Jump to content

இந்திய விமானப்படை தாக்குதல்: “இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உண்டு” - LIVE


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய விமானப்படை தாக்குதல்: “இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உண்டு” - LIVE
பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

17:00: இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கட்டுப்பாட்டு எல்லை பகுதி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமைகளும் உண்டென பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறி உள்ளார்.

சூழல் மிகவும் பதற்றமாக உள்ளதாகவும், அதனை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

15.30: இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானபடைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் இம்ரான்கான்.

எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும்படியும் படைகளை வலியுறுத்தி உள்ளார் இம்ரான் கான்.

14:40: தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் சொல்வதென்ன?

''அதிகாலை 3 மணியளவில், நாங்கள் ஒரு பயங்கரமான சத்தத்தை கேட்டோம். பூமி அதிர்வதுபோல இருந்தது. அதன்பிறகு எங்களால் தூங்கமுடியவில்லை.அடுத்த 5-10 நிமிடங்களில், அது ஒரு வெடிச்சத்தம் என்று தெரியவந்தது. என் உறவினர் அங்கு வசிக்கிறார். அந்த இடத்தின் பெயர் கங்கட். என் உறவினரின் வீடு சேதமடைந்தது; ஒருவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. என உறவினர்கள், அங்கு விமானங்கள் பறக்கும் சத்தம் கேட்டதாகவும், அதன்பிறகு வெடி வெடித்ததாகவும் கூறுகின்றனர்."என்று ஜப்பா பகுதியை சேர்ந்த விவசாயி பிபிசியின் எம்.ஏ.ஜேரலிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க: இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன? - BBC EXCLUSIVE

13:40: இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?

பாகிஸ்தான்

இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறும் பாலகோட் என்னும் பெயரில் இருநாடுகளுக்கிடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி மற்றும் பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதி என இருவேறு இடங்கள் உள்ளதாக குழப்பம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பாலகோட் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜுபைர் கானை பிபிசி உருது தொடர்பு கொண்டு பேசியபோது, "பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட மன்ஷெரா மாவட்டத்தை சேர்ந்த மக்கள், இன்று அதிகாலை சுமார் மூன்று முதல் நான்கு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வெடிச்சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த தாக்குதல் குறைந்தது நான்கு மணிநேரம் மன்ஷெரா மற்றும் அபோதாபாத்துக்கு அருகிலுள்ள பாலகோட்டில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைM.A.JARRAL

மேலும், தாக்குதல் நடந்ததாக கூறப்படும் ஜப்பா, கார்ஹி ஹபிபுல்லா பகுதிகளை சேர்ந்த மக்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அங்கு ஏற்கனவே இருந்த பாதுகாப்பு படைகளால் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பாலகோட் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், இந்தியா தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

12:30: நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

11:55: "இன்று அதிகாலை, பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதின் மிகப்பெரிய பயற்சி முகாமின் மீது இந்தியா தாக்குதல்களை தொடுத்தது." என்று இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.

பிபிசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், "இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த பல பயங்கரவாதிகள், மூத்த கமாண்டர்கள், பயிற்சியாளர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டனர். இந்த முகாம், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உஸ்தாத் கெளரியால் தலைமை வகிக்கப்பட்டது." என்றும் தெரிவித்தார்.

"ஜெய்ஷ் இ முகமது குறித்து பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து அதனை மறுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எந்தவித திடமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.

11.40: ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மேலும் பல தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது என இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.

என்ன சொல்கிறது பாகிஸ்தான்?

"பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடுத்து வருவதாக இதற்கு முன்பு கூட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அவற்றை நாங்கள் மறுத்துவிட்டோம். இந்நிலையில், உண்மையிலேயே இந்த தாக்குதலை இந்தியா நடத்தியிருக்குமானால், அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய கூற்றுக்கு நேரெதிராக இருக்கும்" என்று பிபிசியிடம் பேசிய இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையாளர் அஷ்ரப் ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார்.

"ஏனெனில், மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இராஜ்ஜிய முறையை கடைபிடித்து பாகிஸ்தான் விவகாரத்தை இந்தியா அணுகும் என்றும், இருநாட்டு பிரதமர்களும் இணைந்து கல்வியறிவின்மை, வறுமைக்கு எதிராக போராடுவோம் என்று தெரிவித்திருந்தார்" என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த எழுத்தாளரும், பாதுகாப்பு ஆய்வாளருமான ஆயிஷா சித்திக், "இந்தியா நடத்தியதாக கூறப்படும் இந்த தாக்குதல் உண்மையானதாக இருக்குமானால், இது இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியமான கட்டம். பாலகோட் பகுதியில் இந்த தாக்குதலை இந்தியா நடத்தியதாக கூறப்பட்டாலும், இதில் பாகிஸ்தான் தரப்பில் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பாகிஸ்தானின் பாதுகாப்புறை கூறியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை

11:20 - பாலகோட்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். குன்ஹார் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், மலைகளை கொண்டது. கோடை காலங்களில் மிகவும் ரம்யமான வானிலையை கொண்ட பகுதியாக இது அறியப்படுகிறது.

