசமும், பல்வேறுபட்ட புலனாய்வு தகவ்களும் தேவை. 

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

 

 

இந்தியன் பொய்களை அவிழ்த்திவிட்டு ஏமாந்த இந்தியர்களை ஏமாற்றுவது புதிதில்லை! 

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளான இந்திய அரச பயங்கரவாதிகள் இது போன்ற பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு, உப்பு சத்தியாகிரகம் போன்ற அகிம்சை வழிகளை கையாள வேண்டும்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

இதுவும் எனது சந்தேகத்திற்கு ஓர் காரணம்.

கடந்த வருடத்திலேயே கிந்தியா ரஷ்யாவிடம் இருந்து sukhoi-35 போர் விமானங்களை வாங்கியது, அமெரிக்காவின் மிகுந்த ஏமாற்றத்திலும், அதிருப்தியின் மத்தியிலும்.

ரஷ்யா sukhoi வகை போர் விமானங்களை  சீனாவிற்கும் விற்றுள்ளது.

இதுவே கிந்தியாவின்  தாக்குதலுக்கு  மிராஜ் பாவிக்கப்பட்ட காரணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், சீனவிடம் sukhoi  வகை போர் விமானங்களை துல்லியமாக  track செய்வதற்கான ரேடார்களும், மற்றும் சுவடுகளும் இருக்கும் என்று கிந்தியா சந்தேகப்பட்டிருக்கும்.
 

சுக்கோய் விமானங்கள ராடரில் கண்டறிய முடியுமெனின் மிராஜ் 2000 கண்டறிய ராடரால் முடியாதா?
சி.ஐ.ஏ தான் துல்லியமான புலனாய்வு தகவல்களை வழங்கியதாக பரபரப்பு ரிசி சொல்றார்!
எனக்கென்னமோ த.வி.பு பாணியில் தாழ்வாக பறந்து ராடரில் சிக்காமல் தாக்கியதாக படுகிறது, உண்மையை யாமறியோம் பராபரமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 குண்டுகள் போதும்; இந்தியா நம்மை இல்லாமல் ஆக்கிவிடும்' - பாகிஸ்தானை எச்சரிக்கும் முஷாரப் !

253.jpg

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஊடுவிய இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 வகை போர் ரகத்தின் 20 விமானங்கள் ஆறு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

இந்த தாக்குதலில் மசூத் அசாரின் மச்சானும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை நடத்தி வந்தவருமான யூசுஃப் அசார் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் அமீரகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அதில், ``இந்தியா-பாகிஸ்தான் உறவு தற்போதுள்ள சூழ்நிலையில் மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறாது என நினைக்கிறேன். இந்தியா மீது ஒரு அணு குண்டை வீசி தாக்குதல் நடத்தினால், இந்தியா திருப்பி 20 குண்டுகளை வீசி பாகிஸ்தானையே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். அதற்கான வலிமை இந்தியாவிடம் இருக்கிறது.

இந்தியாவை வெற்றிபெற வேண்டுமானால் ஒரே வழிதான். முதலில் நாம் தான் தாக்க வேண்டும். அதுவும் எடுத்தவுடனேயே 50 அணுகுண்டுகளை வீசி தாக்கிவிட வேண்டும். அப்படி பாகிஸ்தானால் செய்ய முடியுமா?" எனக் கூறினார். முஷாரப் இப்படி கூறிய அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thesubeditor.com/news/world/11085-it-pakistan-attacks--india-could-finish-us-with-20-nuclear-bombs-says-musharraf.html

டிஸ்கி :

என்னை கேட்டால் உலகத்திலேயே பெரும் கஞ்சமான ஆசாமி முசாரப்தான் .. அதென்ன கொசுறு 50 ..? மொத்தமாக 100 , 200 சொல்லப்படாதா.. ? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

சுக்கோய் விமானங்கள ராடரில் கண்டறிய முடியுமெனின் மிராஜ் 2000 கண்டறிய ராடரால் முடியாதா?

முடியும், ஆனால் மிகுந்த நேரம் வேண்டும், ஏனெனில் இந்த விமானங்கள் super sonic.

அதனால், sukhoi யின் எல்லாவிதமான சுவடுகளை சீனாவிடம் இருபதத்திற்கான வாய்ப்புண்டு.

mirage இன் சுவடுகள் சீனாவிடம் இருப்பதற்கான வைப்புக்குள் குறைவு என்பதுடன், கிந்தியா மிராஜ் ஐ upgrade செய்திருக்கிறது.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

பாகிஸ்தானுக்கு இப்படிச் சொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை. குறைந்தது ஒரு ஹிந்திய விமானத்தையாவது சுட்டு வீழ்த்தி விமானியையும் கொன்று விட்டு இப்படிச் சொல்லி இருந்தால்.. பாகிஸ்தானை இந்த புளுகு குறித்து கொஞ்சம் என்றாலும் நம்பலாம்.