2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த பகுதி பெரிய பாதிப்பை சந்தித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகிய இந்த நில நடுக்கத்தில், சுமார் 40ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ-முகம்மதின் நோக்கம் என்ன?

இந்த பகுதி பழைய சூழலுக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகின. இப்பகுதியின் மறு சீரமைப்பிற்காக சௌதி அரேபிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகள் செய்துள்ளது.

சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாகவும் பாலகோட் உள்ளது.

11:07 - "பஞ்சாபின் அம்பாலா விமானப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானங்கள், சர்வதேச எல்லையை தாண்டாமல் குண்டுகளை வீசியது. மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்ப வந்தன. சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது." என்று பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித்திடம் இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய துருப்புகளும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நீண்டகால நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு இருக்கும் என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை (லயின் ஆஃப் கண்ட்ரோல்) கடந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

"இந்திய விமானப் படை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்றது. ஆனால், பாகிஸ்தான் துரிதமாக செயல்பட்டுவிட்டது" என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

"இந்திய விமானப்படை முசாஃபராபாத் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்றது. ஆனால், பாகிஸ்தான் வெடிகுண்டுகளை வீசி தக்க பதிலடி கொடுத்து இந்திய விமானப் படையை திருப்பி அனுப்பியது" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை விமானங்களை துரிதமாக தாக்கியதில் தப்ப முயன்ற இந்திய விமானப் படை விமானங்கள், பாலகோட் பகுதியில் விழுந்தது என அவர் டிவிட்டரில் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

#balakotபடத்தின் காப்புரிமைTWITTER / MAJ GEN ASIF GHAFOOR

இதில் எந்தவித உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியா, பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியை சுற்றி அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை, இன்று அதிகாலை வான் வழி தாக்குதலின் மூலம் இந்திய விமானப்படை முழுவதுமாக அழித்துள்ளது" என்று மத்திய விவசாயம் மற்றும் விசாயிகள் நலத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெக்வாட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய விமானப்படையின் விமானிகளை வணங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படை விமானிகளின் தைரியத்துக்கு தலை வணங்குகிறேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல்

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியானார்கள்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

ஆனால், பாகிஸ்தான் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

https://www.bbc.com/tamil/india-47367118

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் சும்மா வாய் பேச்சு தான் போல இருக்கு 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Sabesh said:

இவங்கள் சும்மா வாய் பேச்சு தான் போல இருக்கு 🤔 

பாகிஸ்தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D0VO9goWwAEPEJ5.jpg

இந்திய விமானிகள் பாக்கிஸ்தான் பகுதியில்  குண்டு வீசி விட்டு 300 பேர் கொல்லபட்ட கணக்கு  மேலே படமாக .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sabesh said:

இவங்கள் சும்மா வாய் பேச்சு தான் போல இருக்கு 🤔 

அது தானே

நிறைய நிறைய  எதிர் பார்க்கின்றோம்

எந்தப்பகுதியில்  அதிக அழிவோ

அனைத்தும்  சேர்த்து   சந்தோசம்

நாசமாப்போவார்

எவ்வளவு  எதிரிகளாக  இருந்தும்  சேர்ந்து நின்று  எம்மை அழித்தவர்கள் அல்லவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:
15.30: இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான்

இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானபடைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் இம்ரான்கான்.

எங்களை... காக்க வைக்காமல்,   கெதியாக... சண்டையை ஆரம்பிக்கும் படி, 
இரு தரப்பையும் கேட்டுக் கொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

D0VO9goWwAEPEJ5.jpg

இந்திய விமானிகள் பாக்கிஸ்தான் பகுதியில்  குண்டு வீசி விட்டு 300 பேர் கொல்லபட்ட கணக்கு  மேலே படமாக .

தோழர் , புளியம் மரம் போல கிடக்கு .. லேட்டஸ்ட் ரெஃனாலஜி குண்டு போட்டு புளியம்பழம் உளுக்கினமா ..? 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
    • சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான்.  சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.