ஹிந்தியாவும்.. கதை விடுகுது.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. இந்த இரண்டு பகையாளிகளும் தமிழீழ மண்ணில்.. தமிழீழ இராணுவத்தை அடித்து அழிக்க கைகோர்த்து நின்றது தான்.

அந்த வகையில்.. இரண்டும் மாறி மாறி புளுகியோ.. மோதியோ அழிந்து தொலைந்தால்.. இவர்களால் அழிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மக்களின் மண்ணின் நினைவாக கொஞ்சமாவது ஆறுதல் அடையக் கூடியதாக இருக்கும். 

இரண்டு பேரும் எங்களுக்கு குத்தினவையள் தான்.....இருந்தாலும் கிந்தியா சீர்குலையிறதை கண்குளிர பாக்கோணுமெண்ட அவா  எக்கச்சக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இரண்டு பேரும் எங்களுக்கு குத்தினவையள் தான்.....இருந்தாலும் கிந்தியா சீர்குலையிறதை கண்குளிர பாக்கோணுமெண்ட அவா  எக்கச்சக்கம்

இந்த சந்தர்ப்பத்தை பாவித்து, கிந்தியவுடன் சிங்களத்தை பிணைத்த மலையாளிகள், ராம் போன்ற பிராமண கூட்டங்களை கிந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மற்றும் ஆட்சியாளர் வட்டங்களில் சந்தேக பார்வை வர வைக்கும் வண்ணம் தமிழ்நாடு மற்றும் சில ஆங்கில ஊடகங்களில் கருத்துரையும், விவாதமும் ஏற்படுமாறு எவராவது முயன்று பார்க்கலாம்.

ஹிந்தியா இணையதள பத்திரிகை  விமர்சனத்தில்  சாதாரண கருத்தாகவே எழுதலாம்.

உணர்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, இது உடனடியாக பயன் தராவிட்டாலும், ஹிந்தியை நிலைப்பாட்டை சற்று மாற்றுவதத்திற்கு உதவக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவது மே பத்தொன்பது நெருங்குகிறது அனேகமாக டெல்கியில்  பாகிஸ்தானிய அணு உலையின் அரிசி வெந்தால்  பொங்கினால் மகிழ்சி

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

இரண்டு பேரும் எங்களுக்கு குத்தினவையள் தான்.....இருந்தாலும் கிந்தியா சீர்குலையிறதை கண்குளிர பாக்கோணுமெண்ட அவா  எக்கச்சக்கம்

இந்தியா போரில் தோற்றால், தமிழினம் முற்றாக தோற்றுவிடும்.

இந்தியாவின் உதவியுடன்தான், எமக்கு சமஷ்டி கிடைக்க போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

பத்தாவது மே பத்தொன்பது நெருங்குகிறது அனேகமாக டெல்கியில்  பாகிஸ்தானிய அணு உலையின் அரிசி வெந்தால்  பொங்கினால் மகிழ்சி

இதெல்லாம் தேர்தல் நேர சடுகுடுங்க ஒன்றும் நடக்காது இரண்டு  விமானி பிடிபட்டவுடன் சண்டை வேண்டாம் என்று இரண்டு பக்கமும் அலறுகின்றனர் .

3 minutes ago, thulasie said:

இந்தியா போரில் தோற்றால், தமிழினம் முற்றாக தோற்றுவிடும்.

இந்தியாவின் உதவியுடன்தான், எமக்கு சமஷ்டி கிடைக்க போகுது 

நீங்கள் பகிடிக்கு எழுதுவது போல் உள்ளது  எங்கள் விடயத்தில் இந்தியா பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் .

Link to comment
Share on other sites

6 minutes ago, பெருமாள் said:

 .

நீங்கள் பகிடிக்கு எழுதுவது போல் உள்ளது  எங்கள் விடயத்தில் இந்தியா பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் .

சுமந்திரனின் சமஷ்டி, ஏகிய ராஜ்ய எல்லாம் இந்தியாவிற்குத்தான் தெரியும்.

பாகிஸ்தானுக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

சுமந்திரனின் சமஷ்டி, ஏகிய ராஜ்ய எல்லாம் இந்தியாவிற்குத்தான் தெரியும்.

பாகிஸ்தானுக்கு தெரியாது.

நல்ல அரசியல் அறிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

களத்துல எல்லாம் ஆன்ரி இந்தியனா இருக்கினம் .. 🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.